79. ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கஶ்சந்தனாங்கதி |
இந்த எழுபத்தொன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
737. ஸுவர்ணவர்ண:, 738. ஹேமாங்க:, 739. வராங்க:, 740. சந்தனாங்கதி |
741. வீரஹா, 742. விஶம:, 743. ஶூன்யோ:, 744. க்ருதாஶீ:, 745. அசல:, 746. சல: ||
737. ஸுவர்ணவர்ணாய நம:
ஸுவர்ணஸ்யேவ பொன்னை ஒத்த
வர்ணோSஸ்யேதி நிறமுடையவராதலால்
ஸுவர்ணவர்ண: பகவான் 'ஸுவர்ணவர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் பொன்னையொத்த நிறமுடையவராதலால் 'ஸுவர்ணவர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'யதா பஶ்ய: பஶ்யதே ருக்மவர்ணம்' (முண்டக உபநிஶத் 3.1.3)
முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எப்பொழுது ஸாதகன் தங்கத்தைப் போல் ஒளிர்கின்ற (பரப்ரஹ்மனை) பார்க்கிறானோ...
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
738. ஹேமாங்காய நம:
ஹேமேவ தங்கம் போன்ற
அங்கம் வபுர் (வபு:) அஸ்யேதி அங்கம் அதாவது உடல் படைத்தவராதலால்
ஹேமாங்க: பகவான் 'ஹேமாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தங்கம் போன்ற உடல் படைத்தவராதலால் பகவான் 'ஹேமாங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ய ஏஶோந்தராதித்யே ஹிரண்மய: புருஶ:' (சாந்தோக்ய உபநிஶத் 1.6.6)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: சூரியமண்டலத்தின் நடுவே தங்கமயமான பரம்பொருள் இருக்கிறார்.
739. வராங்காய நம:
வரானி ஶோபனான்யங்கானி (ஶோபனானி அங்கானி) 'வர', அதாவது அழகிய அங்கங்களை (உடற்பாகங்களை)
அஸ்யேதி உடையவராதலால்
வராங்க: பகவான் 'வராங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அழகிய அங்கங்களை (உடற்பாகங்களை) உடையவராதலால் பகவான் 'வராங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
"ஸ்வங்க:" என்ற 616வது திருநாமத்திற்கும் ஆச்சார்யாள் இதே விளக்கத்தை அளித்திருந்தார். எனினும், திருநாமம் வேறாக (வராங்க: என்று) இருப்பதால், புனருக்தி தோஷம் இல்லை.
740. சந்தனாங்கதினே நம:
சந்தனைர் 'சந்தன' அதாவது
ஆஹ்லாதனைர் மகிழ்ச்சியை அளிக்கவல்ல
அங்கதை: கேயூரைர் 'அங்கதம்' என்னும் தோள்வளைகளை
பூஶித இதி அணிந்திருப்பதால்
சந்தனாங்கதி: பகவான் 'சந்தனாங்கதி:' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(பார்க்கப் பார்க்க) மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கவல்ல தோள்வளைகளை அணிந்திருப்பதால் பகவான் 'சந்தனாங்கதி:' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
741. வீரக்னே நம:
தர்மத்ராணாய அறத்தை காப்பதற்காக
வீரான் வீரர்களை
அஸுரமுக்யான் அசுர தலைவர்களை (அசுர அரசர்களை)
ஹந்தீதி அழிப்பதால்
வீரஹா பகவான் 'வீரஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறத்தை காப்பதற்காக முக்கியமான அசுர தலைவர்களை (அசுர அரசர்களை) அழிப்பதால் பகவான் 'வீரஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்னர் 166வது திருநாமத்திலும் ஆச்சார்யாள் இதே போன்ற உரையை அளித்திருந்தார். "முக்கிய" என்ற வார்த்தை இங்கு பிரதானமாகக் கொள்ளவேண்டும். முந்தைய திருநாமத்தில் இந்த சொல் இல்லை. எனவே அங்கு பொதுவாக அசுரப்படைகளை அழிப்பவர் என்று பொருள் கொள்ளலாம். இங்கோ முக்கிய அசுரர்களை, அதாவது ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, இராவணன், கம்சன் போன்ற பெரும் அசுரர்களை பகவான் நேரடியாக அழிக்கிறார் என்று பொருள் கொள்ளவேண்டும்.
742. விஶமாய நம:
ஸமோ நாஸ்ய வித்யதே அவருக்கு இணையானவர் இல்லை
ஸர்வ விலக்ஷணத்வாத் அனைத்தையும் விட வேறானவராக இருப்பதால்
இதி விஶம: பகவான் 'விஶம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தனக்கு இணையானவர் (சமமானவர்) இல்லாததால் பகவான் 'விஶம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ந த்வத்ஸமோSஸ்த்யப்யதிக: க்ருதோSன்ய:' (ஸ்ரீமத் பகவத்கீதை 11.43)
ஸ்ரீமத் பகவத்கீதையில் அர்ஜுனன் பகவானைப் பார்த்துக் கூறுகிறான்: உனக்கு நிகர் யாருமில்லை; எனில் உனக்கு மேல் வேறு யாவர்?
இதி பகவத்வசனாத் | இவ்வாறு ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது.
743. ஶூன்யாய நம:
ஸர்வவிஶேஶரஹிதத்வாத் எவ்வித வேறுபாடுகளும் இல்லாததால்
ஶூன்யவத் இல்லாதது போல் இருக்கிறார்
ஶூன்ய: எனவே பகவான் 'ஶூன்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நிர்குண ப்ரஹ்மமான பகவான் இத்தகையவர் என்று வேறுபடுத்தி கூற இயலாத வகையில் எவ்வித வேறுபாடுகளும் அற்று, அவர் இல்லாதது போலவே இருக்கிறார். எனவே, அவர் 'ஶூன்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
744. க்ருதாஶிஶே நம:
க்ருதா விகலிதா 'க்ருதா' அதாவது அற்றவர்
ஆஶிஶ: ப்ரார்த்தனா (வேறொருவரிடம்) வேண்டுதல்
அஸ்யேதி க்ருதாஶீ: பகவான் 'க்ருதாஶீ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வேறொருவரிடம் பிரார்திக்க (வேண்டுதல்கள்) இல்லாதவராதலால் பகவான் 'க்ருதாஶீ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (திருக்குறள் எண் 4)
745. அசலாய நம:
ந ஸ்வரூபான் தன்னுடைய இயற்கையிலோ (உருவம்)
ந ஸாமர்த்யான் திறனிலோ
ந ச ஞானாதிகாத்குணாத் அறிவு (ஞானம்) முதலிய குணங்களிலோ
(ந)சலனம் வித்யதே அவரிடம் எக்காலத்திலும் எவ்வித மாற்றமும் காணப்படுவதில்லை
அஸ்யேதி அசல: எனவே, பகவான் 'அசல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் இயற்கை (உருவம்), திறன் மற்றும் அறிவு (ஞானம்) முதலிய குணங்களில் எக்காலத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை (என்றும் முழுமையாக இருக்கின்றன). எனவே, அவர் 'அசல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘சல’ என்ற மாறுவது (சலனம்). அசல என்றால் மாறாதிருப்பது. பகவானின் குணங்கள் என்றும் மாறுவதில்லை.
745. சலாய நம:
வாயுரூபேண காற்றின் வடிவில்
சலதீதி அசைகிறார்
சல: எனவே பகவான் 'சல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வாயுதேவனின் உள்ளுறை ஆன்மாவான பகவான் காற்றின் வடிவில் அசைகிறார் (ஓரிடத்தில் நில்லாது எங்கும் செல்கிறார்). எனவே அவர் 'சல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!