செவ்வாய், ஏப்ரல் 27, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 162

25. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

228. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |

232. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:

232. ஓம் அஹ: ஸம்வர்த்தகாய நம:

ஸம்யகஹ்னாம் சரியாக ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்

ப்ரவர்த்தநாத் உருவாக்குகின்ற 

ஸூர்ய: கதிரவனின் வடிவானவராய் இருப்பதால் 

அஹ: ஸம்வர்த்தக: பகவான் 'அஹ: ஸம்வர்த்தக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் கதிரவனின் வடிவில் ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்) சரியாக உருவாக்குகிறார். எனவே, அவர் 'அஹ: ஸம்வர்த்தக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

233. ஓம் வஹ்னயே நம:

ஹவிர் யாகங்களிலும், ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் - தேவர்களின் உணவு

வஹநாத் தேவர்களுக்குக் கொண்டு செல்லும் 

வஹ்னி: அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் 'வஹ்னி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யாகங்களிலும், ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் - தேவர்களின் உணவு) தேவர்களுக்குக் கொண்டு செல்லும் அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் 'வஹ்னி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக