10. ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||
இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
85. ஸுரேஶ:, 86. ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ:
|
90. அஹ:, 91. ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||
இந்த ஸ்லோகத்தில் மீதம் உள்ள 2 திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
93. ஓம் ப்ரத்யயாய நம:
ப்ரதி
இதி: 'ப்ரதி' என்றால்
ப்ரக்ஞ்யா
அறிவு மயமானவர் என்று பொருள்
ப்ரத்யய: அந்த அறிவு மயமான பரம்பொருள் 'ப்ரத்யய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறிவுமயமாகவே
இருப்பதால் பகவான் 'ப்ரத்யய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ப்ரக்ஞானம்
ப்ரஹ்ம' (ஐத்ரேய உபநிஶத் 3.5.3)
ஐத்ரேய
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அறிவே
ப்ரஹ்மமாகும் (பரம்பொருளாகும்).
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள்
மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
94. ஓம் ஸர்வதர்ஶனாய நம:
ஸர்வாணி
அனைவரும்
தர்ஶனாத்மகானி அக்ஷிணி அவருடைய பார்ப்பதற்குரிய கண்களாக இருப்பதால்
யஸ்ய ஸ பகவான்
ஸர்வதர்ஶன: 'ஸர்வதர்ஶன:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
ஸர்வாத்மகத்வாத் அவர் அனைவருக்குள்ளும்
உறையும் அந்தராத்மாவானபடியால்.
பகவான்
அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவாக இருக்கிறார். எனவே, அனைத்து ஜீவராசிகளின் மூலமாக அவர் அனைத்தையும் காண்கிறார். இவ்வாறு, அனைத்தும், அனைவரும்
அவருக்கு கண்களாக இருப்பதால் பகவான் 'ஸர்வதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'விஸ்வதஸ்சக்ஷு:' (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.4.19)
ஶ்வேதாஶ்வதர
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்திற்கு) எங்கும் கண்கள் இருக்கின்றன.
'விஶ்வாக்ஷம்'
(நாராயண உபநிஶத் 13.1)
நாராயண
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்துமே அவரது கண்கள்
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள்
மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக