ஞாயிறு, நவம்பர் 18, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 95

10. ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |

அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||

இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 
85. ஸுரேஶ:, 86. ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ:
     |
90. அஹ:, 91. ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||

இந்த ஸ்லோகத்தில் திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கம்):

85ஓம் ஸுரேஶாய நம:
ஸுரானாம் தேவானாம் ஈஶ: ஸுரேஶ: 
ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களையும் ஆள்பவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸூபபதோ வா ராதாதுஷோபனதாத்ருணாம்  ஈஶ: ஸுரேஶ: 
அல்லதுநன்மைகளை வாரி வழங்குபவர்களுக்குள் தலைசிறந்தவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

86ஓம் ஶரணாய நம:
ஆர்த்தானாம் ஆர்த்தி ஹரணத்வாத் ஶரணம் 
துன்புற்றிருப்போரின் துன்பங்களைத் தீர்ப்பதால் பகவான் ஶரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

87ஓம் ஶர்மணே நம:
பரமானந்தரூபத்வாத் ஶர்ம:
பகவான் ஆனந்தமே வடிவானவர்தன் அடியவர்களுக்கும் அளவிடற்கரியா ஆனந்தமாகிய முக்தியை அளிப்பவர்எனவேஅவர் 'ஶர்ம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

88ஓம் விஶ்வரேதஸே நம:
விஶ்வஸ்ய காரணத்வாத் விஶ்வரேதா: 
இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு காரணமாய் இருப்பதால் பகவான்'விஶ்வரேதாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

89ஓம் ப்ரஜாபவாய நம:
ஸர்வாப்ரஜா யத்ஸகாஶாதுத்பவந்தி ஸ ப்ரஜாபவ: 
அனைத்து ஜீவராசிகளும் அவரிடமிருந்தே உருவாகின்றதால் பகவான்'ப்ரஜாபவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

90ஓம் அஹ்னே நம:
ப்ரகாஶரூபத்வாத் அஹ:
மிகுந்த ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் 'அஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

91ஓம் ஸம்வத்ஸராய நம:
காலாத்மனா ஸ்திதோ விஶ்ணுஸம்வத்ஸர: இத்யுக்த
பகவான் விஶ்ணு காலத்தின் உருவில் இருப்பதால் அவர் 'ஸம்வத்ஸரஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

92ஓம் வ்யாலாய நம:
வ்யாலவத் க்ரஹீதும் அஶக்யத்வாத் வ்யால: 
ஒரு பாம்பு வளைந்துநெளிந்து வேகமாக நம் பிடிக்குள் விழாது செல்வதைப்போல பகவானும் எவருக்கும் எளிதில் வசப்படுவதில்லைஎனவே,பகவான் 'வ்யால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

93ஓம் ப்ரத்யயாய நம:
ப்ரதி இதி: ப்ரக்ஞ்யா ப்ரத்யய:
அறிவுமயமாகவே இருப்பதால் பகவான் 'ப்ரத்யய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

94ஓம் ஸர்வதர்ஶனாய நம:
ஸர்வாணி தர்ஶனாத்மகானி அக்ஷிணி யஸ்ய ஸ ஸர்வதர்ஶனஸர்வாத்மகத்வாத்
பகவான் அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவாக இருக்கிறார்எனவே,அனைத்து ஜீவராசிகளின் மூலமாக அவர் அனைத்தையும் காண்கிறார்.இவ்வாறுஅனைத்தும்அனைவரும் அவருக்கு கண்களாக இருப்பதால் பகவான்'ஸர்வதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக