15. லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்தம்ஷ்ட்ரஸ்சதுர்புஜ: ||
இந்த பதினைந்தாம் ஸ்லோகத்தில் எட்டு (8) திருநாமங்கள் உள்ளன:
133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
133. லோகாத்யக்ஷ:, 134. ஸுராத்யக்ஷ:, 135. தர்மாத்யக்ஷ:, 136. க்ருதாக்ருத: |
137. சதுராத்மா, 138. சதுர்வ்யூஹ:, 139. சதுர்தம்ஷ்ட்ர:, 140. சதுர்புஜ: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
137. ஓம் சதுராத்மானே நம:
ஸர்காதிஶு
படைத்தல் முதலான
காரியங்களுக்காக
ப்ருதக்விபூதயஸ்சதஸ்ர நான்கு வெவ்வேறு
ஆத்மானோ மூர்த்தயோ உருவங்கள்
யஸ்ய ஸ: எவர் எடுக்கிறாரோ, அந்த பகவான்
சதுராத்மா 'சதுராத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் படைத்தல்
முதலிய காரியங்களைப் புரிவதற்காக நான்கு தனித்தனி உருவங்களை எடுக்கிறார். எனவே, அவர் 'சதுராத்மா' (நான்கு வடிவினர்) என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரஹ்மா
தக்ஷாதய: காலஸ்ததைவாகிலஜந்தவ: |
விபூதயோ
ஹரேரேதா ஜகத: ஸ்ருஶ்டிஹேதவ: || (ஸ்ரீவிஶ்ணு
புராணம் 1.22.31)
ஸ்ரீவிஶ்ணு
புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
ப்ரஹ்மா, தக்ஷன்
முதலிய ப்ரஜாபதிகள், காலம் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய
இந்த நான்கும் படைக்கும் காலத்தில் பகவான் ஹரியின் தோற்றங்களாகும்.
விஶ்ணோர்மன்வாதய: கால:
ஸர்வபூதானி ச த்விஜ: |
ஸ்திதேர்நிமித்தபூதஸ்ய
விஶ்ணோரேதா விபூதய: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.32)
ஸ்ரீவிஶ்ணு
புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
விஶ்ணு, மனு
முதலானோர், காலம் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த
நான்கும் காக்கும் காலத்தில் பகவான் விஶ்ணுவின் தோற்றங்களாகும்.
ருத்ர: காலோSந்தகாத்யாஸ்ச ஸமஸ்தாஸ்சைவ ஜந்தவ: |
சதுர்தா
ப்ரளயாயைதா ஜனார்தனவிபூதய: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.22.33)
ஸ்ரீவிஶ்ணு
புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
ருத்ரன், காலம்,
யமன் மற்றும் அனைத்து ஜீவராசிகள் ஆகிய இந்த நான்கும் அழிக்கும்
ப்ரளய காலத்தில் பகவான் ஜனார்தனரின் தோற்றங்களாகும்.
இதி வைஶ்ணவபுராணே
– இவ்வாறு
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
138. ஓம் சதுர்வ்யூஹாய நம:
வ்யூஹ்யாத்மானம்
சதுர்தா வை வாஸுதேவாதிமூர்த்திபி: |
ஸ்ருஶ்ட்யாதீன்
ப்ரகரோத்யேஶ விஶ்ருதாத்மா ஜனார்தன: ||
பகவான்
ஜனார்தனர் (வேதங்களிலும்,
மற்ற ஶ்ருதிகளிலும்) மிகவும் புகழப்பெற்ற தனது
வடிவத்தை வாஸுதேவர் முதலிய நான்கு வடிவங்களாக வகுத்துக் கொண்டு படைப்பு முதலிய
செயல்களைப் புரிகிறார்.
இதி வ்யாஸவசனாத் ஸ்ரீவ்யாஸ
பகவானின் இந்தக் கூற்றின்படி
சதுர்வ்யூஹ: பகவான் 'சதுர்வ்யூஹ:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் படைத்தல்
முதலிய தொழில்களைப் புரிவதற்காக தன் வடிவத்தை வாஸுதேவர், ஸங்கர்ஷணர், ப்ரத்யும்னர்,
அநிருத்தர் என்று நான்காக வகுத்துக் கொள்கிறார். எனவே, அவர் 'சதுர்வ்யூஹ:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்யூஹ
என்றால் வகுத்தல், அல்லது பிரித்துக்
கொள்ளுதல் என்று பொருள்.
139. ஓம் சதுர்தம்ஶ்ட்ராய நம:
தம்ஷ்ட்ராஸ்சதஸ்ரோ நான்கு தெற்றிப் பற்களை
யஸ்யேதி எவரிடம் உள்ளதோ
சதுர்தம்ஶ்ட்ர:
(அந்த பகவான்) 'சதுர்தம்ஷ்ட்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
ந்ருஸிம்ஹவிக்ரஹ: ஸ்ரீநரஸிம்ஹ மூர்த்தி.
பகவான்
ஸ்ரீநரஸிம்ஹ அவதாரத்தில் அழகிய நான்கு தெற்றுப் பற்களோடு தோன்றினார். எனவே, அவர் 'சதுர்தம்ஶ்ட்ர:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
யத்வா அல்லது
ஸாத்ருஶ்யாச்ச்ருங்கம் தோற்ற ஒப்புமையால் கொம்புகளை
தம்ஶ்ட்ரேத்யுச்யதே பற்கள் (தம்ஶ்ட்ர)
என்றும் கூறுவார்கள்
சதுர்தம்ஶ்ட்ர: பகவானுக்கு நான்கு கொம்புகள் உள்ளதால் அவர் 'சதுர்தம்ஷ்ட்ர:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'சத்வாரி ஶ்ருங்கா:'
(ரிக்வேதே)
ரிக் வேதத்தில்
கூறப்பட்டுள்ளது:
(அவருக்கு) நான்கு கொம்புகள் உள்ளது.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள்
மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
140. ஓம் சதுர்புஜாய நம:
சத்வாரோ
நான்கு
புஜா திருத்தோள்களை
அஸ்யேதி
உடையவராதலால்
சதுர்புஜ: பகவான் 'சதுர்புஜ:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நான்கு
திருத்தோள்களை உடையவராதலால் பகவான் 'சதுர்புஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அந்த
நான்குத் திருக்கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை ஏந்தி இருக்கும்
பகவானின் திருஉருவம் மிகவும் பிரபலாமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக