ஞாயிறு, ஏப்ரல் 11, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 155

23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |

நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||

இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

209. குரு:, 210. குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |

214. நிமிஶ:, 215. அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ||

இந்த திருநாமங்களின் விளக்கம் (சுருக்கமாக): 

209ஓம் குரவே நம:

ஸர்வவித்யானாமுபதேஶ்ட்டத்வாத் ஸர்வேஶாம் ஜனகத்வாத்வா குரு:

அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும்அனைவரையும் (அனைத்தையும்தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும் பகவான் 'குருஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

210ஓம் குருதமாய நம:

விரிஞ்ச்யாதீனாமபி ப்ரஹ்மவித்யாஸம்ப்ரதாயகத்வாத் குருதம:

அனைவரையும் படைப்பதால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா அனைவருக்கும் குருவாகக் கருதப்படுகிறார்அந்த ப்ரஹ்மாவேப்ரஹ்ம ஞானத்தை பகவானிடமிருந்துதான் கற்கிறார்இவ்வாறுப்ரஹ்மா முதலானோருக்கும் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால்பகவான் 'குருதமஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

211ஓம் தாம்னே நம:

தாம ஜ்யோதி'நாராயண பரோ ஜ்யோதி:' (நாராயண உபநிஶத் 13.1இதி மந்த்ரவர்ணாத் தாம:

தாம என்றால் ஒளிமிக்கது என்று பொருள்மிகச்சிறந்த ஒளிவடிவினராக இருப்பதால் பகவான் 'தாம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸர்வகாமானாமாஸ்பதத்வாத்வா தாம:

நம் அனைத்து ஆசைகளும் பகவானின் கருணையாலேயே நிறைவேறுகின்றனஅனைத்து ஆசைகளும் முடிவில் பகவானையே சென்றடைகின்றனஎனவேபகவான் 'தாம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

212ஓம் ஸத்யாய நம:

ஸத்யவசன தர்மரூபத்வாத் ஸத்ய 

எங்கெங்கெல்லாம் உண்மையும்அறமும் நிலைத்திருக்கிறதோஅங்கெங்கெல்லாம் பகவான் இருக்கிறார்மேலும்அவர் (வேதங்களின் வடிவில்உண்மையான கூற்றாகவும் இருக்கிறார்எனவேபகவான் 'ஸத்யஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸத்யஸ்ய ஸத்யமிதி வா ஸத்ய 

உண்மை எங்கிருந்தாலும்எதனில் இருந்தாலும் அதில் பகவான் உறைகிறார் என்றே கொள்ளவேண்டும்பகவான் அல்லது வேறு உண்மை எதுவுமில்லைஅவர் மாறாத அனைத்திற்குள்ளும் உறைந்து அவற்றிற்கு மாறாத தன்மையை அளிக்கிறார்எனவேபகவான் 'ஸத்யஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

213ஓம் ஸத்யபராக்ரமாய நம:

ஸத்யஅவிததபராக்ரமோ யஸ்ய ஸஸத்யபராக்ரம: 

பகவானின் சக்தியும்வீரமும் என்றும் மாறாதவை (நித்தியமானவை). அவை ஒரு நாளும் வீண்போவதில்லைஎனவேஅவர் 'ஸத்யபராக்ரம:' (உண்மையான வீரமுடையவர்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

214ஓம் நிமிஶாய நம:

நிமிலிதே யதோ நேத்ரே யதோ யோக நித்ராரதஸ்ய அதோ நிமிஶ:

பகவான் யோக நித்திரைக் கொள்ளும் பொழுது அவரது கண்கள் மூடியுள்ளனஎனவேஅவர் 'நிமிஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

215ஓம் அநிமிஶாய நம:

நித்ய ப்ரபுத்தஸ்வரூபத்வாத் அநிமிஶ: 

பகவான் எப்பொழுதும் விழிப்புடனே இருக்கிறார்நம்மைப் போன்று அவர் தூங்குவதில்லைஎனவேஅவர் 'அநிமிஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மத்ஸ்யரூபதயா வா ஆத்மரூபதயா வா அநிமிஶ:

பகவானின் முதலில் மீனாய் திருவவதாரம் செய்தார்மீன்கள் இயற்கையாகவே தம் இமைகளை மூடாதுஎனவேபகவான் 'அநிமிஶ:' (கண்களை மூடாதவர்விழிப்புடன் இருப்பவர்என்று அழைக்கப்படுகிறார்மேலும்அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உள்ளுறை ஆத்மாவாக இருக்கிறார்புலன்கள் தூங்கினாலும் (அடங்கினாலும்ஆத்மா தூங்குவதில்லைஎனவேபகவான் 'அநிமிஶ:' (கண்களை மூடாதவர்விழிப்புடன் இருப்பவர்என்று அழைக்கப்படுகிறார்.

216ஓம் ஸ்ரக்விணே நம:

பூததன்மாத்ரரூபாம் வைஜயந்த்யாக்யாம் ஸ்ரஜம் நித்யம் பிபர்த்தீதி ஸ்ரக்வீ 

பகவான் பஞ்சபூதங்கள்மற்றும் அனைத்து தன்மாத்திரைகளின் வடிவான 'வைஜயந்திஎன்ற மாலையை எப்பொழுதும் அணிந்துள்ளார்எனவேஅவர் 'ஸ்ரக்வீஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

217ஓம் வாசஸ்பதய உதாரதியே நம:

வாசோ வித்யாயா பதிவாசஸ்பதிஸர்வார்த்தவிஶயாதீர் புத்திரஸ்யேத்யுதாரதீ:வாசஸ்பதிருதாரதீ: இத்யேகம் நாம 

'வாசஎன்றால் அனைத்துவித ஞானத்தையும் (அறிவையும்குறிக்கும்வாசஸ்பதி என்றால் 'அறிவின் தலைவர்என்று பொருள்அனைத்தையும் உள்ளபடி அறியும் அறிவைப் பெற்றிருப்பதால் 'உதாரதீஎன்று அழைக்கப்படுகிறார்எனவேபகவான் 'வாசஸ்பதிருதாரதீஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். பொருள் தனித்தனியே இருப்பினும் 'வாசஸ்பதி', 'உதாரதீஅகியவை இணைந்து 'வாசஸ்பதிருதாரதீஎன்று ஒரே திருநாமமாக வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக