திங்கள், செப்டம்பர் 10, 2012

நாம ராமாயணம் யுத்த காண்டம்

யுத்த காண்டம் 

இராவண வதத்திற்கு புறப்பட்ட ராம்
வானரர் சூழ வலம் வந்த ராம்
கடலினை வழிவிட செய்தவர் ராம்
வீடணர்கபயம் அளித்தவர் ராம்
கற்களில் சேது அமைத்தவர் ராம்
கும்பகர்ணன் தலை துண்டித்த ராம்
ராக்ஷஸ சேனையை அழித்தவர் ராம்
அஹிராவணனை வதம் செய்த ராம்
பத்துத்தலை இராவணனை கொன்றவர் ராம்
அயன் அரன் தேவர்கள் வணங்கிய ராம்
வானில் தயரதரை கண்டவர் ராம்
சீதையை கண்டு மகிழ்ந்த ராம்
வீடணனை அரசனாய் நியமித்த ராம்
புஷ்பக விமானத்தில் ஏறிய  ராம்
பரத்வாஜ முனிவர் வணங்கிய ராம்
பரதன் உள்ளத்தை மகிழ்வித்த ராம்
சாகேத புரிக்கு அணிகலன் ராம்
அனைவரின் ஆசியை பெற்றவர் ராம்
மணிநிறை அரியணை  அமர்ந்தவர் ராம்
அழகிய மணிமுடி அணிந்தவர் ராம்
புவிமிசைஅரசரில் உயர்ந்தவர் ராம்
வீடணர்க்கு ரங்கனை அளித்தவர் ராம்
வானர குலத்திற்கு அருளிய ராம்
அனைத்து உயிரையும் காத்தவர் ராம்
உலகம் அனைத்தையும் ஆண்டவர் ராம்

ராம ராம ஜெய ராஜாராம்  
ராம ராம ஜெய சீதாராம் !!!




திங்கள், ஆகஸ்ட் 27, 2012

நாம ராமாயணம் சுந்தர காண்டம்

சுந்தர காண்டம்

ஹனுமான் அனுதினம் துதிசெய்த ராம்
(ஹனுமானின்) பாதையின் தடங்கலை விலக்கிய  ராம்
சீதையின் உயிரை காத்தவர் ராம்
கொடிய இராவணனை தூற்றிய ராம்
அடியவன் அனுமனை போற்றிய ராம்
சீதைசொன்ன காக்கைகதை கேட்டவர் ராம்
சூடாமணியை கண்டவர் ராம்
ஹனுமானின் சொல்லினால் தேறிய  ராம்

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம் !!!

நாம ராமாயணம் - கிஷ்கிந்தா காண்டம்

கிஷ்கிந்தா காண்டம் 


ஹனுமன் சேவையை ஏற்றவர் ராம் 
சுக்ரீவன்  விரும்பியதை அளித்தவர் ராம் 
கர்வம் கொண்ட வாலியை வீழ்த்திய ராம் 
வானர தூதரை அனுப்பிய ராம் 
இலக்குவன் துணையோடு இருந்தவர் ராம் 

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதா ராம் !!!

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

நாம ராமாயணம் - ஆரண்ய காண்டம்

ஆரண்ய காண்டம்

தண்டக வாசிகளை தூய்மை செய்தவர் ராம் 
கொடிய விராதனை வதைத்தவர் ராம் 
சரபங்க சுதீக்ஷ்ணர் தொழுதிட்ட ராம் 
அகத்தியர் அருளை பெற்றவர் ராம் 
கழுகின் அரசர் வணங்கிய ராம் 
பஞ்சவடியினில் வசித்தவர் ராம் 
சூர்பனகையை வருத்திய ராம் 
கரதூஷனரை கொன்றவர் ராம் 
சீதைக்கு மானை தேடிச்சென்ற ராம் 
மாரீசனை அம்பால் கொன்றவர் ராம் 
சீதையை காணாது தேடிய ராம் 
ஜடாயு மோக்ஷம் அருளிய ராம் 
சபரி தந்த கனியுண்ட ராம் 
கபந்தனின் தோள்களை துணித்தவர் ராம்!!

ராம ராம ஜெய ராஜாராம் 
ராம ராம ஜெய சீதாராம் !!!


புதன், ஜூன் 20, 2012

நாம ராமாயணம் - அயோத்யா காண்டம்

அயோத்யா காண்டம்

எண்ணற்ற குணங்களின் உறைவிடம் ராம்
பூமியின் திருமகள் மனங்கவர் ராம்
குளிர்மதி திருமுகம் உடையவர் ராம்
தந்தையின் சொல்கேட்டு வனம்சென்ற ராம்
குஹனை தோழனாய் கொண்டவர் ராம்
(குஹனால்) திருவடி கழுவ பெற்றவர் ராம்
பாரத்வாஜருக்கின்பம் அளித்திட்ட ராம்
சித்ரகூட மலையில் வசித்தவர் ராம்
தயரதர் அனுதினம் நினைத்திட்ட ராம்
பரதனும் வேண்டி வணங்கிய ராம்
தந்தைக்கு ஈமக்கடன் செய்திட்ட ராம்
பாதுகை பரதனுக்கு அளித்தவர் ராம் !!

ராம ராம ஜெய ராஜாராம் 
ராம ராம ஜெய சீதாராம்!!

வியாழன், ஜூன் 07, 2012

நாம இராமாயணம் - பால காண்டம்

ஹிந்துவாக, ஏன் மனிதனாக, பிறந்த அனைவரும் அறிய வேண்டிய பொக்கிஷம் ஸ்ரீமத் இராமாயணம். இராமாயண கதையை சுருக்கமாக சம்ஸ்க்ருத செய்யுள் வடிவில் கூறுவது நாம இராமாயணம். இதில் ஒவ்வொரு பதமும் 'ராம்' 'ராம்' என்று முடியும். இதை சொல்லும் பொழுதே பல முறை நாம் ராம நாமத்தை உச்சரித்து அதன் மூலம் பாவங்களை விலக பெறுவோம். அந்த இனிய நாம இராமாயணத்தை தமிழ்படுத்த நான் எடுத்த எளிய முயற்சியே இந்த பதிவு.

குறைகள், பிழைகள்  இருப்பின் பொறுத்து மன்னிக்க வேண்டுகிறேன்.

பால காண்டம் 
தூய பரபிரம்ம வடிவினர் ராம்
கால ரூபமாய் விளங்கிடும் ராம்
அரவினில் இனிதுயில் கொண்டவர் ராம்
பிரம்மாதி தேவரும் வணங்கிய ராம்
கதிரவன் குலத்தினில் உதித்தவர் ராம்
தசரதர் மகவாய் பிறந்தவர் ராம்
கோசலைக்கின்பம் வளர்த்தவர் ராம்
விச்வாமித்ரரின் ப்ரியமான ராம்
கொடிய தாடகையை வதைத்திட்ட ராம்
மாரீச அரக்கரை துரத்திய ராம்
கௌசிக வேள்வியை காத்தவர் ராம்
அகலிகை சாபம் போக்கிய ராம்
கௌதம முனிவர் பூஜித்த ராம்
தேவரும் முனிவரும் போற்றிய ராம்
கரையேற்றும் திருவடி உடையவர் ராம்
மிதிலை மக்களை மகிழ்வித்த ராம்
ஜனக மன்னரின் மனங்கவர் ராம்
பரம சிவ தனுசை முறித்தவர் ராம்
சீதையின் மாலையை அணிந்தவர் ராம்
திருக்கல்யாண வைபவம் கண்டவர் ராம்
பரசுராமரை வென்றவர் ராம்
அயோத்தி நாட்டை காத்தவர் ராம்

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்!!


ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

ஸ்ரீ ராம ஜெயம்...

ராம நாமம் தாரக மந்திரம். இறக்கும் தருவாயில் இருக்கும் உயிர்களையும் மீட்க வல்ல நாமம். காசியில் இறந்தால் முக்தி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏன்? காசியில் இறக்கும் ஜீவர்களின் காதில் அந்த காசி விஸ்வநாதரே ராம நாமத்தை ஓதி அவர்களை முக்தி மார்கத்தின் வழி அனுப்புகிறார். 

இன்று ராம நவமி (31-Mar-12). இந்த நன்னாளில் ராம நாம மகிமையை பற்றி மகான்கள், ஆச்சார்யர்கள் மற்றும் ஆன்றோர்கள் கூறியுள்ளதை படித்து மகிழ்வோம்.

"கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?" - திருவாய்மொழி 7.5.1 

கம்ப இராமாயணம் பால காண்டம் திருவவதாரப் படலம்:
கரா மலையத் தளர் கை கரி எய்த்தே 
'அரா அணையில் துயில்வோய்' என அந்நாள்
விராவி அளித்து அருள் மெய்ப் பொருளுக்கே
'இராமன்' என்று பெயர் ஈர்ந்தனன் அன்றே

கம்ப இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் வாலி வதை படலம்:
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, "இராமன்" என்னும்
செம்மை சேர் நாமம் ...

சங்கீத மூர்த்தி மகான் தியாகராஜர்:
நிதி சால சுகமா , ராமுனி சந்நிதி சேவ சுகமா?
நிஜமுக பல்கு மனஸா....

ஒ என் மனமே! உண்மையை கூறுவாய். சுகம் எதில் உள்ளது? பணத்திலும் நவநிதியிலுமா அல்லது இராமனின் சந்நிதியில் சேவை செய்வதிலா?

வால்மீகி ராமாயணம் பால காண்டம் 18வது  ஸர்கம் - இராமன் திருவவதாரம்
"தத: ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ
நக்ஷத்ரே அதிதி தைவத்யே ஸ்வ உச்ச சன்ஸ்தேஷு பஞ்சஷு 
க்ரஹெஷு கர்கடே லக்னே வாக்பதே இந்துனா ஸஹ 
ப்ரோத்யமானே ஜகன்நாதம் சர்வலோக நமஸ்க்ருதம் 
கௌசல்யா அஜனயத் இராமம் ஸர்வ லக்ஷன சம்யுதம்" 

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண க்ரமத்தில் வரும் ஸ்லோகம்:
ஈஸ்வர உவாச:
 ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே

வால்மீகி ராமாயணம் பால காண்டம் முதல் ஸர்கம்:
வால்மீகி மகரிஷி நாரதரை பார்த்து பல கேள்விகள் கேட்கிறார். யார் உத்தமன்? யார் உண்மை, தர்மத்தின் வழி நடந்தவர்? குணவான் யார்? நன்னடத்தை கொண்டவர் யார்? வித்வான் யார்? சாமர்த்தியசாலி யார்? கோபத்தை அடக்கியவர் யார்? பொறாமை இல்லாதவர் யார்? தேவர்களும் அஞ்சும்படி வீரம் கொண்டவர் யார்?... இந்த அணைத்து கேள்விகளுக்கும் நாரதர் அளிக்கும் விடை, "நீங்கள் கேட்கும் இந்த குணங்கள் அனைத்தும் ஒருவரிடம் இருப்பது என்பது துர்லபமானது. ஆனாலும் இவை அனைத்தையும் கொண்ட ஒருவரை பற்றி என் தந்தை பிரம்மாவிடம் இருந்து அறிந்துள்ளேன்"

இக்ஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனை: ஸ்ருத:
நியத ஆத்மா மஹா வீர்யோ  த்யுதிமான் த்ரிதிமான் வஷி ||
புத்திமான் நீதிமான் வாங்க்மி ஸ்ரீமான் சத்ரு நிபர்ஹன:
விபுலாம்சோ மஹா பாஹு: கம்பு க்ரீவோ மஹா ஹனு: ||
மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூட ஜத்று அரிந்தம:
ஆஜானு பாஹு: சுஷிரா: சுலலாட: சுவிக்ரம ||
ஸம ஸம விபக்தாங்க: ஸ்நிக்த வர்ண பிரதாபவான்
பீன வக்ஷ விஷாலாக்ஷோ லக்ஷ்மீவான் சுப லக்ஷண: ||
தர்மஞ: சத்ய சந்த: ச ப்ரஜாநாம் ச ஹிதே ரத:
யஷஸ்வீ ஜ்ஞான சம்பன்ன: சுசி: வஷ்ய: சமாதிமான் ||
பிரஜாபதி ஸம: ஸ்ரீமான் தாதா ரிபு நிசூதன:
ரக்ஷிதா ஜீவலோகஸ்ய தர்மஸ்ய பரி ரக்ஷிதா: ||
ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்ய ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா
வேத வேதாங்க தத்வஞ்யோ தனுர் வேதே ச நிஷ்டித: ||
ஸர்வ சாஸ்த்ரார்த்த தத்வஞ்யோ ஸ்ம்ரிதிமான் பிரதிபானவான்
சர்வலோக ப்ரிய சாது: அதீனாத்மா விசக்ஷன ||
சர்வதா அபிகத: சத்பி: சமுத்ர இவ சிந்துபி:
ஆர்ய: சர்வசம: ச ஏவ சதைவ ப்ரிய தர்ஷன: ||
ஸ ச சர்வ குணோபேத: கௌசல்யா ஆனந்த வர்தன:
சமுத்ர இவ காம்பீர்யே தைர்யேன ஹிமவான் இவ||
விஷ்ணுனா சத்ருஷோ வீர்யே சோமவத் ப்ரிய தர்ஷன:
காலாக்னி சத்ருஷ: க்ரோதே க்ஷமயா ப்ரித்வீ ஸம: ||
தனதேன ஸம: த்யாகே சத்யே தர்ம இவாபர:
தம ஏவம் குண சம்பன்னம் ராமம் சத்ய பராக்கிரமம்||

இந்த ஸ்லோகங்கள் ஸ்ரீ ராமனின் கல்யாண குணங்களை வர்ணிக்கின்றன. இவற்றிற்கு பொருள் எழுதுவதற்கு கூட எனக்கு தகுதி இல்லை. எனவே அடியவர்களை தக்க குரு மூலமாக இவற்றின் பொருளை உணர்ந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். இவற்றுள் ஒரு குணமாவது நம்மிடம் தங்கும்படி அந்த ராமபிரான் இன்று அருள் புரியட்டும்!!!