21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||
இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |
194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||
அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.
196. ஓம் பத்மநாபாய நம:
பத்மமிவ தாமரையைப் போன்று
ஸுவர்துலா அழகிய வட்டவடிவமான
நாபிரஸ்யேதி தொப்புளை உடையவராதலால்
பத்மநாப: பகவான் ‘பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தாமரையைப் போன்று அழகிய வட்டவடிவமான தொப்புளை
உடையவராதலால் பகவான் ‘பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு, 48-வது திருநாமத்தில் தொப்புளில் தாமரையை உடையவர் என்று உரை தந்திருந்தார் ஆச்சார்யர்.
ஹ்ருத்பத்மஸ்ய ஒவ்வொருவருடைய இதய கமலத்தின்
நாபௌ மத்யே நாபியில், அதாவது அந்தத் தாமரையின் நடுவில்
ப்ரகாஶனத்வா பகவான் ஒளியோடு வீற்றிருப்பதால் பத்மநாப: பகவான் ‘பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான், ஒவ்வொருவருக்குள்ளும் அவரவரது இதய கமலத்தின் நடுவில் தன் இயற்கையான ஒளி வீச வீற்றிருக்கிறார். எனவே, அவர் 'பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (பத்மநாபி என்னும் இடத்தில்) பத்மநாபன் என்ற பெயர்
ப்ருஷோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.
ப்ராஜானாம் அனைத்து ஜீவராசிகளுக்கும்
பதி: பிதா பதியாக, அதாவது தந்தையாக இருப்பதால்
ப்ரஜாபதி: பகவான் 'ப்ரஜாபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அனைவருக்கும் தந்தையாக
இருப்பதால் அவர் 'ப்ரஜாபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த உலகைப் படைப்பவர் நான்முகக்கடவுளான ப்ரஹ்மா. அவரே, அனைவருக்கும் தந்தை. பகவானோ, அந்த நான்முகனுக்கும் தந்தை. முன்பு 69-வது திருநாமத்தில், அவர் அரசன், நாம் அனைவரும் அவரது ப்ரஜைகள் என்று ஆச்சார்யர் உரை தந்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக