வியாழன், நவம்பர் 14, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 123

16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |

அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||

இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
    

141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

141ஓம் ப்ராஜிஶ்ணவே நம:
ப்ரகாஶ ஏகரஸத்வாத் ப்ராஜிஶ்ணு: 
மாற்றமில்லாதஒளிவடிவானவராக இருப்பதால் பகவான் 'ப்ராஜிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

142ஓம் போஜனாய நம:
போஜ்யரூபாதயா ப்ரக்ருதிர் மாயா போஜனம்  இத்யுச்யதே
ப்ரக்ருதி என்றழைக்கப்படும் மாயையே இந்த ப்ரபஞ்சம் அனைத்திலும் எல்லாவித அனுபவிக்காத தகுந்த பொருட்களாகவும் உள்ளதுஎனவேப்ரக்ருதி 'போஜனம்' (அனுபவிக்கப்படும் பொருள்என்றழைக்கப்படுகிறதுபகவானே ப்ரக்ருதியின் உருவத்தில் அனைத்துப் பொருளாயும் இருப்பதால்அவர் 'போஜனம்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

143ஓம் போக்த்ரே நம:
புருஶ ரூபேண தாம் புங்க்தே இதி போக்தா 
இங்குப்ரக்ருதியின் வடிவில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் புருஶனின் வடிவத்தில் அனுபவிப்பவரும் பகவானேஎனவேஅவரே 'போக்தாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

144ஓம் ஸஹிஶ்ணவே நம:
ஹிரண்யாக்ஷாதீன் ஸஹதே அபிபவதீதி ஸஹிஶ்ணு:
ஹிரண்யாக்ஷன் முதலிய (அரக்கர்களைஅஸுரர்களைஅடக்கிவெற்றி கொள்வதால் பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

145ஓம் ஜகதாதிஜாய நம:
ஹிரண்யகர்பரூபேண ஜகதாதாவுத்பத்யதே ஸ்வயமிதி ஜகதாதிஜ: 

பகவான் தானேஇந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஹிரண்யகர்பரின் வடிவில் வந்து தோன்றியதால் 'ஜகதாதிஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

146ஓம் அனகாய நம:
அகம் ந வித்யதேSஸ்யேதி அனக:
பகவான் ப்ரக்ருதியின் வடிவில் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்கிறார்அவரே புருஶனாக அந்தப் ப்ரக்ருதியை அனுபவிக்கிறார்ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் வந்து தோன்றுகிறார்இவ்வாறுஅனைத்துக் காரியங்களிலும் அவர் ஈடுபட்டாலும் (அவர் பற்றுதலால் உந்தப்படாமல்இவையனைத்தையும் கடமையாகச் செய்வதால்அவரை எந்த பாபமும் தீண்டுவதில்லைஎனவேபகவான் 'அனக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

147ஓம் விஜயாய நம:
விஜயதே ஞானவைராக்யைஶ்வர்யாதிபிர்குணைர் (ஞான வைராக்ய ஐஶ்வர்யாதிபிர் குணைர்) விஶ்வமிதி விஜய: 
பகவான் தனது இயற்கையானஅபரிமிதமான ஞானம்வைராக்யம்செல்வம் குணங்களால் அனைவரையும் வெல்கிறார்எனவேஅவர் 'விஜய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

148ஓம் ஜேத்ரே நம:
யதோ யத்யதிஶேதே ஸர்வபூதானி ஸ்வபாவதோSதோ ஜேதா 
பகவான் தனது இயற்கையான தன்மையால் அனைத்து ஜீவராசிகளைக் காட்டிலும் மேன்மை பெற்று விஞ்சி இருக்கிறார்எனவேஅவர் 'ஜேதாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

149ஓம் விஶ்வயோனயே நம:
விஶ்வம் யோனிர்யஸ்ய விஶ்வஸ்சாஸௌ யோனிஸ்சேதி வா 
விஶ்வயோனி:
பகவானுக்கு இந்தப் ப்ரபஞ்சம் ஒரு கர்ப்பப்பைப் போன்று உள்ளதுஅதினின்றே அவர் அனைத்தையும் தோற்றுவிக்கிறார்எனவேஅவர் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லதுபகவான் இந்தப் ப்ரபஞ்சமாகவும்அது தோன்றுவதற்குக் காரணமாகவும் இருப்பதால் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 117-வது திருநாமத்தில், 'விஶ்வயோனி:' என்பதற்கு "ப்ரபஞ்சத்தின் காரணம்என்று ஆதிசங்கரர் உரை தந்துள்ளார்இங்குப்ரபஞ்சமே அவரது யோனியாய்க் கொண்டுள்ளார் (கொண்டுமற்ற உயிர்களைப் படைக்கிறார்என்று புனருக்தி தோஶம் வராது ஆச்சார்யாள் பொருளுரைத்துள்ளார்.

150ஓம் புனர்வஸவே நம:
புனபுனஶரீரேஶு வஸதி க்ஷேத்ரஞ்யரூபேணேதி புனர்வஸு: 
பகவானேஅனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் க்ஷேத்ரக்ஞராய் மறைந்துள்ளார்எனவேஅவர் மீண்டும்மீண்டும் வெவ்வேறு ஜீவராசிகளின் உடல்களுக்குள் வசிக்கிறார்எனவேஅவர் 'புனர்வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக