15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||
இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:
133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் (சுருக்கமான) விளக்கமும்
133. ஓம் லோகாத்யஷாய நம:
லோகான் அத்யக்ஷயதீதி லோகாத்யக்ஷ: ஸர்வேஶாம் லோகானாம் ப்ராதான்யேனோபத்ருஶ்டா
பகவான் அனைத்து உலகங்களையும் (அதிலுள்ள ஜீவராசிகளையும்) மேற்பார்வையிடுகிறார். எனவே, அவர் அனைத்து உலகங்களுக்கும் தலைவராக'லோகாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
134. ஓம் ஸுராத்யக்ஷாய நம:
லோகபாலாதி ஸுராணாம் அத்யக்ஷ: ஸுராத்யக்ஷ:
பகவான், உலகங்களை மேற்பார்வை இடுவதோடன்றி, இந்த உலகிற்குத் தேவையானவற்றை வழங்கும் பொறுப்பில் உள்ள தேவர்களையும் (அவரவர் தத்தம் கடமைகளை சரிவர செய்வதை) மேற்பார்வையிடுகிறார். எனவே, பகவான் 'ஸுராத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
135. ஓம் தர்மாத்யக்ஷாய நம:
தர்மா(அ)தர்மோ ஸாக்ஷாத் ஈக்ஷதே அனுரூபம் ஃபலம் தாதும் தஸ்மாத் தர்மாத்யக்ஷ:
பகவான் அனைவரும் புரியும் அறம் மற்றும் அறமல்லாத செயல்கள் அனைத்தையும், அவற்றிற்கு ஏற்ற பலன்களை வழங்குவதற்காக, சரிவர நோக்குகிறார். எனவே, அவர் 'தர்மாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
136. ஓம் க்ருதாக்ருதாய நம:
க்ருதஸ்ச கார்யரூபேண அக்ருதஸ்ச காரணரூபேணேதி க்ருதாக்ருத:
பகவான் அனைத்து செயல்களையும் புரிகிறார். ஆனால், அவர் செயல்களற்று இருக்கிறார். அனைத்தும் அவரே (காரியம்). எனவே, அனைத்து செயல்களையும் அவரே புரிவதாகக் கொள்ளலாம். ஆனாலும், பரப்ரஹ்மம் ஒன்றிலும் தொடர்பின்றி இருப்பதால் (காரணம்) அவர் எந்த செயல்களையும் தனக்காகப் புரிவதில்லை. எனவே, அவர் செயல்களற்றும் இருக்கிறார். எனவே, பகவான் 'க்ருதாக்ருத:' (செயல் புரிபவர் அதே சமயம் செயல்கற்றும் இருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
137. ஓம் சதுராத்மானே நம:
ஸர்காதிஶு ப்ருதக்விபூதயஸ்சதஸ்ர ஆத்மானோ மூர்த்தயோ
யஸ்ய ஸ: சதுராத்மா
பகவான் படைத்தல் முதலிய காரியங்களைப் புரிவதற்காக நான்கு தனித்தனி உருவங்களை எடுக்கிறார். எனவே, அவர் 'சதுராத்மா' (நான்கு வடிவினர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
138. ஓம் சதுர்வ்யூஹாய நம:
வ்யூஹ்யாத்மானம் சதுர்தா வை வாஸுதேவாதிமூர்த்திபி: |
ஸ்ருஶ்ட்யாதீன் ப்ரகரோத்யேஶ விஶ்ருதாத்மா ஜனார்தன: ||
இதி வ்யாஸவசனாத் சதுர்வ்யூஹ:
பகவான் படைத்தல் முதலிய தொழில்களைப் புரிவதற்காக தன் வடிவத்தை வாஸுதேவர், ஸங்கர்ஷணர், ப்ரத்யும்னர், அநிருத்தர் என்று நான்காக வகுத்துக் கொள்கிறார். எனவே, அவர் 'சதுர்வ்யூஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
139. ஓம் சதுர்தம்ஶ்ட்ராய நம:
தம்ஷ்ட்ராஸ்சதஸ்ரோ யஸ்யேதி சதுர்தம்ஶ்ட்ர: ந்ருஸிம்ஹவிக்ரஹ:
பகவான் ஸ்ரீநரஸிம்ஹ அவதாரத்தில் அழகிய நான்கு தெற்றுப் பற்களோடு தோன்றினார். எனவே, அவர் 'சதுர்தம்ஶ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யத்வா ஸாத்ருஶ்யாச்ச்ருங்கம் தம்ஶ்ட்ரேத்யுச்யதே சதுர்தம்ஶ்ட்ர:
அல்லது, தோற்ற ஒப்புமையால் கொம்புகளை
பற்கள் (தம்ஶ்ட்ர) என்றும் கூறுவார்கள். பகவானுக்கு நான்கு கொம்புகள் உள்ளதால்
அவர் 'சதுர்தம்ஶ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
140. ஓம் சதுர்புஜாய நம:
சத்வாரோ புஜா அஸ்யேதி சதுர்புஜ:
நான்கு திருத்தோள்களை உடையவராதலால் பகவான் 'சதுர்புஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் (சுருக்கமான) விளக்கமும்
133. ஓம் லோகாத்யஷாய நம:
லோகான் அத்யக்ஷயதீதி லோகாத்யக்ஷ: ஸர்வேஶாம் லோகானாம் ப்ராதான்யேனோபத்ருஶ்டா
பகவான் அனைத்து உலகங்களையும் (அதிலுள்ள ஜீவராசிகளையும்) மேற்பார்வையிடுகிறார். எனவே, அவர் அனைத்து உலகங்களுக்கும் தலைவராக'லோகாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
134. ஓம் ஸுராத்யக்ஷாய நம:
லோகபாலாதி ஸுராணாம் அத்யக்ஷ: ஸுராத்யக்ஷ:
பகவான், உலகங்களை மேற்பார்வை இடுவதோடன்றி, இந்த உலகிற்குத் தேவையானவற்றை வழங்கும் பொறுப்பில் உள்ள தேவர்களையும் (அவரவர் தத்தம் கடமைகளை சரிவர செய்வதை) மேற்பார்வையிடுகிறார். எனவே, பகவான் 'ஸுராத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
135. ஓம் தர்மாத்யக்ஷாய நம:
தர்மா(அ)தர்மோ ஸாக்ஷாத் ஈக்ஷதே அனுரூபம் ஃபலம் தாதும் தஸ்மாத் தர்மாத்யக்ஷ:
பகவான் அனைவரும் புரியும் அறம் மற்றும் அறமல்லாத செயல்கள் அனைத்தையும், அவற்றிற்கு ஏற்ற பலன்களை வழங்குவதற்காக, சரிவர நோக்குகிறார். எனவே, அவர் 'தர்மாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
136. ஓம் க்ருதாக்ருதாய நம:
க்ருதஸ்ச கார்யரூபேண அக்ருதஸ்ச காரணரூபேணேதி க்ருதாக்ருத:
பகவான் அனைத்து செயல்களையும் புரிகிறார். ஆனால், அவர் செயல்களற்று இருக்கிறார். அனைத்தும் அவரே (காரியம்). எனவே, அனைத்து செயல்களையும் அவரே புரிவதாகக் கொள்ளலாம். ஆனாலும், பரப்ரஹ்மம் ஒன்றிலும் தொடர்பின்றி இருப்பதால் (காரணம்) அவர் எந்த செயல்களையும் தனக்காகப் புரிவதில்லை. எனவே, அவர் செயல்களற்றும் இருக்கிறார். எனவே, பகவான் 'க்ருதாக்ருத:' (செயல் புரிபவர் அதே சமயம் செயல்கற்றும் இருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
137. ஓம் சதுராத்மானே நம:
ஸர்காதிஶு ப்ருதக்விபூதயஸ்சதஸ்ர ஆத்மானோ மூர்த்தயோ
யஸ்ய ஸ: சதுராத்மா
பகவான் படைத்தல் முதலிய காரியங்களைப் புரிவதற்காக நான்கு தனித்தனி உருவங்களை எடுக்கிறார். எனவே, அவர் 'சதுராத்மா' (நான்கு வடிவினர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
138. ஓம் சதுர்வ்யூஹாய நம:
வ்யூஹ்யாத்மானம் சதுர்தா வை வாஸுதேவாதிமூர்த்திபி: |
ஸ்ருஶ்ட்யாதீன் ப்ரகரோத்யேஶ விஶ்ருதாத்மா ஜனார்தன: ||
இதி வ்யாஸவசனாத் சதுர்வ்யூஹ:
பகவான் படைத்தல் முதலிய தொழில்களைப் புரிவதற்காக தன் வடிவத்தை வாஸுதேவர், ஸங்கர்ஷணர், ப்ரத்யும்னர், அநிருத்தர் என்று நான்காக வகுத்துக் கொள்கிறார். எனவே, அவர் 'சதுர்வ்யூஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
139. ஓம் சதுர்தம்ஶ்ட்ராய நம:
தம்ஷ்ட்ராஸ்சதஸ்ரோ யஸ்யேதி சதுர்தம்ஶ்ட்ர: ந்ருஸிம்ஹவிக்ரஹ:
பகவான் ஸ்ரீநரஸிம்ஹ அவதாரத்தில் அழகிய நான்கு தெற்றுப் பற்களோடு தோன்றினார். எனவே, அவர் 'சதுர்தம்ஶ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யத்வா ஸாத்ருஶ்யாச்ச்ருங்கம் தம்ஶ்ட்ரேத்யுச்யதே சதுர்தம்ஶ்ட்ர:
அல்லது, தோற்ற ஒப்புமையால் கொம்புகளை
பற்கள் (தம்ஶ்ட்ர) என்றும் கூறுவார்கள். பகவானுக்கு நான்கு கொம்புகள் உள்ளதால்
அவர் 'சதுர்தம்ஶ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
140. ஓம் சதுர்புஜாய நம:
சத்வாரோ புஜா அஸ்யேதி சதுர்புஜ:
நான்கு திருத்தோள்களை உடையவராதலால் பகவான் 'சதுர்புஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக