16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |
அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||
இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
141. ஓம் ப்ராஜிஶ்ணவே நம:
ப்ரகாஶ ஏகரஸத்வாத் ப்ராஜிஶ்ணு:
மாற்றமில்லாத, ஒளிவடிவானவராக இருப்பதால் பகவான் 'ப்ராஜிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
142. ஓம் போஜனாய நம:
போஜ்யரூபாதயா ப்ரக்ருதிர் மாயா போஜனம் இத்யுச்யதே
ப்ரக்ருதி என்றழைக்கப்படும் மாயையே இந்த ப்ரபஞ்சம் அனைத்திலும் எல்லாவித அனுபவிக்காத தகுந்த பொருட்களாகவும் உள்ளது. எனவே, ப்ரக்ருதி 'போஜனம்' (அனுபவிக்கப்படும் பொருள்) என்றழைக்கப்படுகிறது. பகவானே ப்ரக்ருதியின் உருவத்தில் அனைத்துப் பொருளாயும் இருப்பதால், அவர் 'போஜனம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
143. ஓம் போக்த்ரே நம:
புருஶ ரூபேண தாம் புங்க்தே இதி போக்தா
இங்கு, ப்ரக்ருதியின் வடிவில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் புருஶனின் வடிவத்தில் அனுபவிப்பவரும் பகவானே. எனவே, அவரே 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
144. ஓம் ஸஹிஶ்ணவே நம:
ஹிரண்யாக்ஷாதீன் ஸஹதே அபிபவதீதி ஸஹிஶ்ணு:
ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை) அடக்கி, வெற்றி கொள்வதால் பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
145. ஓம் ஜகதாதிஜாய நம:
ஹிரண்யகர்பரூபேண ஜகதாதாவுத்பத்யதே ஸ்வயமிதி ஜகதாதிஜ:
பகவான் தானே, இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஹிரண்யகர்பரின் வடிவில் வந்து தோன்றியதால் 'ஜகதாதிஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
146. ஓம் அனகாய நம:
அகம் ந வித்யதேSஸ்யேதி அனக:
பகவான் ப்ரக்ருதியின் வடிவில் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்கிறார்; அவரே புருஶனாக அந்தப் ப்ரக்ருதியை அனுபவிக்கிறார். ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் வந்து தோன்றுகிறார். இவ்வாறு, அனைத்துக் காரியங்களிலும் அவர் ஈடுபட்டாலும் (அவர் பற்றுதலால் உந்தப்படாமல், இவையனைத்தையும் கடமையாகச் செய்வதால்) அவரை எந்த பாபமும் தீண்டுவதில்லை. எனவே, பகவான் 'அனக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
147. ஓம் விஜயாய நம:
விஜயதே ஞானவைராக்யைஶ்வர்யாதிபிர்குணைர் (ஞான வைராக்ய ஐஶ்வர்யாதிபிர் குணைர்) விஶ்வமிதி விஜய:
பகவான் தனது இயற்கையான, அபரிமிதமான ஞானம், வைராக்யம், செல்வம் குணங்களால் அனைவரையும் வெல்கிறார். எனவே, அவர் 'விஜய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
148. ஓம் ஜேத்ரே நம:
யதோ யத்யதிஶேதே ஸர்வபூதானி ஸ்வபாவதோSதோ ஜேதா
பகவான் தனது இயற்கையான தன்மையால் அனைத்து ஜீவராசிகளைக் காட்டிலும் மேன்மை பெற்று விஞ்சி இருக்கிறார். எனவே, அவர் 'ஜேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
149. ஓம் விஶ்வயோனயே நம:
விஶ்வம் யோனிர்யஸ்ய விஶ்வஸ்சாஸௌ யோனிஸ்சேதி வா
விஶ்வயோனி:
பகவானுக்கு இந்தப் ப்ரபஞ்சம் ஒரு கர்ப்பப்பைப் போன்று உள்ளது. அதினின்றே அவர் அனைத்தையும் தோற்றுவிக்கிறார். எனவே, அவர் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவான் இந்தப் ப்ரபஞ்சமாகவும், அது தோன்றுவதற்குக் காரணமாகவும் இருப்பதால் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு 117-வது திருநாமத்தில், 'விஶ்வயோனி:' என்பதற்கு "ப்ரபஞ்சத்தின் காரணம்" என்று ஆதிசங்கரர் உரை தந்துள்ளார். இங்கு, ப்ரபஞ்சமே அவரது யோனியாய்க் கொண்டுள்ளார் (கொண்டு, மற்ற உயிர்களைப் படைக்கிறார்) என்று புனருக்தி தோஶம் வராது ஆச்சார்யாள் பொருளுரைத்துள்ளார்.
150. ஓம் புனர்வஸவே நம:
புன: புன: ஶரீரேஶு வஸதி க்ஷேத்ரஞ்யரூபேணேதி புனர்வஸு:
பகவானே, அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் க்ஷேத்ரக்ஞராய் மறைந்துள்ளார். எனவே, அவர் மீண்டும், மீண்டும் வெவ்வேறு ஜீவராசிகளின் உடல்களுக்குள் வசிக்கிறார். எனவே, அவர் 'புனர்வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
141. ஓம் ப்ராஜிஶ்ணவே நம:
ப்ரகாஶ ஏகரஸத்வாத் ப்ராஜிஶ்ணு:
மாற்றமில்லாத, ஒளிவடிவானவராக இருப்பதால் பகவான் 'ப்ராஜிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
142. ஓம் போஜனாய நம:
போஜ்யரூபாதயா ப்ரக்ருதிர் மாயா போஜனம் இத்யுச்யதே
ப்ரக்ருதி என்றழைக்கப்படும் மாயையே இந்த ப்ரபஞ்சம் அனைத்திலும் எல்லாவித அனுபவிக்காத தகுந்த பொருட்களாகவும் உள்ளது. எனவே, ப்ரக்ருதி 'போஜனம்' (அனுபவிக்கப்படும் பொருள்) என்றழைக்கப்படுகிறது. பகவானே ப்ரக்ருதியின் உருவத்தில் அனைத்துப் பொருளாயும் இருப்பதால், அவர் 'போஜனம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
143. ஓம் போக்த்ரே நம:
புருஶ ரூபேண தாம் புங்க்தே இதி போக்தா
இங்கு, ப்ரக்ருதியின் வடிவில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் புருஶனின் வடிவத்தில் அனுபவிப்பவரும் பகவானே. எனவே, அவரே 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
144. ஓம் ஸஹிஶ்ணவே நம:
ஹிரண்யாக்ஷாதீன் ஸஹதே அபிபவதீதி ஸஹிஶ்ணு:
ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை) அடக்கி, வெற்றி கொள்வதால் பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
145. ஓம் ஜகதாதிஜாய நம:
ஹிரண்யகர்பரூபேண ஜகதாதாவுத்பத்யதே ஸ்வயமிதி ஜகதாதிஜ:
பகவான் தானே, இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஹிரண்யகர்பரின் வடிவில் வந்து தோன்றியதால் 'ஜகதாதிஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
146. ஓம் அனகாய நம:
அகம் ந வித்யதேSஸ்யேதி அனக:
பகவான் ப்ரக்ருதியின் வடிவில் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்கிறார்; அவரே புருஶனாக அந்தப் ப்ரக்ருதியை அனுபவிக்கிறார். ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் வந்து தோன்றுகிறார். இவ்வாறு, அனைத்துக் காரியங்களிலும் அவர் ஈடுபட்டாலும் (அவர் பற்றுதலால் உந்தப்படாமல், இவையனைத்தையும் கடமையாகச் செய்வதால்) அவரை எந்த பாபமும் தீண்டுவதில்லை. எனவே, பகவான் 'அனக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
147. ஓம் விஜயாய நம:
விஜயதே ஞானவைராக்யைஶ்வர்யாதிபிர்குணைர் (ஞான வைராக்ய ஐஶ்வர்யாதிபிர் குணைர்) விஶ்வமிதி விஜய:
பகவான் தனது இயற்கையான, அபரிமிதமான ஞானம், வைராக்யம், செல்வம் குணங்களால் அனைவரையும் வெல்கிறார். எனவே, அவர் 'விஜய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
148. ஓம் ஜேத்ரே நம:
யதோ யத்யதிஶேதே ஸர்வபூதானி ஸ்வபாவதோSதோ ஜேதா
பகவான் தனது இயற்கையான தன்மையால் அனைத்து ஜீவராசிகளைக் காட்டிலும் மேன்மை பெற்று விஞ்சி இருக்கிறார். எனவே, அவர் 'ஜேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
149. ஓம் விஶ்வயோனயே நம:
விஶ்வம் யோனிர்யஸ்ய விஶ்வஸ்சாஸௌ யோனிஸ்சேதி வா
விஶ்வயோனி:
பகவானுக்கு இந்தப் ப்ரபஞ்சம் ஒரு கர்ப்பப்பைப் போன்று உள்ளது. அதினின்றே அவர் அனைத்தையும் தோற்றுவிக்கிறார். எனவே, அவர் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவான் இந்தப் ப்ரபஞ்சமாகவும், அது தோன்றுவதற்குக் காரணமாகவும் இருப்பதால் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு 117-வது திருநாமத்தில், 'விஶ்வயோனி:' என்பதற்கு "ப்ரபஞ்சத்தின் காரணம்" என்று ஆதிசங்கரர் உரை தந்துள்ளார். இங்கு, ப்ரபஞ்சமே அவரது யோனியாய்க் கொண்டுள்ளார் (கொண்டு, மற்ற உயிர்களைப் படைக்கிறார்) என்று புனருக்தி தோஶம் வராது ஆச்சார்யாள் பொருளுரைத்துள்ளார்.
150. ஓம் புனர்வஸவே நம:
புன: புன: ஶரீரேஶு வஸதி க்ஷேத்ரஞ்யரூபேணேதி புனர்வஸு:
பகவானே, அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் க்ஷேத்ரக்ஞராய் மறைந்துள்ளார். எனவே, அவர் மீண்டும், மீண்டும் வெவ்வேறு ஜீவராசிகளின் உடல்களுக்குள் வசிக்கிறார். எனவே, அவர் 'புனர்வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக