17. உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஶுரமோக: ஶுசிரூர்ஜித: |
அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||
இந்த பதினேழாம் ஸ்லோகத்தில் பதினொன்று (11) திருநாமங்கள் உள்ளன:
151. உபேந்த்ர:, 152. வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:,
156. ஊர்ஜித: |
157. அதீந்த்ர:, 158. ஸங்க்ரஹ:,
159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
151. உபேந்த்ர:, 152. வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:,
156. ஊர்ஜித: |
157. அதீந்த்ர:, 158. ஸங்க்ரஹ:,
159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
155. ஓம் ஶுசயே நம:
ஸ்மரதாம்
அவரை நினைப்பது
ஸ்துவதாம் துதிப்பது
அர்ச்சயதாம் ச வழிபடுவது
பாவனத்வாத் (இவை அனைத்தும் நம்மிடையே உள்ள
பாவங்களையும், மனதிலுள்ள அழுக்குகளையும் போக்கி) நம்மை தூய்மையாக்குகின்றன
ஶுசி: எனவே, பகவான் 'ஶுசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானை
நினைத்தலும், துதித்தலும் மற்றும் வழிபடுதலும்
நம்மிடையே உள்ள பாவங்களையும்,
மனதிலுள்ள அழுக்குகளையும் போக்கி
நம்மை தூய்மையாக்குகின்றன.
எனவே, பகவான் 'ஶுசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஶுசி
என்றால் தூய்மை.
ஆதிசங்கரரின்
இந்த உரைக்கு நேரடியான தமிழாக்கம் போல உள்ளது திருப்பாவையின் இந்த வரிகள்: "தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில்
தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!!!"
156. ஓம் ஊர்ஜிதாய நம:
பலப்ரகர்ஶஶாத்வாத்
எண்ணற்கரிய
பலமுடையவராதலால்
ஊர்ஜித: பகவான் 'ஊர்ஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான்
நினைத்தற்கரிய பலம் பொருந்தியவர்.
எனவே, அவர் 'ஊர்ஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
157. ஓம் அதீந்த்ராய நம:
அதீத்யேந்த்ரம்
இந்த்ரனுக்கும்
மேலான
ஸ்திதோ நிலையில்
இருப்பவர்
ஞானைஸ்வர்யாதிபி: ஞானம்,
செல்வம் முதலிய குணங்களால்
ஸ்வபாவஸித்தைரிதி தன்னுடைய இயல்பான
அதீந்த்ரிய: பகவான்
'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தன்னுடைய
இயற்கையான ஞானம்,
செல்வம் முதலிய குணங்களால்
இந்த்ரனுக்கு மேம்பட்டவர்.
எனவே, அவர் 'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
158. ஓம் ஸங்க்ரஹாய நம:
ஸர்வேஶாம்
அனைத்து
ஜீவராசிகளையும்
ப்ரதிஸம்ஹாராத் (ப்ரளய காலத்தில்) அழிப்பதால்
ஸங்க்ரஹ: பகவான்
'ஸங்க்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரளய காலத்தில்
அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் பகவான் 'ஸங்க்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக