27. அஸங்க்யேயோSப்ரமேயாத்மா விஶிஶ்ட ஶிஶ்டக்ருத் ஶுசி: |
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: ||
இந்த இருபத்தி ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
247. அஸங்க்யேய:, 248. அப்ரமேயாத்மா, 249. விஶிஶ்ட:, 250. ஶிஶ்டக்ருத், 251. ஶுசி: |
252. ஸித்தார்த்த:, 253. ஸித்தஸங்கல்ப:, 254. ஸித்தித:, 255. ஸித்திஸாதன: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):
247. ஓம் அஸங்க்யேயாய நம:
யஸ்மின் ஸங்க்யா நாம ரூப பேதாதி: ந வித்யத இதி அஸங்க்யேய:
'ஸங்க்யா' என்றால் எண்ணிக்கை என்று பொருள். உலகில் அனைத்தையும் நாம் பெயர் (நாமம்) மற்றும் உருவத்தாலேயே (ரூபம்) வேறுபடுத்துகிறோம். பகவானிடம் இத்தகைய நாம, ரூப வேறுபாடுகள் இல்லையாதலால், பகவான் 'அஸங்க்யேய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
248. ஓம் அப்ரமேயாத்மனே நம:
அப்ரமேய ஆத்மா ஸ்வரூபமஸ்யேதி அப்ரமேயாத்மா
பகவானின் ஆத்மாவின் தன்மையை (அல்லது அவரது இயற்கையான உருவத்தை) நமது புலன்கள் மற்றும் மனதால் இன்னதென்று உணர்ந்தறிய இயலாது. எனவே, பகவான் 'அப்ரமேயாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
249. ஓம் விஶிஶ்டாய நம:
அதிஶேதே ஸர்வமதோ விஶிஶ்ட:
பகவான் (அறிவு, பலம், செல்வம், வீரம் முதலிய) அனைத்திலும், அனைவரையும் (அனைத்தையும்) விஞ்சியிருப்பதால் அவர் 'விஶிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
250. ஓம் ஶிஶ்டக்ருதே நம:
ஶிஶ்டம் தத் கரோதீதி ஶிஶ்டக்ருத்
அனைத்தையும் (அனைவரையும்) ஆணையிடுபவராய் (ஆணையிட்டு ஆள்பவராய்) இருப்பதால், பகவான் 'ஶிஶ்டக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஶிஶ்டான் கரோதி பாலயதீதி வா ஶிஶ்டக்ருத்
பகவான் தனது அடியவர்களை (ஶிஶ்டர்களை) காக்கிறார். எனவே, அவர் 'ஶிஶ்டக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
251. ஓம் ஶுசயே நம:
நிரஞ்ஜன: ஶுசி:
களங்கமற்றவரானதால் (தூய்மையானவராதலால்) பகவான் 'ஶுசி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
252. ஓம் ஸித்தார்த்தாய நம:
ஸித்தோ நிர்வ்ருத்த: அர்த்த்யமானோSர்த்தோSஸ்யேதி ஸித்தார்த்த:
பகவான் தான் விரும்பிய அனைத்தும் அடையப்பெறுகிறார். எனவே, அவர் 'ஸித்தார்த்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
253. ஓம் ஸித்தஸங்கல்பாய நம:
ஸித்தோ நிஶ்பன்ன: ஸங்கல்போSஸ்யேதி ஸித்தஸங்கல்ப:
பகவானின் எண்ணங்களும், தீர்மானங்களும் (முடிவுகளும்) எப்பொழுதும் பூர்த்தியாகிறது. எனவே, அவர் 'ஸித்தஸங்கல்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
254. ஓம் ஸித்திதாய நம:
ஸித்திம் ஃபலம் கர்த்ருப்ய: ஸ்வாதிகாரானுரூபதோ (ஸ்வ அதிகாரான் அனுரூபதோ) ததாதீதி ஸித்தித:
பகவான் ஒவ்வொருவருக்கும், அவர்களது செயல்களுக்குத் தக்க பலன்களை அளிக்கிறார். எனவே, அவர் 'ஸித்தித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
255. ஓம் ஸித்திஸாதனாய நம:
ஸித்தே: க்ரியாயா: ஸாதகத்வாத் ஸித்திஸாதன:
பகவான் 'ஸித்தியை' (அதாவது செயல்களைப்) புரிகிறார். செயல்களைப் புரிபவர்களுக்கு (அவர்களைத் தூண்டி) உதவுபவராகவும் இருக்கிறார். எனவே, அவர் 'ஸித்திஸாதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக