ஞாயிறு, மே 09, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 167

 26. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு: |

ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: || 

இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

236. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |

241. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்: 

240. ஓம் விபவே நம:

ஹிரண்யகர்ப்பாதிரூபேண 'ஹிரண்யகர்ப்பர்' முதலான 

விவிதம் பல்வேறு 

பவதீதி உருவங்களை ஏற்பதால் 

விபு: பகவான் 'விபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஹிரண்யகர்ப்பர்' முதலான பல்வேறு உருவங்களை ஏற்பதால் பகவான் 'விபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'நித்யம் விபும்' (முண்டக உபநிஶத் 1.6)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) எப்பொழுதும் உள்ளது, அனைத்துமாகத் தோற்றமளிப்பது.

இதி மந்த்ரவர்ணாத் | இந்த (உபநிடத) மந்திரத்தின் படி (பகவான் 'விபு' என்று அழைக்கப்படுகிறார்). 

241. ஓம் ஸத்கர்த்ரே நம:

ஸத்கரோதி நற்காரியம் புரிகின்றார் 

பூஜயதீதி (நல்லோரை) வணங்குகிறார் 

ஸத்கர்த்தா (எனவே) பகவான் 'ஸத்கர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் நல்லோரை வணங்குகிறார். எனவே, அவர் 'ஸத்கர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக