24. அக்ரணீர்க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ||
இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
218. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண: |
224. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||
இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
218. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண: |
224. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||
அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):
218. ஓம் அக்ரண்யே நம:
அக்ரம் ப்ரக்ருஶ்டம் பதம் நயதி முமுக்ஷூனிதி அக்ரணீ:
பகவான் முக்தியை விழைபவர்களை (முமுக்ஷுக்களை), அந்த முக்திக்கான மிகச்சிறந்த பாதையில் வழிநடத்திச் செல்கிறார். எனவே, அவர் 'அக்ரணீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
219. ஓம் க்ராமண்யே நம:
பூதக்ராமஸ்ய நேத்ருத்வாத் க்ராமணீ:
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை நியமித்து ஆள்வதால் பகவான் 'க்ராமணீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
220. ஓம் ஸ்ரீமதே நம:
ஸ்ரீ: காந்தி: ஸர்வாதிஶாயின்யஸ்யேதி ஸ்ரீமான்
அனைவரைக் காட்டிலும் (அனைத்தைக் காட்டிலும்) மேலான ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
221. ஓம் ந்யாயாய நம:
ப்ரமாண அனுக்ராஹக அபேதகாரகஸ் தர்கோ ந்யாய:
'ப்ரமா' என்றால் அறியப்படவேண்டிய உண்மைப் என்று பொருள். அதை நமக்கு அறிவிப்பவை 'ப்ரமாணங்கள்' எனப்படும். அத்தகைய ப்ரமாணங்களைச் சார்ந்து, வாத-எதிர்வாதம் மூலம் தர்க்க ரீதியாக அபேத (அத்வைத) தத்துவத்தை விளக்கும் முறைக்கு 'ந்யாயம்' என்று பெயர். பகவானே இந்த 'ந்யாய' வடிவினராய் இருப்பதால் அவர் 'ந்யாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
222. ஓம் நேத்ரே நம:
ஜகத்யந்த்ர நிர்வாஹகோ நேதா
இந்தப் ப்ரபஞ்சம் என்னும் இயந்திரத்தை வழிநடத்துபவராக இருப்பதால் பகவான் 'நேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
223. ஓம் ஸமீரணாய நம:
ஶ்வஸனரூபேண பூதானி சேஶ்ட்யதீதி ஸமீரண: .
மூச்சுக்காற்றின் (ப்ராண வாயுவின்) வடிவில் அனைத்து உயிரினங்களையும் நடமாடச் செய்வதால் பகவான் 'ஸமீரண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
224. ஓம் ஸஹஸ்ரமூர்த்னே நம:
ஸஹஸ்ராணி மூர்த்தானோSஸ்யேதி ஸஹஸ்ரமூர்த்தா
ஆயிரக்கணக்கான தலைகள் உடையவராக இருப்பதால் பகவான் 'ஸஹஸ்ரமூர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
225. ஓம் விஶ்வாத்மனே நம:
விஶ்வஸ்யாத்மா விஶ்வாத்மா
இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் 'விஶ்வாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
226. ஓம் ஸஹஸ்ராஷாய நம:
ஸஹஸ்ராண்யக்ஷீண்யக்ஷாணி (ஸஹஸ்ராணி அக்ஷீணி அக்ஷாணி) வா யஸ்ய ஸ ஸஹஸ்ராக்ஷ:
பகவானுக்கு ஆயிரக்கணக்கான கண்களும், புலனுறுப்புக்களும் உள்ளதால் அவர் 'ஸஹஸ்ராக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
227. ஓம் ஸஹஸ்ரபதே நம:
ஸஹஸ்ராணி பாதா அஸ்யேதி ஸஹஸ்ரபாத்
ஆயிரக்கணக்கான திருப்பாதங்கள் உடையவராக இருப்பதால் பகவான் 'ஸஹஸ்ரபாத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக