8. ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||
இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
64. ஈஶான:, 65. ப்ராணத:, 66. ப்ராண:,
67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
70. ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
64. ஓம் ஈஶானாய நம:
ஸர்வபூத
அனைத்து
ஜீவராசிகளையும் நியந்த்ருத்வாத் ஆட்சி
செய்வதால் (அடக்கி ஆள்வதால்) ஈஶான: பகவான் ‘ஈஶான:’ என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
அனைத்து
ஜீவராசிகளையும் அடக்கி ஆள்வதால், பகவான் ‘ஈஶான:’ என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
65. ஓம் ப்ராணதாய நம:
ப்ராணான்
ததாதி ப்ராணனைத்
தருவதால் சேஷ்ட்யதீதி நடமாட
வைப்பதால் ப்ராணத: பகவான்
‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'கோ ஹ்யேவான்யாத் க: ப்ராணயாத்’
(தைத்ரீய உபநிஶத் 2.7)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(ஹ்ருதய
ஆகாசத்திற்குள் இந்த பரப்ரஹ்மம் இல்லையென்றால்) யார்தான் மூச்சை இழுப்பார்.
யார்தான் மூச்சை வெளியிடுவார்கள்.
அனைத்து ஜீவராசிகளுக்கும்
மூச்சுக்காற்றான ப்ராணனை தந்து, அவர்களை நடமாட வைப்பதால், பகவான் ‘ப்ராணத:’ என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண
+ ததாதி = ப்ராணத:
யத்வா,
அல்லது ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) காலாத்மனா காலத்தின் உருவில் த்யதி கண்டயதீதி (த்யதி என்ற சொல்லுக்கு கண்டயதி
அதாவது) அழிப்பதால் ப்ராணத: பகவான்
‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, காலத்தின்
உருவில் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
ப்ராண
+ த்யதி = ப்ராணத:
ப்ராணான்
ப்ராணிகளை
(ஜீவராசிகளை) தீபயதி ஷோதயதீதி வா (தீபயதி
என்ற சொல்லுக்கு ஷோதயதி அதாவது) ஒளி
கொடுத்துப் பிரகாசிக்கச் செய்வதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து
ஜீவாராசிகளுக்கும் (அவற்றின் உள்ளுறைந்து) ஒளி கொடுத்து அவற்றை பிரகாசிக்கச்
செய்வதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண
+ தீபயதி = ப்ராணத:
ப்ராணான்
ப்ராணிகளை
(ஜீவராசிகளை) ததாதி லுனாதீதி வா (ததாதி என்ற சொல்லுக்கு லுனாதி என்ற பொருள் கொண்டு
அதாவது) வெட்டுவது அல்லது அழிப்பது ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
அனைத்து
ஜீவராசிகளையும் வெட்டி அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
ப்ராண
+ ததாதி (லுனாதி) = ப்ராணத:
66. ஓம் ப்ராணாய நம:
ப்ராணிதீதி
மூச்சை ஸ்வாசிப்பவர்
ப்ராண: ‘ப்ராண’
என்று அழைக்கபடுவர் க்ஷேத்ரஞ்ய: பரமாத்மா அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும்
பரமாத்மாவே அவர்களை அவ்வாறு வழிநடத்துவதால், பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
'ப்ராணஸ்ய ப்ராணம்’
(ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.18)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(அந்த
பரமாத்மா) ப்ராணனுக்கே ப்ராணனாய் இருப்பவர்.
அனைத்து
ஜீவாராசிகளுக்குள்ளும் உறைந்து, அவைகள் மூச்சுக்காற்றை (உள்ளிழுத்து, வெளியிட்டு) ஸ்வாசிக்கச்
செய்வதால் பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள்
மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
முக்யப்ராணோ
வா| பகவானே முக்கியமானவர். எனவே, அந்த முக்கியப்
ப்ராணரையே ‘ப்ராண:’ என்று அழைக்கிறோம்.
காற்று
இருந்தும், அதை உள்ளிழுத்து வெளியிடும் புலன் இருந்தும், பகவான் நமது
அந்தர்யாமியாக இல்லாவிடில், நம்மால் ஸ்வாசிக்க முடியாது (அதாவது, உயிர் வாழ
முடியாது) என்பது இதன் உட்பொருளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக