ஞாயிறு, ஜூன் 30, 2024

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 225

78. ஏகோ நைக: ஸவ: க: கிம் யத்தத்பதமனுத்தமம் |

லோகபந்துர்லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: || 

இந்த எழுபத்தெட்டாவது ஸ்லோகத்தில் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

725. ஏக:, 726. நைக:, 727. ஸவ:, 728. க:, 729. கிம், 730. யத், 731. தத், 732. பதமனுத்தமம் |

733. லோகபந்து:, 734. லோகநாத:, 735. மாதவ:, 736. பக்தவத்ஸல: || 

725. ஏகஸ்மை நம:

பரமார்த்தத: வாஸ்தவமாக (உண்மையில்) 

ஸஜாதீய ஒரே வகையைச் சார்ந்த பொருட்களும் 

விஜாதீய வெவ்வேறு வகையைச் சேர்ந்த பொருட்களும் 

ஸ்வகத பேதவிநிர்முக்தத்வாத் தம்மை அன்றி வேறொன்றும் இல்லாத தன்மை உடையவராதலால் 

ஏக: பகவான் 'ஏக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாஸ்தவமாக பகவானை அன்றி வேறொன்றும் இல்லை. இங்கு நமக்கு வெளிப்படையாக, வெவ்வேறாகத் ஸஜாதீய, விஜாதீய வேறுபாடுகளுடன் உள்ள பொருட்கள் கூட பகவானை அன்றி வேறொன்றும் இல்லை. எனவே அவர் 'ஏக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸஜாதீய வேறுபாடுகள்: பூக்கள் என்ற ஒரே வகுப்பைச் சேர்ந்திருந்தாலும் மல்லிகையும், செம்பருத்தியும் உருவம், மணம் போன்ற வெவ்வேறு தன்மைகளை கொண்டுள்ளன. மனிதர்களுக்குள்ளேயும் உருவம் முதலிய வேறுபாடுகள் உள்ளன.

விஜாதீய வேறுபாடுகள்: தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் போன்ற வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்தவை தோற்றம் முதலியவற்றில் வேறுபட்டு உள்ளன.

‘ஏகமேவாத்விதீயம்’ (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘(அந்த ஆதிமுழுமுதற்கடவுள்) இரண்டற்ற ஒருவராவார் (அத்விதீய)’

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

726. நைகஸ்மை நம:

மாயயா தனது மாயையால் 

பஹுரூபத்வாத் பல்வேறு வடிவங்களாகத் தோன்றுவதால் 

நைக: பகவான் 'நைக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துமே பகவான் என்றால் நமக்கு கண்கூடாக ஏன் இவ்வளவு (ஸஜாதீய, விஜாதீய) வேறுபாடுகள் தெரிகின்றன? அதை இந்தத் திருநாமம் விளக்குகிறது. வாஸ்தவத்தில் பரப்ரஹ்மத்தைத் தவிர வேறொன்றும் இல்லை என்றாலும், வ்யவஹார நிலையில் (அதாவது மாயைக்கு உட்பட்ட உலக வழக்கில்) தனது மாயையால் பகவான் பல்வேறாகத் தோன்றுகிறார். எனவே அவர் 'நைக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைக: = ந + ஏக: என்று பிரிக்கவேண்டும். ஒன்றல்ல (பல) என்று இதற்குப் பொருள். 

'இந்த்ரோ மாயாபி: புருரூப ஈயதே' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.19)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரம்பொருள் மாயையால் பல்வேறு உருவங்களாகத் தெரிகிறார்.

727. ஸவாய நம:

ஸோமோ ஸோமரசத்தை 

யத்ராபிஸூயதே பிழிந்தெடுத்து 

ஸோSத்வர: செய்யப்படும் ஒரு ஸோமயாகத்திற்கு 

ஸவ: 'ஸவ:' என்று பெயர். அந்த ஸோமவேள்வியின் வடிவினராக இருப்பதால் பகவான் 'ஸவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸோமரசத்தை பிழிந்தெடுத்து செய்யப்படும் ஒரு ஸோமயாகத்திற்கு 'ஸவ:' என்று பெயர். அந்த ஸோமவேள்வியின் வடிவினராக இருப்பதால் பகவான் 'ஸவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

728. காய நம:

கஶப்த: 'க' என்ற சொல் 

ஸுகவாசக: சுகத்தைக் (இன்பத்தைக்) குறிக்கும் 

தேன ஸ்தூயத இதி அந்த சொல்லினால் துதிக்கப்படுபவர் ஆதலால் 

க: பகவான் 'க' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சுகத்தைக் (இன்பத்தைக்) குறிக்கும் 'க' என்ற சொல்லினால் துதிக்கப்படுபவர் ஆதலால் பகவான் 'க' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கம் ப்ரஹ்ம' (சாந்தோக்ய உபநிஶத் 4.10.5)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆனந்தமே (க:) பரம்பொருள் (ப்ரஹ்மம்)

729. ஓம் கஸ்மை நம:

ஸர்வபுருஶார்த்தரூபத்வாத் (அறம், பொருள், இன்பம் , வீடு ஆகிய) மனித வாழ்வின் குறிக்கோள்களின் உருவமாக இருப்பதால் 

ப்ரஹ்மைவ பரம்பொருள் ஒன்றே 

விசார்யமிதி ஆராயத் தகுந்தது 

ப்ரஹ்ம கிம் எனவே பரம்பொருளான பகவான் 'கிம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அறம், பொருள், இன்பம் , வீடு ஆகிய) மனித வாழ்வின் குறிக்கோள்களின் உருவமாக இருப்பதால் பரம்பொருள் ஒன்றே ஆராயத் தகுந்தது. எனவே பரம்பொருளான பகவான் 'கிம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'கிம்' என்றால் எது, என்ன என்று பொருள். இந்த கேள்விக்கு உரியவர் பரம்பொருள் மட்டுமே. அவர் மட்டுமே இவ்வாறு ஆராயத்தக்கவர். எனவே, பகவானே 'கிம்'

730. யஸ்மை நம:

யச்சப்தேன 'யத்' என்னும் சொல் 

ஸ்வத:ஸித்த தானே விளங்குவதான 

வஸ்து உத்தேஶவாசினா ஒன்றைக் குறிக்கும் 

ப்ரஹ்ம நிர்திஶ்யத (இந்த சொல்லினால்) பரம்பொருளே குறிப்பிடப்படுகிறது 

ப்ரஹ்ம யத் எனவே பரம்பொருளான பகவான் 'யத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யத்' என்னும் சொல் தானே விளங்குவதான ஒன்றைக் குறிக்கும். சுயமாய் தோன்றியவரும், வேறு தன துணையுமின்றி தானே (தன்னை அறியுமாறு) விளங்கும் பரம்பொருளே இந்த சொல்லினால் குறிக்கப்படுகிறார். எனவே பரம்பொருளான பகவான் 'யத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 'யதோ வா இமானி பூதானி ஜாயந்தே' (தைத்ரிய உபநிஶத் 3.1)

தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எதனிடமிருந்து இந்த உயிரினங்கள் தோன்றுகின்றனவோ…

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

731. தஸ்மை நம:

தனோதீதி விரிவடைவதால் 

ப்ரஹ்ம தத் பரம்பொருளான பகவான் 'தத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'தன்' என்றால் விரிவடைவது என்று பொருள். பரந்து, விரிவதால் பரம்பொருளான பகவான் 'தத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'ஓம் தத்ஸதிதி நிர்தேஶோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத: |' (ஸ்ரீமத் பகவத்கீதை 17.23)

இதி பகவத்வசனாத் | 

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: "ஓம் தத் ஸத்" என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தை குறிப்பதென்பர்.

732. பதாயானுத்தமாய நம:

பத்யதே கம்யதே சென்றடையக்கூடிய இடம் 

முமுக்ஷுபிரிதி முக்தியை விழைபவர்களால் 

பதம் 'பதம்' என்று அழைக்கப்படுகிறது. 

யஸ்மாத் உத்க்ருஶ்டம் நாஸ்தி அதைவிட உயர்ந்தது (இடம்) இல்லை 

தத் அனுத்தமம் 'அனுத்தமம்' என்று அழைக்கப்படுகிறது. 

ஸவிஶேஶணம் ஏகம் நாம இவ்வாறு, முக்தியை விழைபவர்களால் அடையப்படுவதும், அதைக்காட்டிலும் வேறொரு உயர்ந்த ஸ்தானம் இல்லாததுமான ஒன்றைக் குறிக்கும் 

பதமனுத்தமம் இதி பரம்பொருளான பகவான் 'பதமனுத்தமம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

முக்தியை விழைபவர்களால் அடையப்படும் இடம் (பதம்) பகவானே. அதைக்காட்டிலும் (அவரைக்காட்டிலும்) வேறொரு உயர்ந்த ஸ்தானம் இல்லை (அனுத்தமம்). எனவே, பரம்பொருளான பகவான் இவ்விரண்டு பொருள்களையும் ஒரு சேர குறிக்கும் 'பதமனுத்தமம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

733. லோகபந்தவே நம:

ஆச்சார்யாள் இந்த திருநாமத்திற்கு மூன்று விளக்கங்கள் அளித்துள்ளார்.

1. முதல் விளக்கம்:

ஆதாரபூதேஸ்மின் அனைத்திற்கும் ஆதாரப் பொருளாய் இருப்பதால் 

சகலா லோகா அனைத்து உலகனைத்தையும் 

பத்யந்த பிணைப்பதால் 

இதி லோகாநாம் பந்து: அவர் அனைத்து உலகத்திற்கும் உறவாகிறார் 

லோகபந்து: எனவே பகவான் 'லோகபந்து:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்திற்கும் ஆதாரப் பொருளாய், பகவான் அனைத்துலகையும் பிணைக்கிறார். இவ்வாறு பகவான் அனைத்து உலகத்திற்கும் உறவாகிறார். எனவே, பகவான் 'லோகபந்து:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

2. இரண்டாவது விளக்கம்: 

லோகாநாம் உலகமக்களுக்கு (அனைவரின்) 

ஜனகத்வாஜ் தந்தையாக இருக்கிறார் 

ஜனகோபமோ தந்தையை விட 

பந்துர் சிறந்த உறவு 

நாஸ்தீதி வா இல்லையாதலால் 

லோகபந்து: பகவான் 'லோகபந்து:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நம் அனைவரின் தந்தையாவார். தந்தையை விட சிறந்து உறவு வேறொன்றுமில்லை. எனவே பகவான் 'லோகபந்து: ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

3. மூன்றாவது விளக்கம்:

லோகாநாம் அனைவரையும் 

பந்துக்ருத்யம் பிணைக்கக்கூடிய ஹு 

ஹிதாஹிதோபதேஶம் நன்மை பயக்கக்கூடிய (ஹித), தீமை பயக்கக்கூடிய (அஹித) அறிவுரைகளை (உபதேசம்) 

ஶ்ருதிஸ்ம்ருதிலக்ஷணம் மறை (வேதம்) மற்றும் ஸ்ம்ருதிகளின் வாயிலாக 

க்ருதவானிதி வா அருளியிருப்பதால் 

லோகபந்து: பகவான் 'லோகபந்து:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் அனைவரையும்  வினையே (கருமமே) பிணைக்கிறது (விடுவிக்கறது). நமக்கு நன்மை, தீமை பயக்கக்கூடிய அறிவுரைகளை மறைகள், மற்றும் ஸ்ம்ருதிகளின் வாயிலாக நமக்கு பகவான் அருளியிருக்கிறார். எனவே அவர் 'லோகபந்து:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

734. லோகநாதாய நம:

ஆச்சார்யாள் இந்த திருநாமத்திற்கு இரண்டு விளக்கங்கள் அளித்துள்ளார்.

1. முதல் விளக்கம்:

லோகைர்நாத்யதே யாச்யதே உலக மக்களால் விண்ணப்பிக்கப்படுகிறார். 

லோகநாத: எனவே பகவான் 'லோகநாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மக்கள் அனைவரும் தமக்கு வேண்டியதை பகவானிடம் விண்ணப்பித்துப் பெறுகின்றனர். இவ்வாறு உலக மக்களால் விண்ணப்பிக்கப்படுபவராதலால், பகவான் 'லோகநாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

2. இரண்டாவது விளக்கம்:

லோகாநாம் உலகமக்கள் அனைவரையும் 

உபதபதி (அவர்களின் தவறுகளுக்காக) பீடிக்கிறார் 

ஆஶாஸ்தே அவர்களை ஆணையிடுகிறார் 

லோகாநாமீஶ்ட இதி (இவ்வாறு) அனைவரையும் ஆள்கிறார் 

லோகநாத: எனவே பகவான் 'லோகநாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உலகமக்கள் அனைவரையும் (அவர்களின் தவறுகளுக்காக துன்பத்தால்) பீடிக்கிறார், அவர்களை ஆணையிடுகிறார், அனைவரையும் ஆள்கிறார். எனவே, அவர் 'லோகநாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

735. மாதவாய நம:

மதுகுலே 'மது' என்ற அரசனின் வம்சத்தில் 

ஜாதத்வாத் (கிருஷ்ணாவதாரத்தில்) அவதரித்ததால் 

மாதவ: பகவான் 'மாதவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தமது கிருஷ்ணாவதாரத்தில் 'மது' என்ற அரசனின் வம்சத்தில் அவதரித்ததால் 'மாதவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மாதவ: என்ற இந்த திருநாமம் ஸஹஸ்ரநாமத்தில் மூன்று முறை வருகிறது. 72வது திருநாமத்தில், திருமகள் கணவர் என்றும், மது வித்யையால் அறியப்படுபவர் என்றும், 167ஆம் திருநாமத்தில், அனைத்து வித்தைகளின் தலைவர் என்றும் ஆச்சார்யாள் விளக்கம் அளித்திருந்தார்.

736. பக்தவத்ஸலாய நம:

பக்த தனது அடியவர்களிடம் 

ஸ்நேஹத்வாத் அன்பு பூண்டவராக இருப்பதால் 

பக்தவத்ஸல: பகவான் 'பக்தவத்ஸல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களிடம் அன்பு பூண்டவராக இருப்பதால் பகவான் 'பக்தவத்ஸல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக