12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||
இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :
104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:,
109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:,
112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
104. ஓம் வஸவே நம:
வஸந்தி ஸர்வபூதான்யத்ர எவருக்குள் அனைத்து ஜீவராசிகளும்
வசிக்கின்றனவோ (வாழ்கின்றனவோ),
தேஶ்வயமபி வஸதீதி வா எவர் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் (அவற்றின் உள்ளுறை
ஆத்மாவாக) வசிக்கின்றாரோ
வஸு: அந்த பகவான் 'வஸு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து
ஜீவராசிகளும் (இந்தப்
ப்ரபஞ்சம் உட்பட) பகவானுக்குள் வசிக்கின்றன. அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் பகவான் அவற்றின் உள்ளுறை ஆத்மாவாக (அந்தராத்மாவாக) வசிக்கின்றார். இவ்விரண்டு காரணங்களுக்காகவும், பகவான் 'வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'வஸூனாம்
பாவகஸ்சாஸ்மி' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.23)
ஸ்ரீமத்
பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
வஸுக்களில் நான்
தீ.
இத்யுக்தோ வா இங்கு
(ஸ்ரீமத் பகவத்கீதையில்) குறிப்பிட்டுள்ளபடி
வஸு: அக்னியின் (தீயின்) வடிவாய்
இருப்பதால் பகவான் 'வஸு' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(ஸ்ரீமத் பகவத்கீதை
விபூதி யோகம் என்னும் 10-வது அத்யாயத்தில் பகவான்
கூறியுள்ளபடி) அனைத்துமாய் இருக்கும் பரம்பொருள், எட்டு வஸுக்களுள் அக்னியின் வடிவாக இருக்கிறார். எனவே, பகவான் 'வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
105. ஓம் வஸுமனஸே நம:
வஸுஶப்தேன 'வஸு' என்றால்
தனவாசினா
செல்வம் (தனம்) என்று பொருள்
ப்ராஶஸ்த்யம்
லக்ஷ்யதே (எனவே, வஸு என்ற சொல்) அனைத்திலும் சிறந்தவற்றைக்
குறிக்கும்.
ப்ரஶஸ்தம்
மனோ 'மிகச்சிறந்த மனதை'
உடையவராதலால்
யஸ்ய ஸ
வஸுமனா: பகவான் 'வஸுமனா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ராக விருப்பு
த்வேஶாதிபி வெறுப்புக்கள்
க்லேஶைர் போன்ற துன்பங்களாலும்
மதாதிபிர் கர்வம் போன்ற
உபக்லேஶைர் துன்பங்களாலும்
யதோ ந கலுஶிதம் விகாரமடையாத
சித்தம் மனமுடையவராதலால்
ததஸ்தன்மன: ப்ரஶஸ்தம் அவரது மனம் 'மிகச் சிறந்ததாகும்'.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக