10. ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||
இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
85. ஸுரேஶ:, 86. ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ:
|
90. அஹ:, 91. ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
91. ஓம் ஸம்வத்ஸராய நம:
காலாத்மனா
ஸ்திதோ காலத்தின்
உருவில்
விஶ்ணு: பகவான்
விஶ்ணு இருப்பதால்
ஸம்வத்ஸர: அவர் 'ஸம்வத்ஸர' என்ற
திருநாமத்தால்
இத்யுக்த: அழைக்கப்படுகிறார்.
பகவான் விஶ்ணு
காலத்தின் உருவில் இருப்பதால் அவர் 'ஸம்வத்ஸர' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
92. ஓம் வ்யாலாய நம:
வ்யாலவத்
ஒரு பாம்பினைப்போல
க்ரஹீதும்
அவரைப்
பிடிப்பதற்கு
அஶக்யத்வாத் இயலாதவராக இருப்பதால்
வ்யால: பகவான் 'வ்யால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஒரு பாம்பு
வளைந்து, நெளிந்து வேகமாக நம்
பிடிக்குள் விழாது செல்வதைப்போல பகவானும் எவருக்கும் எளிதில் வசப்படுவதில்லை.
எனவே, பகவான் 'வ்யால:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்யால
என்ற சொல்லிற்கு பாம்பு என்பது நேரிடைப்பொருள். இங்கு, ஆச்சார்யர் பகவானுக்கு
பாம்பைப் போன்று எவருக்கும் எளிதில் வசப்படாத குணத்தை வைத்துப் பொருள் உரைக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக