திங்கள், ஜூலை 16, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 67

5. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஶ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||

இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஶ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||

இதில் மேலும் சில திருநாமங்களின் விளக்கம்:


42. ஓம் அநாதிநிதனாய நம:
ஆதிர்ஜன்ம: 'ஆதி' என்றால் பிறப்பு நிதனம் விநாஶ: 'நிதனம்' என்றால் அழிவு தத்த்வயம் இந்த இரண்டும் யஸ்ய ந வித்யதே எவருக்கு இல்லையோ அநாதிநிதன: அவர் 'அநாதிநிதன' என்று அழைக்கப்படுகிறார் |

எவருக்கு பிறப்பு மற்றும் இறப்பு இல்லையோ அந்த பகவான் 'அநாதிநிதன' (பிறப்பு, இறப்பு அற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

43. ஓம் தாத்ரே நம:
ஆனந்தாதிரூபேண ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு விஶ்வம் இந்த பிரபஞ்சத்தைத் பிபர்தீதி தாங்குவதால் தாதா அவர் 'தாதா' என்று அழைக்கப்படுகிறார்.

ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு இந்த பிரபஞ்சத்தைத் தாங்குவதால் பகவான் 'தாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

44. ஓம் விதாத்ரே நம:
கர்மணாம் செயல்களையும் தத்ஃபலானாம் அதன் பலன்களையும் ச கர்த்தா உருவாக்குவதால் விதாதா அவர் 'விதாதா' என்று அழைக்கப்படுகிறார் |

செயல்களையும், அவற்றின் பலன்களையும் உருவாக்குவதால் பகவான் 'விதாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக