புதன், மார்ச் 14, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 8


6. ஆறாம் கேள்வி –  கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத்


கிம் ஜபன் கிம் ஜப்யம் ஜபன் உச்சோபாம்ஷுமானஸலக்ஷணம் ஜபம் குர்வன் யாரை (மூன்று வகையான) ஜபம்* செய்வதால் 

ஜந்து: ஜனனதர்மா பிறப்பையடைந்த ஒரு ஜீவன்

அனேன ஜந்துஷப்தேன ஜபார்ச்சனஸ்தவநாதிஷு யதாயோக்யம் சர்வப்ரானினாமதிகாரம் சூசயதி இங்கு ‘ஜந்து’ என்ற சொல்லினால் ஜபம், அர்ச்சனம் மற்றும் ஸ்லோகங்களில் (மனிதர்கள் மட்டுமல்லாது) அனைத்து ஜீவராசிகளுக்கும் தத்தம் தகுதியைப் பொறுத்து உரிமை உள்ளது என்று குறிப்பிடப்படுகின்றது 

ஜன்மஸம்ஸாரபந்தனாத் ஜன்ம அஞ்ஞான விஜ்ரும்பிதானாம் அவித்யாகார்யானாமுபலக்ஷணம் ‘ஜன்ம’ என்ற சொல் அஞ்ஞானத்தினால் உண்டாகும் அறியாமையைக் குறிக்கின்றது. ‘ஸம்ஸாரம்’ என்பது அந்த அறியாமையின் மற்றொரு பெயராகும்*

ஸம்ஸாரோSவித்யா தாப்யாம் ஜன்ம ஸம்ஸாராப்யாம் யத்பந்தனம் தஸ்மாத் ஜன்ம-ஸம்ஸார-பந்தங்களிலிருந்து விடுபடுகிறான்?

முச்யதே முக்தோ பவதீதி இந்த ஜன்மம் மற்றும் ஸம்ஸாரத்தின் தளைகள், அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவை ஜபம் செய்வதால் எவ்வாறு உடைக்கப்படுகின்றது 

ஷஷ்ட: ப்ரஶ்ன: இது ஆறாவது கேள்வியாகும் |

குறிப்பு:
1. மூன்று வகை ஜபமாவது: உரக்க ஜெபிப்பது (அதமம்), மெதுவாக தனக்கு மட்டும் கேட்குமாறு ஜெபிப்பது (மத்யமம்) மற்றும் மனதிற்குள்ளாக ஜெபிப்பது (உத்தமம்)
2. அத்வைதத்தின்படி, அஞ்ஞானமே ஸம்ஸாரத்தளைக்குக் காரணமாகும். ஞானம் அடைந்தால் மோக்ஷம்.

முச்யதே ஜன்ம ஸம்ஸாரபந்தனாதிதீதமுபலக்ஷணம் இதரேஷாம் ஃபலானாமபி ஏதத்க்ரஹணம் மோக்ஷஸ்ய ப்ராதான்யக்யாபனார்த்தம் |

‘ஜன்ம-ஸம்ஸார வடிவான பந்தத்திலிருந்து எப்படி விடுதலை கிடைக்கிறது?’ என்று கேட்பது மோக்ஷத்தின் முக்கியத்துவத்தை குறிப்பதற்கேயாகும். மோக்ஷத்தை சொல்வதன் மூலம் மற்ற பலன்களும் இதற்குள் அடங்கும் என்பது இதன் உட்பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக