ஞாயிறு, ஜூலை 22, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 69

5. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஶ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||

இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் உள்ள 9 திருநாமங்களும்  அவற்றின் விளக்கமும்: 

37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||

37. ஓம் ஸ்வயம்புவே நம:
ஸ்வயமேவ பவதீதி ஸ்வயம்பூ: |
(வேறொரு காரணமின்றிதான் மட்டும்தனியொருவராய் இருப்பதால்பகவான் 'ஸ்வயம்பூஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வேஶாமுபரி பவதி ஸ்வயம் பவதீதி வா ஸ்வயம்பூ: |
அனைவருக்கும் மேலே இருப்பதாலும்தன்னிச்சையால் தோன்றுவதாலும் பகவான் 'ஸ்வயம்பூஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யேஶாமுபரி பவதி யஸ்சோபரி பவதி ததுபயாத்மனா ஸ்வயமேவ பவதீதி வா ஸ்வயம்பூ: |
எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மாவும் அவரே), எவர் மேலானவரோ (ஜீவாத்மாவிற்கு மேலானவரும் அவரே), இப்படி இருவாறாகவும் அவரே தோன்றுவதால் பகவான் 'ஸ்வயம்பூஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

38. ஓம் ஶம்பவே நம:
ஶம் ஸுகம் பக்தனாம் பாவயதீதி ஶம்பு: |
தனது அடியவர்களுக்கு இன்பத்தை அளிப்பதால் (சுகத்தை உருவாக்குவதால்பகவான் 'ஶம்பு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

39. ஓம் ஆதித்யாய நம:
ஆதித்யமண்டலாந்த:ஸ்தோ ஹிரண்மய: புருஶஆதித்ய: |
சூர்யமண்டலத்தின் நடுவே தங்கமயமான புருஶராய் வீற்றிருப்பதால் பகவான் 'ஆதித்யன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வாதஸாதித்யேஶூ விஶ்ணுர்வா ஆதித்ய: |
பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஶ்ணு என்ற பெயருடைய பகவான் இருப்பதால் பகவான் 'ஆதித்யன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அதிதேர் அகண்டிதாயா மஹ்யா அயம் பதிரிதி வா ஆதித்ய: |
'அதிதிஎன்றால் பரந்து விரிந்துள்ள இந்த பூமியைக் குறிக்கும்அந்த நிலமகளின் கணவன் ஆதலால்பகவான் 'ஆதித்யன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யதா ஆதித்ய ஏக ஏவாநேகேஶூ ஜலபாஜனேஶூ அனேகவத் ப்ரதிபாஸதே ஏவமனேகேஶூ ஶரீரேஶூ ஏக ஏவாத்மானேகவத் ப்ரதிபாஸத இதி ஆதித்ய ஸாதர்ம்யதா ஆதித்ய: |
ஒரே சூரியன்பல நீர்நிலைகளில் பலவாக பிரதிபலிக்கிறதுஅது போன்றேஒரே பரமாத்மா பல்வேறு உடல்களில் பற்பல ஜீவாத்மாக்களாக தோன்றுகிறார்.இவ்வாறுசூரியனைப் போன்ற தன்மை உடையவராதலால் பகவான் 'ஆதித்யன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

40. ஓம் புஶ்கராக்ஷாய நம:
புஶ்கரேண உபமிதே அக்ஷிணீ யஸ்யேதி புஶ்கராக்ஷ: |
தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவராதலால் பகவான் 'புஷ்கராக்ஷ' (தாமரைக்கண்ணன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

41. ஓம் மஹாஸ்வனாய நம:
மஹான் ஊர்ஜிதஸ்வனோ நாதோ வா ஶ்ருதிலக்ஷணோ யஸ்ய  மஹாஸ்வன: |
வேதங்களாகிய மிக உயர்ந்த ஒலியை உடையவராதலால் பகவான் 'மஹாஸ்வன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லதுமிக உயர்ந்த வேதங்களையே தனக்கு ஒலியாகக் கொண்டிருப்பதால் பகவான் 'மஹாஸ்வன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

42. ஓம் அநாதிநிதனாய நம:
ஆதிர்ஜன்மநிதனம் விநாஶதத்த்வயம் யஸ்ய ந வித்யதே  அநாதிநிதன: |
எவருக்கு பிறப்பு மற்றும் இறப்பு இல்லையோ அந்த பகவான் 'அநாதிநிதன:' (பிறப்புஇறப்பு அற்றவர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

43. ஓம் தாத்ரே நம:
ஆனந்தாதிரூபேண விஶ்வம் பிபர்தீதி தாதா |
ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு இந்த பிரபஞ்சத்தைத் தாங்குவதால் பகவான் 'தாதாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

44. ஓம் விதாத்ரே நம:
கர்மணாம் தத்ஃபலானாம் ச கர்த்தா விதாதா |
செயல்களையும்அவற்றின் பலன்களையும் உருவாக்குவதால் பகவான் 'விதாதாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

45. ஓம் தாதவ உத்தமாய நம:
அனந்தாதீனாமபி தாரகத்வாத் விஶேஶேண ததாதீதி வா தாதுருத்தம இதி நாமைகம் ஸமானாதிகரண்யேன ஸர்வதாதுப்யப்ருதிவ்யாதிப்ய: உத்க்ருஷ்டஸ்சித்தாதுரித்யர்த்த: |
(முன்னர் தாதா என்ற திருநாமத்தில் கூறப்பட்டுள்ளஆதிசேஷன் முதலானோருக்கும் (பிரபஞ்சத்தைதாங்கும் சக்தியை அளித்துஅவர்களையும்(அந்த சக்தியை அளிப்பதன் மூலம்தாங்குவதால் பகவான் 'தாதுருத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாதுர் விரிஞ்சேருத்க்ருஶ்ட (விரிஞ்சேர் உத்க்ருஶ்ட) (தாதுருத்தம:இதி வா வையதிகரண்யேன |
(முன்னர் கூறப்பட்ட தாதா என்ற திருநாமத்துடன் சேர்க்காமல் தனித்துப் பொருள் கொண்டால்): அனைத்தையும் படைக்கும் (இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் மூல காரணமாய் இருக்கும்நான்முகக் கடவுளாகிய ப்ரஹ்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதால் பகவான் 'தாதுருத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நாமத்வயம் வா அல்லது (தாதுஉத்தம என்றுஇரண்டு திருநாமங்களாகக் கொண்டால்;

கார்யகாரணப்ரபஞ்சதாரணாச்சிதேவ தாது: |
இந்த ப்ரபஞ்சத்தின் காரணமாகவும் அதில் நடைபெறும் அனைத்துக் காரியங்களாகவும் அறிவின் வடிவாக பகவானே இருப்பதால் அவர் 'தாது' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வேஶாம் உத்கதானாம் அதிஶயேனோத்கதத்வாத் உத்தம: |
அனைவரையும்அனைத்தையும் காட்டிலும் சிறந்தவரானபடியால் பகவான் 'உத்தமர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக