வெள்ளி, ஜனவரி 29, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 145

21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாபஸுதபாபத்மநாபப்ரஜாபதி: ||

இந்த இருபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |

194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

இந்த திருநாமங்களின் விளக்கம் (சுருக்கமாக).

189. ஓம் மரீசயே நம:

தேஜஸ்வினாமபி தேஜஸ்வாத் மரீசி:  

அக்னி, சூரியன், சந்திரன் போன்ற ஒளிபொருந்தியவைகளுக்குள் ஒளியாக இருப்பதால் பகவான் 'மரீசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

190. ஓம் தமனாய நம:

ஸ்வாதிகாராத் ப்ரமாத்யதி ப்ரஜா தமயிதும் ஶீலமஸ்ய வைவஸ்வதாதிரூபேணேதி தமன: 

தங்களுடைய அதிகாரம், பதவி ஆகியவற்றால் செருக்கடைந்து (மற்றவர்களைத் துன்புறுத்தும்) மக்களை, யமன் முதலிய வடிவம் கொண்டு அழிப்பதை தன் இயற்கையாகக் கொண்டிருப்பதால் பகவான் 'தமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

191. ஓம் ஹம்ஸாய நம:

அஹம் ஸ இதி தாதாத்ம்யபாவின: ஸம்ஸாரபயம் ஹந்தீதி ஹம்ஸ: 

நானே பரப்ரஹ்மம் என்ற ஆத்ம பாவனையில் இருப்பவரின் ஸம்ஸார பயத்தைப் போக்குவதால் (போக்கி, முக்தி அளிப்பதால்) பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹந்தி கச்சதி ஸர்வஶரீரேஶ்விதி வா ஹம்ஸ:

அல்லது, அனைத்து உடல்களுக்குள் (அவற்றின் அந்தர்யாமியாய்) செல்வதால் பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

192. ஓம் ஸுபர்ணாய நம:

ஶோபன தர்மாதர்ம ரூப பர்ணத்வாத் ஸுபர்ண:

பகவான் தர்மம், அதர்மம் என்னும் அழகிய இரு இறக்கைகளைக் கொண்ட பறவை போன்று இருப்பதால் அவர் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶோபனம் பர்ணம் யஸ்யேதி வா ஸுபர்ண:

அழகிய இறக்கைகளை உடையவராதலால் பகவான் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

193. ஓம் புஜகோத்தமாய நம:

புஜேன கச்சதாம் உத்தமோ புஜகோத்தம:

ஊர்ந்து செல்லும் பிராணியான பாம்புகளில், (வாஸுகி, ஆதிசேடன் போன்று) சிறந்தவராக இருப்பதால் பகவான் 'புஜகோத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

194. ஓம் ஹிரண்யநாபாய நம:

ஹிரண்யமிவ கல்யாணி நாபிரஸ்யேதி ஹிரண்யநாப:

பொன்னைப்போன்று அழகிய தொப்புளை உடையவராதலால் பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஹிதரமணீய நாபித்வாத்வா ஹிரண்யநாப:

அல்லது, பகவானின் தொப்புள் அழகாக இருப்பதோடல்லாது நமக்கு நன்மையை தருவதாகவும் இருப்பதால் பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

195. ஓம் ஸுதபஸே நம:

வதரிகாஶ்ரமே நரநாராயணரூபேண ஶோபனம் தபஸ்சரதீதி ஸுதபா:

நரன் என்ற சீடனாகவும், நாராயணன் என்ற குருவாகவும் பகவான் பத்ரிகாஸ்ரமத்தில் உலக நன்மைக்காக மங்களமான தவம் புரிந்து வருகிறார். எனவே, அவர் 'ஸுதபா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

196. ஓம் பத்மநாபாய நம:

பத்மமிவ ஸுவர்துலா நாபிரஸ்யேதி பத்மநாப: 

தாமரையைப் போன்று அழகிய வட்டவடிவமான தொப்புளை உடையவராதலால் பகவான் பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு, 48-வது திருநாமத்தில் தொப்புளில் தாமரையை உடையவர் என்று உரை தந்திருந்தார் ஆச்சார்யர்.

ஹ்ருத்பத்மஸ்ய நாபௌ மத்யே ப்ரகாஶனத்வா பத்மநாப: 

பகவான், ஒவ்வொருவருக்குள்ளும் அவரவரது இதய கமலத்தின் நடுவில் தன் இயற்கையான ஒளி வீச வீற்றிருக்கிறார். எனவே, அவர் 'பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

197. ஓம் ப்ரஜாபதயே நம:

ப்ராஜானாம் பதி: பிதா ப்ரஜாபதி: 

பகவான் அனைவருக்கும் தந்தையாக இருப்பதால் அவர் 'ப்ரஜாபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞாயிறு, ஜனவரி 24, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 144

 21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாபஸுதபாபத்மநாபப்ரஜாபதி: ||

இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |

194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.

196. ஓம் பத்மநாபாய நம:

பத்மமிவ தாமரையைப் போன்று 

ஸுவர்துலா அழகிய வட்டவடிவமான 

நாபிரஸ்யேதி தொப்புளை உடையவராதலால் 

பத்மநாப: பகவான் பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாமரையைப் போன்று அழகிய வட்டவடிவமான தொப்புளை உடையவராதலால் பகவான் பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு, 48-வது திருநாமத்தில் தொப்புளில் தாமரையை உடையவர் என்று உரை தந்திருந்தார் ஆச்சார்யர்.

ஹ்ருத்பத்மஸ்ய ஒவ்வொருவருடைய இதய கமலத்தின் 

நாபௌ மத்யே நாபியில், அதாவது அந்தத் தாமரையின் நடுவில் 

ப்ரகாஶனத்வா பகவான் ஒளியோடு வீற்றிருப்பதால் பத்மநாப: பகவான் பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஒவ்வொருவருக்குள்ளும் அவரவரது இதய கமலத்தின் நடுவில் தன் இயற்கையான ஒளி வீச வீற்றிருக்கிறார். எனவே, அவர் 'பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (பத்மநாபி என்னும் இடத்தில்) பத்மநாபன் என்ற பெயர் ப்ருஷோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

 197. ஓம் ப்ரஜாபதயே நம:

ப்ராஜானாம் அனைத்து ஜீவராசிகளுக்கும் 

பதி: பிதா பதியாக, அதாவது தந்தையாக இருப்பதால் 

ப்ரஜாபதி: பகவான் 'ப்ரஜாபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவருக்கும் தந்தையாக இருப்பதால் அவர் 'ப்ரஜாபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த உலகைப் படைப்பவர் நான்முகக்கடவுளான ப்ரஹ்மா. அவரே, அனைவருக்கும் தந்தை. பகவானோ, அந்த நான்முகனுக்கும் தந்தை. முன்பு 69-வது திருநாமத்தில், அவர் அரசன், நாம் அனைவரும் அவரது ப்ரஜைகள் என்று ஆச்சார்யர் உரை தந்திருந்தார்.

ஞாயிறு, ஜனவரி 17, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 143

21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாபஸுதபாபத்மநாபப்ரஜாபதி: ||

இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |

194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||

அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.

193. ஓம் புஜகோத்தமாய நம:

புஜேன தோள்களினால் (கைகளினால்

கச்சதாம் செல்லும் ப்ராணிகளில் (அதாவது ஊர்ந்து செல்லும் ப்ராணியான பாம்புகளில்

உத்தமோ சிறந்தவராக இருப்பதால் 

புஜகோத்தம: பகவான் 'புஜகோத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஊர்ந்து செல்லும் ப்ராணியான பாம்புகளில், (வாஸுகி, ஆதிசேஷன் போன்று) சிறந்தவராக இருப்பதால் பகவான் 'புஜகோத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பாம்புகள் கால்களின்றி தமது உடலால் ஊர்ந்து செல்வதால் அவை 'புஜகம்' என்று அழைக்கப்படுகின்றன. ஸ்ரீமத் பகவத்கீதை 10-வது அத்யாயத்தில் பகவான் கூறியுள்ளபடி பகவான் ஒருதலை பாம்புகளில் வாஸுகியாகவும், பலதலைகள் கொண்ட பாம்புகளில் (நாகர்களில்) அநந்தன் என்றழைக்கப்படும் ஆதிசேஷனாகவும் உள்ளார். 

194. ஓம் ஹிரண்யநாபாய நம:

ஹிரண்யமிவ பொன்னைப்போன்று 

கல்யாணி அழகிய 

நாபிரஸ்யேதி தொப்புளை உடையவராதலால் 

ஹிரண்யநாப: பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பொன்னைப்போன்று அழகிய தொப்புளை உடையவராதலால் பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஹிதரமணீய நன்மையளிக்கவல்லதும் (ஹிதம்), அழகியதுமான (ரமணீய

நாபித்வாத்வா தொப்புளை உடையவராதலால் 

ஹிரண்யநாப: பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானின் தொப்புள் அழகாக இருப்பதோடல்லாது நமக்கு நன்மையை தருவதாகவும் இருப்பதால் பகவான் 'ஹிரண்யநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்த தொப்புளிலிருந்தே நான்முகக் கடவுளான ப்ரஹ்மா தோன்றுகிறார். அதிலிருந்தே, அனைத்து படைப்பும் உருவாகிறது. படைப்பில்லையேல் நாம் நற்கதி அடைய இயலாது. எனவே, பகவானின் தொப்புள், நமக்கு மிகப்பெரிய நன்மையை செய்கிறது. 

195. ஓம் ஸுதபஸே நம:

வதரிகாஶ்ரமே பத்ரிகாச்ரமத்தில் 

நரநாராயணரூபேண நரன் மற்றும் நாராயணன் வடிவத்தில் 

ஶோபனம் அழகிய, மங்களகரமான 

தபஸ்சரதீதி தவம் புரிவதால் 

ஸுதபா: பகவான் 'ஸுதபா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நரன் என்ற சீடனாகவும், நாராயணன் என்ற குருவாகவும் பகவான் பத்ரிகாஸ்ரமத்தில் உலக நன்மைக்காக மங்களமான தவம் புரிந்து வருகிறார். எனவே, அவர் 'ஸுதபா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பத்ரிகாஸ்ரமத்தில் இன்று நாம் காணும் மூர்த்தி ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாளால் ஸ்தாபிக்கபட்டதாகும். இன்றும், அங்கு கேரள நம்பூதிரி வகுப்பினரே தலைமை அர்ச்சகராக உள்ளனர்.

'மனஸஸ்சேந்த்ரியாணாம் ச ஹ்யைகாக்ரயம் பரமம் தப:'

மனம் மற்றும் புலன்களின் அடக்கமே சிறந்த தவமாகும்.

இதி ஸ்ம்ருதே: இவ்வாறு ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது.