15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||
இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:
133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:,
135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:,
139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
133. ஓம் லோகாத்யஷாய நம:
லோகான்
அனைத்து
உலகங்களுக்கும் (அதிலுள்ள ஜீவராசிகளுக்கும்)
அத்யக்ஷயதீதி தலைவரான படியால்
லோகாத்யக்ஷ:
பகவான் 'லோகாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
ஸர்வேஶாம் அனைத்து
லோகானாம் உலகங்களையும் (அதிலுள்ள
ஜீவராசிகளையும்)
ப்ராதான்யேனோபத்ருஶ்டா முதன்மையான ஸ்தானத்திலிருந்து மேற்பார்வையிடுகிறார்.
பகவான் அனைத்து
உலகங்களையும் (அதிலுள்ள
ஜீவராசிகளையும்) மேற்பார்வையிடுகிறார். எனவே, அவர் அனைத்து உலகங்களுக்கும் தலைவராக 'லோகாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
134. ஓம் ஸுராத்யக்ஷாய நம:
லோகபாலாதி
இந்த உலகிற்கு (மழை, வெயில் முதலிய) தேவையானவற்றை அளிக்கும் பொறுப்பில்
உள்ள
ஸுராணாம் (இந்திரன், வருணன், அக்னி,
சூர்யன் முதலான) தேவர்களை
அத்யக்ஷ: மேற்பார்வையிடுகிறார்
ஸுராத்யக்ஷ:
எனவே, பகவான் 'ஸுராத்யக்ஷ:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான், உலகங்களை மேற்பார்வை இடுவதோடன்றி, இந்த உலகிற்குத் தேவையானவற்றை வழங்கும் பொறுப்பில் உள்ள தேவர்களையும் (அவரவர் தத்தம் கடமைகளை சரிவர செய்வதை) மேற்பார்வையிடுகிறார்.
எனவே, பகவான் 'ஸுராத்யக்ஷ:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக