சனி, ஆகஸ்ட் 10, 2019

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 118

15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |

சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||

இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:

133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் (சுருக்கமான) விளக்கமும்
133ஓம் லோகாத்யஷாய நம:
லோகான் அத்யக்ஷயதீதி லோகாத்யக்ஷ: ஸர்வேஶாம்  லோகானாம் ப்ராதான்யேனோபத்ருஶ்டா
பகவான் அனைத்து உலகங்களையும் (அதிலுள்ள ஜீவராசிகளையும்மேற்பார்வையிடுகிறார்எனவேஅவர் அனைத்து உலகங்களுக்கும் தலைவராக'லோகாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

134ஓம் ஸுராத்யக்ஷாய நம:
லோகபாலாதி ஸுராணாம் அத்யக்ஷ: ஸுராத்யக்ஷ: 
பகவான்உலகங்களை மேற்பார்வை இடுவதோடன்றிஇந்த உலகிற்குத் தேவையானவற்றை வழங்கும் பொறுப்பில் உள்ள தேவர்களையும் (அவரவர் தத்தம் கடமைகளை சரிவர செய்வதைமேற்பார்வையிடுகிறார்எனவேபகவான் 'ஸுராத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

135ஓம் தர்மாத்யக்ஷாய நம:
தர்மா(அ)தர்மோ ஸாக்ஷாத் ஈக்ஷதே அனுரூபம் ஃபலம் தாதும் தஸ்மாத் தர்மாத்யக்ஷ:
பகவான் அனைவரும் புரியும் அறம் மற்றும் அறமல்லாத செயல்கள் அனைத்தையும்அவற்றிற்கு ஏற்ற பலன்களை வழங்குவதற்காகசரிவர நோக்குகிறார்எனவேஅவர் 'தர்மாத்யக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

136ஓம் க்ருதாக்ருதாய நம:
க்ருதஸ்ச கார்யரூபேண அக்ருதஸ்ச காரணரூபேணேதி க்ருதாக்ருத:
பகவான் அனைத்து செயல்களையும் புரிகிறார்ஆனால்அவர் செயல்களற்று இருக்கிறார்அனைத்தும் அவரே (காரியம்). எனவேஅனைத்து செயல்களையும் அவரே புரிவதாகக் கொள்ளலாம்ஆனாலும்பரப்ரஹ்மம் ஒன்றிலும் தொடர்பின்றி இருப்பதால் (காரணம்அவர் எந்த செயல்களையும் தனக்காகப் புரிவதில்லைஎனவேஅவர் செயல்களற்றும் இருக்கிறார்எனவேபகவான் 'க்ருதாக்ருத:' (செயல் புரிபவர் அதே சமயம் செயல்கற்றும் இருப்பவர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

137ஓம் சதுராத்மானே நம:
ஸர்காதிஶு ப்ருதக்விபூதயஸ்சதஸ்ர ஆத்மானோ மூர்த்தயோ 
யஸ்ய ஸ: சதுராத்மா 
பகவான் படைத்தல் முதலிய காரியங்களைப் புரிவதற்காக நான்கு தனித்தனி உருவங்களை எடுக்கிறார்எனவேஅவர் 'சதுராத்மா' (நான்கு வடிவினர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

138ஓம் சதுர்வ்யூஹாய நம:
வ்யூஹ்யாத்மானம் சதுர்தா வை வாஸுதேவாதிமூர்த்திபி: |
ஸ்ருஶ்ட்யாதீன் ப்ரகரோத்யேஶ விஶ்ருதாத்மா ஜனார்தன: ||
இதி வ்யாஸவசனாத் சதுர்வ்யூஹ: 
பகவான் படைத்தல் முதலிய தொழில்களைப் புரிவதற்காக தன் வடிவத்தை வாஸுதேவர்ஸங்கர்ஷணர்ப்ரத்யும்னர்அநிருத்தர் என்று நான்காக வகுத்துக் கொள்கிறார்எனவேஅவர் 'சதுர்வ்யூஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

139ஓம் சதுர்தம்ஶ்ட்ராய நம:
தம்ஷ்ட்ராஸ்சதஸ்ரோ யஸ்யேதி சதுர்தம்ஶ்ட்ர: ந்ருஸிம்ஹவிக்ரஹ:
பகவான் ஸ்ரீநரஸிம்ஹ அவதாரத்தில் அழகிய நான்கு தெற்றுப் பற்களோடு தோன்றினார்எனவேஅவர் 'சதுர்தம்ஶ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா ஸாத்ருஶ்யாச்ச்ருங்கம் தம்ஶ்ட்ரேத்யுச்யதே சதுர்தம்ஶ்ட்ர:
அல்லது, தோற்ற ஒப்புமையால் கொம்புகளை பற்கள் (தம்ஶ்ட்ர) என்றும் கூறுவார்கள். பகவானுக்கு நான்கு கொம்புகள் உள்ளதால் அவர் 'சதுர்தம்ஶ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

140ஓம் சதுர்புஜாய நம:
சத்வாரோ புஜா அஸ்யேதி சதுர்புஜ: 
நான்கு திருத்தோள்களை உடையவராதலால் பகவான் 'சதுர்புஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக