சனி, ஜூலை 14, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 66

5. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஶ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||

இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 


37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஶ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||

இதில் மேலும் சில திருநாமங்களின் விளக்கம்:


40. ஓம் புஶ்கராக்ஷாய நம:
புஶ்கரேண தாமரை இதழ்களை உபமிதே ஒத்த அக்ஷிணீ கண்களை யஸ்யேதி உடையவராதலால் புஶ்கராக்ஷ: அவர் 'புஷ்கராக்ஷ' என்று அழைக்கப்படுகிறார் |

தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவராதலால் பகவான் 'புஷ்கராக்ஷ' (தாமரைக்கண்ணன்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

41. ஓம் மஹாஸ்வனாய நம:
மஹான் ஊர்ஜித: ' மஹத்' என்றால் மிக உயர்ந்த ஸ்வனோ நாதோ வா 'ஸ்வனம்' என்றால் ஒலி ஷ்ருதிலக்ஷணோ வேதங்களாகிய யஸ்ய எவருக்கு உள்ளதோ மஹாஸ்வன: அவர் ' மஹாஸ்வன:' என்று அழைக்கப்படுகிறார் |

வேதங்களாகிய மிக உயர்ந்த ஒலியை உடையவராதலால் பகவான் 'மஹாஸ்வன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, மிக உயர்ந்த வேதங்களையே தனக்கு ஒலியாகக் கொண்டிருப்பதால் பகவான் 'மஹாஸ்வன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸன்மஹத்' (பாணினி ஸூத்ரம் 2.1.61)
இந்த பாணினி ஸூத்ரத்தின் படி ஸத், மஹத் (மஹான்) போன்ற வார்த்தைகள் தனிப்பட்ட ஒருவரைக் குறிக்கும் பொழுது அவரது மேன்மையை சுட்டிக் காட்டுகிறது.

'ஆன்மஹத: ஸமானாதிகரணஜாதீயயோ:' (பாணினி ஸூத்ரம் 6.3.46)
இந்த பாணினி ஸூத்ரத்தின் படி: மஹத் என்ற சொல்லின் பின்னே, ஒன்றை மற்றொண்டுடன் தொடர்பு படுத்தும் சொல் வந்தால், மஹத் என்னும் சொல்லில் உள்ள ''காரம் ''காரமாக மாறுகிறது.
எனவேதான், மஹத்+ஸ்வன: = மகாஸ்வன என்று (த், ஆவாக மாறி) உருவாகிறது.

இத்யாத்வம் | இவ்வாறு, மஹத்+ஸ்வன: = மஹாஸ்வன என்று (த், ஆவாக மாறி) உருவாகிறது.

'அஸ்ய மஹதோ பூதோ நி:ஸ்வஸிதமேதத் ரிக்வேதோ யஜுர்வேத:' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.10)
அந்த பரப்ரஹ்மம் (தனது) மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல், மற்றும் வெளியிடுதலே ரிக்வேதம் மற்றும் யஜுர்வேதமாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக