திங்கள், மே 10, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 168

 26. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு: |

ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: || 

இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

236. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |

241. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்: 

242. ஓம் ஸத்க்ருதாய நம:

பூஜிதைரபி (அனைவராலும்) வணங்கத்தக்கவர்களாலும் 

பூஜித: வணங்கப்படுகிறார் 

ஸத்க்ருத: (எனவே) பகவான் 'ஸத்க்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறரால் வணங்கப்படும் தேவர்கள், முனிவர்கள், ஆச்சார்யர்கள் போன்றவர்களும் பகவானை வணங்கி, வழிபடுகின்றனர். எனவே, பகவான் 'ஸத்க்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 


243. ஓம் ஸாதவே நம:

ந்யாய ப்ரவ்ருத்ததயா அனைவரையும் அறவழியில் (நியாய வழியில்) நடத்திச் செல்வதால் 

ஸாது: பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் அறவழியில் (நியாய வழியில்) நடத்திச் செல்வதால் பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸாதயதீதி வா உருவாக்குகிறார் 

ஸாத்யபேதான் (இந்தப் ப்ரபஞ்சத்தில் பல்வேறாகக் காட்சியளிக்கும்) பொருட்களுக்குள் பேதங்களை 

ஸாது: பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மம் எனும் ஒரே வஸ்துவால் (பொருளால்) ஆன இந்தப் ப்ரபஞ்சத்தில் பல்வேறு பேதங்களை உருவாக்குவதால் பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

உபதானாத் மூலப் பொருளாய் (மூல காரணமாய்) இருக்கிறார் 

ஸாத்யமாத்ரஸாதகோ வா (இங்கு பலவாகத் தெரியும்) அனைத்துப் பொருட்களையும் உருவாகும் 

ஸாது: பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இந்தப் ப்ரபஞ்சத்தில் பலவாகத் தெரியும் அனைத்துப் பொருட்களுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக