21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||
இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
189. மரீசி:, 190. தமன:,
191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |
194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:,
196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||
அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.
189. ஓம் மரீசயே நம:
தேஜஸ்வினாமபி ஒளிபொருந்தியவற்றுள்
தேஜஸ்வாத் (அதனுள் இருக்கும்) ஒளியாய் இருப்பதால்
மரீசி: பகவான்
'மரீசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அக்னி, சூரியன், சந்திரன் போன்ற ஒளிபொருந்தியவைகளுக்குள் ஒளியாக இருப்பதால் பகவான் 'மரீசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
சூரியன், சந்திரன், அக்னி ஆகியவை பகவானிடமிருந்து ஒளியைப் பெற்று, தாங்கள் ஒளிவிடுகின்றன. பகவான் ஒருவரே, ஸ்வயம் ப்ரகாசமாய், இயற்கையான ஒளியோடு இருக்கிறார்.
'தேஜஸ்தேஜஸ்வினாமஹம்'
(ஸ்ரீமத் பகவத்கீதை 10.36)
ஸ்ரீ
பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ஒளியுடையோரின் ஒளி நான்.
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.
190. ஓம் தமனாய நம:
ஸ்வாதிகாராத் தங்களுடைய அதிகாரத்தினால்
ப்ரமாத்யதி விளைந்த செருக்கினால்
ப்ரஜா திரியும் மக்களை
தமயிதும் அழிப்பதை
ஶீலமஸ்ய தன்னுடைய இயற்கையாகக் கொண்டிருப்பதால்
வைவஸ்வதாதிரூபேணேதி (விவஸ்வான் என்னும் சூரியனின் புத்திரனான) யமன் முதலிய வடிவத்தில்
தமன: பகவான் 'தமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தங்களுடைய அதிகாரம், பதவி ஆகியவற்றால் செருக்கடைந்து (மற்றவர்களைத் துன்புறுத்தும்) மக்களை, யமன் முதலிய வடிவம் கொண்டு அழிப்பதை தன் இயற்கையாகக் கொண்டிருப்பதால் பகவான் 'தமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எப்பேர்ப்பட்ட சக்திவாய்ந்தவராய் இருப்பினும் பகவானின் காலம் (காலன்) என்னும் சக்தியிடமிருந்து தப்ப இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக