வியாழன், டிசம்பர் 03, 2020

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 141

 21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாபஸுதபாபத்மநாபப்ரஜாபதி: ||

இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |

194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.

189. ஓம் மரீசயே நம:

தேஜஸ்வினாமபி ஒளிபொருந்தியவற்றுள் 

தேஜஸ்வாத் (அதனுள் இருக்கும்) ஒளியாய் இருப்பதால் 

மரீசி: பகவான் 'மரீசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

அக்னி, சூரியன், சந்திரன் போன்ற ஒளிபொருந்தியவைகளுக்குள் ஒளியாக இருப்பதால் பகவான் 'மரீசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சூரியன், சந்திரன், அக்னி ஆகியவை பகவானிடமிருந்து ஒளியைப் பெற்று, தாங்கள் ஒளிவிடுகின்றன. பகவான் ஒருவரே, ஸ்வயம் ப்ரகாசமாய், இயற்கையான ஒளியோடு இருக்கிறார். 

'தேஜஸ்தேஜஸ்வினாமஹம்' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.36)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ஒளியுடையோரின் ஒளி நான்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

190. ஓம் தமனாய நம:

ஸ்வாதிகாராத் தங்களுடைய அதிகாரத்தினால் 

ப்ரமாத்யதி விளைந்த செருக்கினால் 

ப்ரஜா திரியும் மக்களை 

தமயிதும் அழிப்பதை 

ஶீலமஸ்ய தன்னுடைய இயற்கையாகக் கொண்டிருப்பதால் 

வைவஸ்வதாதிரூபேணேதி (விவஸ்வான் என்னும் சூரியனின் புத்திரனான) யமன் முதலிய வடிவத்தில் 

தமன: பகவான் 'தமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தங்களுடைய அதிகாரம், பதவி ஆகியவற்றால் செருக்கடைந்து (மற்றவர்களைத் துன்புறுத்தும்) மக்களை, யமன் முதலிய வடிவம் கொண்டு அழிப்பதை தன் இயற்கையாகக் கொண்டிருப்பதால் பகவான் 'தமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எப்பேர்ப்பட்ட சக்திவாய்ந்தவராய் இருப்பினும் பகவானின் காலம் (காலன்) என்னும் சக்தியிடமிருந்து தப்ப இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக