புதன், மே 12, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 170

26. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு: |

ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: || 

இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

236. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |

241. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: || 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):

236ஓம் ஸுப்ரஸாதாய நம:

ஶோபன: ப்ரஸாதோ யஸ்ய அபகாரவதாமபி ஶிஶுபாலாதீனாம் மோக்ஷப்ரதாத்ருத்வாத் இதி ஸுப்ரஸாத:

பகவானின் கருணை மிகவும் மங்களகரமானதுஅவரை அவமதித்துதவறிழைத்த சிசுபாலன் முதலானோருக்கும் முக்தியை அளிக்கக்கூடியதுஎனவேஅவர் 'ஸுப்ரஸாத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

237ஓம் ப்ரஸன்னாத்மனே நம:

ரஜஸ்தமோப்யாம் அகலுஶித ஆத்மா அந்த:கரணமஸ்யேதி ப்ரஸன்னாத்மா 

பகவானின் ஆன்மாவும்மனதும்உருவமும் சுத்தஸத்வ வடிவானதுரஜோதமோ குணங்களால் மாசடையாததுஎனவே அவர் 'ப்ரஸன்னாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருணார்த்ர ஸ்வபாவத்வா ப்ரஸன்னாத்மா 

கருணையே வடிவானவராக இருப்பதால் பகவான் 'ப்ரஸன்னாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

யத்வா ப்ரஸன்னஸ்வபாவத்வா ப்ரஸன்னாத்மா காருணிக இத்யர்த்த:

மிகவும் கருணையுள்ளவரானதால் பகவான் இயல்பாகவே மகிழ்ச்சியுடன் இருக்கிறார்எனவேஅவர் 'ப்ரஸன்னாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவாப்தஸர்வகாமத்வாத்வா ப்ரஸன்னாத்மா

பகவான் தனது அனைத்து ஆசைகளும் (எண்ணங்களும்) ஈடேறப்பெற்றவர். அதனால் அவரது மனம் என்றுமே மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் (ப்ரஸன்னமாக) இருக்கும். எனவே, அவர் 'ப்ரஸன்னாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

238ஓம் விஶ்வத்ருஶே நம:

விஶ்வம் த்ருஶ்ணோதீதி விஶ்வத்ருக் ஞித்ருஶா ப்ராகல்பே

இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கிக் காப்பதால் பகவான் 'விஶ்வத்ருக்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

239ஓம் விஶ்வபுஜே நம:

விஶ்வம் புங்க்தே புனக்தி பாலயதீதி வா விஶ்வபுக் 

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை ப்ரளய காலத்தில் உண்கிறார்மற்றெல்லா காலங்களிலும் அதை காக்கிறார்எனவேபகவான் 'விஶ்வபுக்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

240ஓம் விபவே நம:

ஹிரண்யகர்ப்பாதிரூபேண விவிதம் பவதீதி விபு:

'ஹிரண்யகர்ப்பர்முதலான பல்வேறு உருவங்களை ஏற்பதால் பகவான் 'விபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

241ஓம் ஸத்கர்த்ரே நம:

ஸத்கரோதி பூஜயதீதி ஸத்கர்த்தா

பகவான் நல்லோரை வணங்குகிறார்எனவேஅவர் 'ஸத்கர்த்தாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

242ஓம் ஸத்க்ருதாய நம:

பூஜிதைரபி பூஜிதஸத்க்ருத:

பிறரால் வணங்கப்படும் தேவர்கள்முனிவர்கள்ஆச்சார்யர்கள் போன்றவர்களும் பகவானை வணங்கிவழிபடுகின்றனர்எனவேபகவான் 'ஸத்க்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

243ஓம் ஸாதவே நம:

ந்யாய ப்ரவ்ருத்ததயா ஸாது: 

அனைவரையும் அறவழியில் (நியாய வழியில்நடத்திச் செல்வதால் பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸாதயதீதி வா ஸாத்யபேதான் ஸாது:

பரப்ரஹ்மம் எனும் ஒரே வஸ்துவால் (பொருளால்ஆன இந்தப் ப்ரபஞ்சத்தில் பல்வேறு பேதங்களை உருவாக்குவதால் பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

உபதானாத் ஸாத்யமாத்ரஸாதகோ வா ஸாது: 

அல்லதுஇந்தப் ப்ரபஞ்சத்தில் பலவாகத் தெரியும் அனைத்துப் பொருட்களுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் 'ஸாது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

244ஓம் ஜான்ஹவே நம:

ஜனான் ஸம்ஹாரஸமயே அபஹ்னுதே அபனயதீதி ஜஹ்னு:

பகவான்ப்ரளய காலத்தில் (இந்தப் ப்ரபஞ்சம் அழியும் காலத்தில்அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள்ளே லயமடையச் செய்கிறார்.  எனவேஅவர் 'ஜஹ்னு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜஹாத்யவிதுஶோ (ஜஹாதி அவிதுஶோபக்தான் நயதீதி பரம்பதமிதி வா ஜஹ்னு: 

தன்னிடம் பக்தியில்லாதஞானமற்றோரை விடுத்துதனது பக்தர்களை தன்னுடைய மேலான பரமபதத்திற்கு வழிநடத்திச் செல்வதால் பகவான் 'ஜஹ்னு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

245ஓம் நாராயணாய நம:

நர ஆத்மா ததோ ஜாதான்யாகாஶாதீனி நாராணி கார்யாணி தானி அயம் காரணாத்மனா வ்யாப்னோதி அதஸ்ச தான்யயனமஸ்யேதி நாராயண:

நரம் என்னும் ஆத்மாக்களின் பிறப்பிடமாக இருப்பதால் ஆகாயம் முதலானவை 'நாரங்கள்என்று அழைக்கப்படுகிறதுஅந்த நாரங்களைஅவற்றின் காரணமாக இருப்பதால்பகவான் பரவியிருக்கிறார் (வ்யாபித்திருக்கிறார்). எனவேஅவர் அவற்றின் இருப்பிடமாகிறார் (அயனம்). எனவேபகவான் 'நாரயணன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஶ்யதே ஶ்ரூயதேபி வா |

அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்த நாராயணஸ்தித:' || (நாராயண உபநிஶத் 13.1-2)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாம் பார்த்தும்கேட்டும் அறிந்து கொள்ளும் (எல்லையற்றஇந்தப் ப்ரபஞ்சத்தை உள்ளும்புறமுமாக பகவான் நாராயணர் பரவியுள்ளார் (வ்யாபித்துள்ளார்).

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் 'நாரயணன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

நரஜ்ஜாதானி தத்வானி நாராணீதி ததோ விது: |

தான்யேவ சாயன தஸ்ய தேன நாராயணஸ்ம்ருத: || (மஹாபாரதம்)

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: நரனிலிருந்தே அனைத்து தத்துவங்களும் உருவாகின்றனஎனவேஅவை 'நாரங்கள்என்று அழைக்கப்படுகின்றனஇந்த நாரங்களைத் தனது முதல் இருப்பிடமாகக் (அயனமாகக்கொண்டுள்ளதால்பகவான் 'நாராயணன்என்று அழைக்கப்படுகிறார்.

இதி மஹாபாரதே | இந்த மஹாபாரத ஸ்லோகத்தின் படி (பகவான் 'நாரயணன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்). 

நாராணாம் ஜீவானாம் அயனத்வாத் ப்ரளய இதி வா நாராயண:

நாரங்கள் என்றழைக்கப்படும் ஜீவராசிகள் அனைத்தும் ப்ரளய காலத்தில் பகவானுக்குள்ளே சென்று ஒடுங்குகின்றன. இவ்வாறு, நாரங்களின் இலக்காக (அயனமாக) இருப்பதால், பகவான் 'நாராயணன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'நாராணாமயன யஸ்மாத்தஸ்மான் நாராயணஸ்ம்ருத:' (ப்ரஹ்மவைவர்த்த புராணம்)

ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது: நாரங்களின் இருப்பிடமாதலால் பகவான் 'நாராயணன்என்று அழைக்கப்படுகிறார்..

இதி ப்ரஹ்மவைவர்த்தாத் | இவ்வாறு ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸூனவ: |

தா யதஸ்யாயனம் பூர்வம் தேன நாராயணஸ்ம்ருத: || (மனு ஸ்ம்ருதி 1.10)

மனு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது: நரனான பகவானிடமிருந்து உருவானதால் தண்ணீருக்கு 'நாரம்என்று பெயர்அந்த நாரத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளதால்பகவான் 'நாராயணன்என்று அழைக்கப்படுகிறார்.

246ஓம் நராய நம:

நயதீதி நரப்ரோக்தபரமாத்மா ஸனாதன: |

இதி வ்யாஸ வசனம் |

அனைவரையும் (நற்பேற்றுக்குவழிநடத்தி அழைத்துச் செல்வதால்என்றும் உள்ள அந்த பரமாத்மா 'நரன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்ஸ்ரீவ்யாஸரின் இந்தக் கூற்றின்படி பகவான் 'நரன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக