சனி, ஜூன் 15, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 114

14. ஸர்வக: ஸர்வவித்பானுர்விஶ்வக்ஸேனோ ஜனார்தன: |

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: ||

இந்த பதினான்காம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
                   123. ஸர்வக:, 124. ஸர்வவித்பானு:, 125. விஶ்வஸேன:, 126. ஜனார்தன: |
                 127. வேத:, 128. வேதவித், 129. அவ்யங்க:, 130. வேதாங்க:, 131. வேதவித், 132. கவி: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

123ஓம் ஸர்வகாய நம:
ஸர்வத்ர கச்சதீதி ஸர்வக: காரணத்வேனவ்யாப்தத்வாத் ஸர்வத்ர
அனைத்திற்கும் காரணமான பகவான் எங்கும்எதிலும் வ்யாபித்துப் பரவிநிறைந்திருப்பதன் மூலம் அவர் எங்கும் செல்கிறார்எனவேஅவர் 'ஸர்வக:'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

124ஓம் ஸர்வவித்பானவே நம:
ஸர்வம் வேத்தி விந்ததீதி வா ஸர்வவித் பாதீதி பானு: ஸர்வவிச்சாஸௌ பானுஸ்சேதி ஸர்வவித்பானு: 
பகவான் அனைத்தையும் அறிகிறார்நினைத்ததை அடைகிறார்மேலும்அவர் இயற்கையாக ஒளி வீசுகிறார் (சூரியன்அக்னி முதலானவை அவரது ஒளியைப் பெற்றே தாங்கள் ஒளி வீசுகின்றன). எனவேபகவான் 'ஸர்வவித்பானு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

125ஓம் விஶ்வக்ஸேனாய நம:
விஶ்வக் அவ்யயம் ஸர்வேத்யர்த்தே | விஶ்வ கச்சதி தைத்யஸேனா யஸ்ய ரணோத்யோகமாத்ரேணேதி விஶ்வக்ஸேன: 
'விஶ்வஎன்றால் எங்கும்எல்லாவிடத்திலும் என்று பொருள்பகவான்,போர்க்களத்தில் தன்னுடைய வீரத்தால் அஸுரப் படைகளை தோற்றடித்து எல்லாவிடத்திலும் ஓட வைக்கிறார்எனவேபகவான் 'விஶ்வக்ஸேனர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

126ஓம் ஜனார்தனாய நம:
ஜனான் துர்ஜனான் அர்தயதி ஹினஸ்தி நரகாதீன் கமயதீதி வா ஜனார்தன:
பகவான்துர்ஜனங்களைக் (தீயவர்களைக்), அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறுநரகங்களில் தள்ளி அவர்களுக்கு தண்டனை அளிக்கிறார்எனவேபகவான் 'ஜனார்தனர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜனை: அப்யுதய நி:ஶ்ரேயஸ லக்ஷணம் யாச்யதே இதி ஜனார்தன:
மனிதர்கள்தத்தம் கர்மங்களின் பலனாக, அறம்பொருள்இன்பம்வீடு ஆகிய புருஶார்த்தங்களை பகவானிடமிருந்தே யாசித்துப் பெறுகின்றனர்எனவே,பகவான் 'ஜனார்தனர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

127ஓம் வேதாய நம:
வேதரூபத்வாத் வேத:
பகவான் வேதமே வடிவாக இருப்பதால் அவர் 'வேத:' 

வேதயதீதி வா வேத: 
அனைவருக்கும் அறிவைத் (ஞானத்தைவழங்குவதால் பகவான் 'வேத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

128ஓம் வேதவிதே நம:
யதாவத் வேதம் வேதார்த்தம்  வேத்தீதி வேதவித் 
பகவான் மட்டுமே அனைத்து வேதங்களையும்அதன் உட்பொருளையும் உள்ளதை உள்ளவாறு அறிகிறார்எனவேபகவான் 'வேதவித்' (வேதங்களை அறிபவர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

129ஓம் அவ்யங்காய நம:
அவ்யங்க: ஞானாதிபி: பரிபூர்ணோS()விகல த்யுச்யதே
அவரிடம்ஞானம் முதலிய குணங்கள் எவ்வித குறைவுமின்றி முழுமையாக உள்ளதால்பகவான் 'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யங்கோ வ்யக்திர் ந வித்யத இதி அவ்யங்கோ வா
பகவானுக்கு நமது பார்வையாலோமற்ற புலன்களாலோ அறிந்துகொள்ளக் கூடிய உருவம் இல்லை (அவரை அவ்வாறு அறிய இயலாது). எனவேபகவான்'அவ்யங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

130ஓம் வேதாங்காய நம:
வேதா அங்கபூதா யஸ்ய ஸ வேதாங்க:
வேதங்களை தனக்கு அங்கங்களாகக் கொண்டிருப்பதால் பகவான் 'வேதாங்க:'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

131ஓம் வேதவிதே நம:
வேதான் வின்தே விசாரயதி இதி வேதவித் 
வேதங்களை ஆராய்கிறார்எனவேபகவான் 'வேதவித்' (வேதங்களை அறிபவர்)என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

132ஓம் கவயே நம:
க்ராந்ததர்ஶீ கவி: ஸர்வத்ருக்
பகவான் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கிறார்எனவேஅவர் 'கவிஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக