22. அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |
அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||
இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
198. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர: |
204. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா ||
இவற்றுள் சில திருநாமங்களையும், அவற்றின் பொருளையும் இன்று அனுபவிக்கலாம்.
205. ஓம் துர்மர்ஶணாய நம:
மர்ஶிதும் ஸோடும் 'மர்ஶண' என்றால் ஸஹித்துக்கொள்ளுதல் என்று பொருள்
தானவாதிபிர் ந ஶக்யதே அஸுரர்களால் (பகவானை ஸஹித்துக்கொள்ள) இயலாது
இதி எனவே
துர்மர்ஶண: பகவான் 'துர்மர்ஶண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
துர்மர்ஶண: என்றால் ஸஹிக்கமுடியாதவர் என்று பொருள். அஸுரர்களாலும், தீய எண்ணம் கொண்டவர்களாலும் பகவானை ஸஹித்துக்கொள்ள இயலாது. எனவே, அவர் 'துர்மர்ஶண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
206. ஓம் ஶாஸ்த்ரே நம:
ஶ்ருதிஸ்ம்ருத்யாதிபி: ஶ்ருதிகளைக் (வேதங்களைக்) கொண்டும், (மனுஸ்ம்ருதி முதலிய) ஸ்ம்ருதிகளைக் கொண்டும்
ஸர்வேஶாமனுஶிஶ்டிம் கரோதீதி அனைவரையும் கட்டளையிட்டு, வழிநடத்தி ஆள்வதால்
ஶாஸ்தா பகவான் 'ஶாஸ்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஶ்ருதிகளையும் (வேதங்கள்), (மனுஸ்ம்ருதி முதலிய) ஸ்ம்ருதிகளையும் கொண்டு அனைவரையும் கட்டளையிட்டு, வழிநடத்தி ஆள்வதால் பகவான் 'ஶாஸ்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக