ஞாயிறு, டிசம்பர் 17, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 223

76. பூதாவாஸோ வாஸுதேவ: ஸர்வாஸுநிலயோSநல: |

தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்த்தரோSதாபராஜித: || 

இந்த எழுபத்தாறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

708. பூதாவாஸ:, 709. வாஸுதேவ:, 710. ஸர்வாஸுநிலய:, 711. அனல: |

712. தர்ப்பஹா, 713. தர்ப்பத:, 714. த்ருப்த:, 715. துர்த்தர:, 716. அபராஜித: ||

708. பூதாவாஸாய நம:

பூதான்யத்ராபிமுக்யேன வஸந்தீதி அனைத்து ஜீவராசிகளும் அவருக்குள் வசிக்கின்ற படியால் (உறைகின்ற படியால்) 

பூதாவாஸ: பகவான் 'பூதாவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளும் அவருக்குள் வசிக்கின்ற படியால் (உறைகின்ற படியால்) பகவான் 'பூதாவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வஸந்தி த்வயி பூதானி பூதவாஸஸ்ததோ பவான் |' (ஹரிவம்ஶம் 3.88.53) 

இதி ஹரிவம்ஶே | 

ஹரிவம்சத்தில் கூறப்பட்டுள்ளது: தங்களுக்குள் அனைத்து பூதங்களும் (ஜீவராசிகளும்) வசிக்கின்றன. எனவே தாங்கள் 'பூதவாஸர்' (பூதவாஸ:) என்று அழைக்கப்படுகிறீர்கள்.

709. வாஸுதேவாய நம:

ஜகத உலகத்தை (உலகத்திடமிருந்து தன்னை) 

ஆச்சாதயதி மறைக்கிறார் 

மாயயேதி மாயையால் 

வாஸு: எனவே பகவான் 'வாஸு:' என்று அழைக்கப்படுகிறார் 

ஸ ஏவ தேவ இதி அவர் ஒருவரே முழுமுதற்கடவுளாகவும் (தேவ) இருப்பதால் 

வாஸுதேவ: பகவான் 'வாஸுதேவ:' என்ற திருநாமத்தால்  அழைக்கப்படுகிறார்.

பகவான் உலகத்தை (உலகிலுள்ளோரை / உலகத்திடமிருந்து தன்னை) மாயையால் மறைக்கிறார். எனவே அவர் 'வாஸு' என்று அழைக்கப்படுகிறார். அவரே முழுமுதற் கடவுளாகவும் இருப்பதால், 'தேவ' என்ற பதத்துடன் சேர்த்து 'வாஸுதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'சாதயாமி ஜகத் விஶ்வம் பூத்யா ஸூர்ய இவாம்ஶுபி:' (மஹாபாரதம் ஶாந்திபர்வம் 342.42)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் பகவான் கூறுகிறார்: எவ்வாறு கதிரவன் தனது கிரணங்களாலேயே மறைக்கப்படுகிறதோ, அவ்வாறே நான் அனைத்துலகங்களையும் மறைக்கிறேன்.

'வாஸுதேவ:' என்ற இதே திருநாமத்திற்கு முன்பு 332வது திருநாமத்தில் 'அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் மறைந்து உறைகிறார்' என்றும், 695வது திருநாமத்தில் 'வஸுதேவரின் புதல்வர்' என்றும் ஆச்சார்யாள் உரை அளித்திருந்தார்.

710. ஸர்வாஸுநிலயாய நம:

ஸர்வம் ஏவாஸவ: அனைத்து 'அஸு' 

ப்ராணா (அஸு என்னும்) ப்ராணன் 

ஜீவாத்மகே ஜீவாத்மா வடிவில் 

யஸ்மின்னாஶ்ரயே நிலீயந்தே எவரிடம் லயமடைந்து உறைவதால்

ஸர்வாஸுநிலய: எனவே, பகவான் 'ஸர்வாஸுநிலய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அனைத்து ப்ராணன்களும் ஜீவாத்மா ஸ்வரூபமான பகவானிடத்தே லயமடைந்து உறைவதால் அவர் 'ஸர்வாஸுநிலய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

711. அநலாய நம:

அலம் பர்யாப்தி: 'அலம்' அதாவது முடிவு (எல்லை) 

ஶக்திஸம்பதாம் (பகவானின்) ஆற்றல் மற்றும் செல்வத்திற்கு 

நாஸ்ய வித்யத தெரிவதில்லை 

இதி அனல: எனவே பகவான் 'அனல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஆற்றல் மற்றும் செல்வத்திற்கு எல்லைநிலமே இல்லை. எனவே அவர் 'அனல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

712. தர்ப்பக்னே நம:

தர்மவிருத்தே அறத்திற்கு புறம்பான 

பதி வழியில் 

திஶ்டதாம் இருப்போரின் (நடப்போரின்) 

தர்ப்பம் செருக்கை (புகழை) 

ஹந்தீதி அழிக்கிறார் 

தர்ப்பஹா எனவே பகவான் 'தர்ப்பஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்திற்குப் புறம்பான வழியில் நடப்போரின் செருக்கை (புகழை) அழிக்கிறார். எனவே அவர் 'தர்ப்பஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

713. தர்ப்பதாய நம:

தர்மவர்த்மனி அறவழியில் 

வர்த்தமானானாம் வழுவாது நடப்போருக்கு 

தர்ப்பம் கர்வம் அல்லது பெருமையை 

ததாதீதி அளிக்கிறார் 

தர்ப்பத: எனவே பகவான் 'தர்ப்பத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறவழியில் வழுவாது நடப்போருக்கு பெருமையை அளிக்கிறார். எனவே பகவான் 'தர்ப்பத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

714. த்ருப்தாய நம:

ஸ்வாத்மாம்ருதரஸ (தனது) ஆத்மானுபவம் என்னும் அமுத ரசத்தை 

ஆஸ்வாதநாத் சுவைத்து (அனுபவித்து)  

நித்ய என்றும் 

ப்ரமுதிதோ இன்பமடைவதால் 

த்ருப்த: பகவான் 'த்ருப்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் தனது ஆத்மானுபவம் எனும் அமுத ரசத்தை சுவைத்து (அனுபவித்து), அதனாலேயே இன்பமடைகிறார். எனவே அவர் 'த்ருப்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

715. துர்த்தராய நம:

ந ஶக்யா அறிய இயலாது 

தாரணா மனதை ஒருமுகப்படுத்துவதால் 

யஸ்ய ப்ரணிதானாதிஶு த்யானம் முதலியவற்றால் 

ஸர்வோபாதி விநிர்முக்தத்வாத் அனைத்து உபாதிகளுக்கும் (அதாவது வரைமுறைகள்) அப்பாற்பட்டு இருப்பதால் 

ததாபி ஆயினும் 

தத்ப்ரஸாதத: அவருடைய கருணையால் 

கைஸ்சித் எவரேனும் ஒருவர் 

து:கேன மிகவும் சிரமப்பட்டு 

தார்யதே ஹ்ருதயே தங்கள் மனதில் (இதயத்தில்) 

ஜன்மாந்தரஸஹஸ்ரேஶு  ஆயிரமாயிரம் பிறவிகள் 

பாவனாயோகாத் ஆழ்ந்த த்யானத்தால் 

தஸ்மாத் துர்த்தர: எனவே பகவான் 'துர்த்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எந்த ஒரு உபாதியாலும் வரையறுக்க முடியாதவர் (அத்தகைய வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்). எனவே அவரை மனதை ஒருமுகப்படுத்தும் த்யானம் முதலியவற்றால் எளிதில் அறிந்து கொள்ள இயலாது (மனதில் எளிதில் அவரை நிலைநிறுத்திவிட முடியாது). ஆயினும், ஆயிரமாயிரம் பிறவிகளில் புரியும் த்யானம் முதலிய முயற்சிகளால், பகவானின் அருளால் எவரேனும் ஒருவர் அவரை மிகுந்த சிரமங்களுக்குப் பிறந்து தங்கள் இதயத்தில் அறிய (தியானிக்க) இயலும். இவ்வாறு மிகுந்த கடினத்துடன் அறிய கூடியவர் ஆதலால் பகவான் 'துர்த்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

க்லேஶோSதிகதரஸ்தேஶாம் அவ்யக்தாஸக்தசேதஸாம் |

அவ்யக்தா ஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே || (ஸ்ரீமத் பகவத்கீதை 12.5)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: ஆனால், 'அவ்யக்தத்தில்' மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம். உடம்பெடுத்தோர் 'அவ்யக்த' நெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.

முன்பு 266வது திருநாமத்தில் 'துர்த்தர:' என்ற திருநாமத்திற்கு, அனைத்தையும் தாங்கும் பூமி முதலியவற்றை எளிதில் தாங்குகிறார் என்று உரை ஆச்சார்யாள் அளித்திருந்தார். அங்கே, இரண்டாவது உரையாக 'மனதில் தாங்குவதற்கு அரியவர்' என்று சூசகமாக கூறிய ஆச்சார்யாள், அதையே இந்த உரையில் விரிவாக உரைத்துள்ளார்.

716. அபராஜிதாய நம:

இல்லை 

ஆந்தரை: உள் எதிரிகளான 

ராகாதிபிர் விருப்பு, வெறுப்பு போன்ற 

பாஹ்யைரபி புற எதிரிகளான 

தானவாதிபி: அஸுரர் போன்ற 

ஶத்ரூபி: எதிரிகளால் 

பராஜித தோற்கடிப்படுவது 

இதி அபராஜித: எனவே, பகவான் 'அபராஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் விருப்பு, வெறுப்பு போன்ற உள் எதிரிகளாலும், அஸுரர்கள் போன்ற புற எதிரிகளாலும் வெல்ல இயலாதவர் (தோற்கடிக்கப் படுவதில்லை). எனவே அவர் 'அபராஜித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 


ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 222

75. ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண: |

ஶூரஸேனோ யதுஶ்ரேஶ்ட: ஸன்னிவாஸ: ஸுயாமுன: || 

இந்த எழுபத்தைந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

699. ஸத்கதி:, 700. ஸத்க்ருதி:, 701. ஸத்தா, 702. ஸத்பூதி:, 703. ஸத்பராயண: |

704. ஶூரஸேன:, 705. யதுஶ்ரேஶ்ட:, 706. ஸன்னிவாஸ:, 707. ஸுயாமுன: ||

699. ஸத்கதயே நம:

அஸ்தி ப்ரஹமேதி சேத்வேத ஸந்தமேனம் ததோ விது: | (தைத்ரீய உபநிஶத் 2.6)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ப்ரஹ்மம் இருப்பதாக ஏற்றுக்கொள்பவனை மேலோனாகக் கருதுகிறார்கள்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ரஹ்மாஸ்தீதி ப்ரஹ்மம் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்பவர் 

யே விதுஸ்தே ஸந்த: மேலானோராக அறியப்படுகிறார்கள் 

தை: அவர்களால் 

ப்ராப்யத இதி அடையப்படும் இலக்காக இருப்பதால் 

ஸத்கதி: பகவான் 'ஸத்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மம் உண்டு என்று ஏற்றுக்கொள்ளும் மேலானவர்கள் சென்றடையும் இலக்காக இருப்பதால் பகவான் 'ஸத்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸதீ கதிர்வ்ருத்தி: அவரது 'கதி' அதாவது வளர்ச்சி (வளர்தல்) 

ஸமுத்க்ருஶ்டா மிகச்சிறந்ததாகும் 

அஸ்யேதி வா ஸத்கதி: எனவே, பகவான் 'ஸத்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவானின் வளர்ச்சி (கதி) மிகச்சிறந்தது. எனவே அவர் 'ஸத்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

700. ஸத்க்ருதயே நம:

ஸதீ க்ருதி: நற்கர்மம் (சிறந்தவை) 

ஜகத்ரக்ஷணலக்ஷணா இந்த ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்தல் முதலான பகவானின் செயல்கள் 

அஸ்ய யஸ்மாத்தேன ஸத்க்ருதி: எனவே பகவான் 'ஸத்க்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்தல் முதலான பகவானின் செயல்கள் மிகச்சிறந்தவை. எனவே அவர் 'ஸத்க்ருதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் ஸப்தமம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஸத்க்ருதி: என்னும் இந்த திருநாமம் வரையில்) எழுநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

701. ஸத்தாயை நம:

ஸஜாதீய ஒரே வகையை சேர்ந்த பொருட்களுக்குள் 

விஜாதீய வெவ்வேறு பொருட்களின் இடையே 

ஸ்வகதபேத வேறுபாடுகள் 

ரஹிதா அற்ற 

அனுபூதி: அனுபவத்திற்கு 

ஸத்தா 'ஸத்தா' என்று பெயர். பகவான் எவ்வித வேறுபாடுகளும் அற்றவராக இருப்பதால் அவர் 'ஸத்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மல்லிகை, செம்பருத்தி போன்றவை மலர்கள் என்ற ஒரே வகையைச் சேர்ந்தாலும் அவற்றுக்குள் உருவம், நிறம், மணம் முதலிய வேறுபாடுகள் உள்ளன. இவை ஸஜாதீய (ஒரே வகையை சேர்ந்த பொருட்களுக்குள்) வேறுபாடுகள் என்று அழைக்கப்படும். பூக்கள், புத்தகங்கள் முதலிய பொருட்களின் இடையே உள்ள உருவம் முதலான வேறுபாடுகள் விஜாதீய வேறுபாடுகள் என்று அழைக்கப்படும். பகவான் இவ்வாறு எந்தவித வேறுபாடுகளும் அற்றவர் (ஏனெனில் அனைத்தும் பரப்ரஹ்மத்தின் வடிவங்களே). இவ்வாறு வேறுபாடுகள் அற்ற அனுபவத்தை 'ஸத்தா' என்று அழைப்பர். எனவே, இவ்வாறு வேறுபாடுகள் அற்ற அனுபவத்தை தனது இயற்கையாக கொண்டவராதலால் பகவான் 'ஸத்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஏகமேவாத்விதீயம்' (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) ஒன்றே. இரண்டாவது தத்துவம் என்று வேறொன்றில்லை (அத்விதீய).

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

702. ஸத்பூதயே நம:

ஸன்னேவ 'ஸத்' அதாவது உண்மையில் இருக்கக்கூடியதான 

பரமாத்மா பரம்பொருள் ஒன்றே 

சிதாத்மக: ஞானமயமான 

அபாதாத் (எவற்றாலும்) தடைபடாத 

பாஸமானத்வாச்ச ஒளிவீசும் 

ஸத்பூதி: 'ஸத்பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

நான்ய: வேறொருவருமில்லை (வேறெதுவுமில்லை).

என்றும் இருக்கக்கூடியதும், ஞானமயமாக தடையின்றி ஒளிவீசுபவரான பரமாத்மா (பரம்பொருளான நாரயணன்) ஒருவரே 'ஸத்பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். வேறொருவருமில்லை (வேறெதுவுமில்லை).

ப்ரதீதேர்பாத்யமானத்வாச்ச ஸன்னாப்யஸத் | ஶ்ரௌதோ யௌக்திகோ வா பாத: ப்ரபஞ்சஸ்ய விவக்ஷித: |

ஶ்ருதி (வேத) வாக்கியங்கள் மற்றும் உள்ள ப்ரமாணங்களினால் நாம் அறிவது என்னவென்றால், இந்தப் ப்ரபஞ்சத்தில் உள்ள (பரப்பொருளைத் தவிர்த்து) மற்றவை அனைத்துமே உண்மையில் நிலையற்றவை.

703. ஸத்பராயணாய நம:

ஸதாம் ஸத்புருஶர்கள் 

தத்வவிதாம் தத்துவத்தை (உண்மைப் பொருளை) உணர்ந்த 

பரம் மேன்மையானதும் 

ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்த 

அயனம் இதி அடையக்கூடிய இடமாக (பகவான்) இருப்பதால் 

ஸத்பராயணம் பகவான் 'ஸத்பராயணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தத்துவத்தை (அதாவது உண்மைப் பொருளை) உணர்ந்த ஸத்புருஶர்கள் சென்றடையக்கூடிய மேன்மையான, மிகச்சிறந்த இடமாக இருப்பதால் பகவான் 'ஸத்பராயணம்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அதாவது, பகவானிடம் ஒன்றுவதே முக்தி. 

704. ஶூரஸேனாய நம:

ஹனூமத்ப்ரமுகா: ஹனுமான் முதலான 

ஸைனிகா: படைவீரர்கள் (கொண்ட) 

ஶௌர்யஶாலினோ ஸூரர்களை 

யஸ்யாம் ஸேனாயாம் ஸா அத்தகைய படை 

ஶூரஸேனா 'ஶூரஸேனா' அதாவது ஸூரர்களைக் கொண்ட படை என்று அழைக்கப்படுகிறது 

யஸ்ய ஸ ஶூரஸேன: அத்தகைய படையை உடைய பகவான் (ஸ்ரீராமபிரான்) ஶூரஸேன: என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹனுமான் முதலான ஸூரர்களைக் படைவீரர்களாகக் கொண்ட படை (சேனை) ஶூரஸேனை என்று அழைக்கப்படும். அத்தகைய படையை உடையவராதலால் பகவான் (ஸ்ரீராமபிரான்) 'ஶூரஸேன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

705. யதுஶ்ரேஶ்டாய நம:

யதூனாம் யாதவர்களுக்குள் 

ப்ரதாநத்வாத் முதன்மையானவராதலால் 

யதுஶ்ரேஶ்ட: பகவான் 'யதுஶ்ரேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யதுகளுக்குள் (யாதவர்களுக்குள்) முதன்மையானவர் - யாதவர்களின் தலைவர். ஆதலால், பகவான் 'யதுஶ்ரேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

706. ஸன்னிவாஸாய நம:

ஸதாம் 'ஸத்' அதாவது 

விதுஶாம் கற்றோரின் 

ஆஶ்ரய: புகலிடமாக இருப்பதால் 

ஸன்னிவாஸ: பகவான் 'ஸன்னிவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸத்' அதாவது கற்றோரின் புகலிடமாக இருப்பதால் பகவான் 'ஸன்னிவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

707. ஸுயாமுனாய நம:

ஶோபனா அழகானது 

யாமுனா யமுனாஸம்பந்தினோ 'யாமுனா' அதாவது யமுனா நதிக்கரை வாசிகளான 

தேவகி வஸுதேவ நந்த யஶோதா பலபத்ர ஸுபத்ராதய: தேவகி, வஸுதேவர், நந்தகோபர், யஶோதா, பலராமன் மற்றும் ஸுபத்ரா ஆகியோரால் 

பரிவேஶ்டாரோSஸ்யேதி சூழப்பட்டு இருந்ததால் 

ஸுயாமுன: பகவான் 'ஸுயாமுன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (தனது க்ருஶ்ணாவதாரத்தில்) யமுனா நதிக்கரை வாசிகளான தேவகி, வஸுதேவர், நந்தகோபர், யஶோதா, பலராமன் மற்றும் ஸுபத்ரா ஆகியோரால் சூழப்பட்டு, மிகவும் அழகாக விளங்கினார்.  எனவே அவர் 'ஸுயாமுன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கோபவேஶதரா பகவான் இடையனாக இருந்தபொழுது 

யாமுனா: யமுனை நதிக்கரையில் 

பரிவேஶ்டார: சூழப்பட்டிருந்தார் 

பத்மாஸநாதய: தாமரை இருக்கை (பத்மாஸனம்) முதலான 

ஶோபனா அழகாக 

அஸ்யேதி ஸுயாமுன: எனவே, பகவான் 'ஸுயாமுன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (தனது க்ருஶ்ணாவதாரத்தில்) பகவான் இடையனாக இருந்தபொழுது, யமுனா நதிக்கரையில்  தாமரை இருக்கை (பத்மாஸனம்) முதலானவற்றால் சூழப்பட்டிருந்தார். எனவே, பகவான் 'ஸுயாமுன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!

சனி, ஜூன் 10, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 221

74. மனோஜவஸ்தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |

வஸுப்ரதோ வாஸூதேவோ வஸுர்வஸுமனா ஹவி: || 

இந்த எழுபத்து நான்காவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

690. மனோஜவ:, 691. தீர்த்தகர:, 692. வஸுரேதா:, 693. வஸுப்ரத: |

694. வஸுப்ரத:, 695. வாஸுதேவ:, 696. வஸு:, 697. வஸுமனா:, 698. ஹவி: ||

690. மனோஜவாய நம:

மனஸோ மனதின் 

வேக இவ வேகத்தைப் போன்று 

வேகோSஸ்ய விரைவாக 

ஸர்வம் அனைத்தையும் 

கதத்வாத் கடக்கிறார் 

மனோஜவ: எனவே பகவான் 'மனோஜவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மனதின் வேகத்திற்கு ஒப்பான வேகத்தோடு அனைத்தையும் கடக்கிறார். எனவே அவர் 'மனோஜவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

691. தீர்த்தகராய நம:

சதுர்தஶவித்யானாம் பதினான்கு வகை வித்யைகளையும் (பரப்ரஹ்மத்தை அடையும் வழிகள்) 

பாஹ்யவித்யா வேதத்திற்குப் புறம்பான வழிமுறைகளையும் 

ஸமயானாம் பல்வகை சமயங்களையும் 

ப்ரணேதா உருவாக்கியவர் 

ப்ரவக்தா சேதி அவற்றை மற்றவருக்கு போதித்தவர் 

தீர்த்தகர: எனவே பகவான் 'தீர்த்தகர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் 'தீர்த்தங்கள்' என்று அழைக்கப்படும் பதினான்கு வகை வித்தைகளையும், வேதத்திற்குப் புறம்பான வழிமுறைகளையும், பல்வகை சமயங்களையும் உருவாக்கி (கர்த்தா) அவற்றை மற்றவர்களுக்கும் போதித்தார். எனவே அவர் 'தீர்த்தகர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஹயக்ரீவரூபேண ஹயக்ரீவ அவதாரத்தில் 

மதுகைடபௌ மது, கைடபர்கள் ஆகிய அசுரர்களை 

ஹத்வா கொன்று 

விரிஞ்சாய நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவிற்கு 

ஸர்காதௌ படைப்பின் தொடக்கத்தில் 

ஸர்வா: அனைத்து 

ஶ்ருதி: வேதங்களையும் 

அன்யாஸ்ச மற்ற 

வித்யா உபதிஶன் உபதேசித்தார் 

வேதபாஹ்யா வேதத்திற்குப் புறம்பான 

வித்யா: வித்தைகளை ஸுரவைரினாம் நல்லாருக்கு (தேவர்களுக்கு) எதிரிகளுக்கு 

வஞ்சனாய வஞ்சனையாக 

சோபதிதேஶேதி அவர்களுக்கு உபதேசித்தார் 

பௌராணிகா: புராணிகர்கள் (புராண கதைகளை காலக்ஷேபம் செய்பவர்கள்) 

கதயந்தி கூறுவர்.

ஒரு முறை ப்ரஹ்மா வேதங்களை மறந்த பொழுது, அவரது படைப்பு தொழில் நின்று போனது. ப்ரஹ்மாவின் வேண்டுதலை ஏற்று பகவான் ஹயக்ரீவ அவதாரம் எடுத்து மது மற்றும் கைடபர் என்ற அஸுரர்களை அழித்து ப்ரஹ்மாவிற்கு வேதங்களை மீண்டும் உபதேசித்தார். மேலும், வேதத்திற்கும், தேவர்களுக்கும் புறம்பான அரசர்களை திசை திருப்பும் பொருட்டு பகவான் புத்த, மற்றும் ஜைன அவதாரங்களை எடுத்து அவர்களுக்கு வேதத்திற்குப் புறம்பான கருத்துக்களையும் போதித்தார். இந்த சரித்திரங்கள் ஸ்ரீமத் பாகவத மற்றும் விஶ்ணு புராணங்களில் உள்ளது. பௌராணிகர்களால் காலக்ஷேபங்களில் கூறப்படுகிறது.

692. வஸுரேதஸே நம:

வஸு ஸுவர்ணம் 'வஸு' என்றால் தங்கம் 

ரேதோSஸ்யேதி 'ரேதஸ்' அதாவது வீரியத்தை உடையவராதலால் 

வஸுரேதா பகவான் 'வஸுரேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தங்கமயமான வீரியத்தை (ரேதஸை) உடையவராதலால் பகவான் 'வஸுரேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

தேவ: பூர்வமப: ஸ்ருஶ்ட்வா தாஸு வீர்யமபாஸ்ருஜத் |

ததண்டமபவத்தைமம் ப்ரஹ்மண: காரணம் பரம் ||

அந்தப் பரம்பொருள் (பரப்ரஹ்மம்) முதலில் தண்ணீரை உருவாக்கி அதில் தனது வீரியத்தை வெளியிட்டார். அந்த வீரியம் தங்கமயமான அண்டமாக உருவெடுத்தது. அந்த அண்டத்துள் ப்ரஹ்மா தோன்றினார்.

இதி வ்யாஸ வசனாத் | இது பகவான் வ்யாஸ மஹரிஷியின் கூற்றாகும். 

693. வஸுப்ரதாய நம:

வஸு தனம் 'வஸு' என்றால் செல்வம் 

ப்ரகர்ஶேண நன்றாக (கைகளை திறந்து) 

ததாதி வழங்குவதால் 

ஸாஷாத்தனாத்யக்ஷோயம் நவநிதிகளுக்கும் அதிபதியான குபேரன் கூட 

இதரஸ்து தத்ப்ரஸாதாத் பகவானை பிரார்த்தித்து அவரது அருளாலேயே 

தனாத்யக்ஷ இதி செல்வத்திற்கு அதிபதியானான் 

வஸுப்ரத: எனவே பகவான் 'வஸுப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'வஸு' என்றழைக்கப்படும் செல்வத்தை பகவான் தனது கைகளைத் திறந்து அனைவருக்கும் வாரி வழங்குகிறார். செல்வத்தின் அதிபதி என்றழைக்கப்படும் குபேரனும் கூட பகவானை பிரார்த்தித்து அவரது அருளாலேயே செல்வத்தை (செல்வத்திற்கு அதிபதி என்ற பதவியை) அடைந்தான். எனவே பகவான் 'வஸுப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

694. வஸுப்ரதாய நம:

வஸு ப்ரக்ருஶ்டம் மோக்ஷாக்யம் 'வஸு' அதாவது மிகச்சிறந்த (உயர்ந்த) முக்தியை 

ஃபலம் பலனை 

பக்தேப்ய: தனது அடியவர்களுக்கு 

ப்ரததாதீதி வழங்குகிறார் 

த்விதீயோ வஸுப்ரத: எனவே பகவான் (இரண்டாவது முறையாக) 'வஸுப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அடியவர்களுக்கு 'வஸு' என்றழைக்கப்படும் உயர்ந்த பலனாகிய முக்தியை அளிக்கிறார். எனவே அவர் 'வஸுப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸஹஸ்ரநாமத்தில் பல திருநாமங்கள் இரண்டு முறை வந்துள்ளன. ஆனால், அடுத்தடுத்து ஒரே திருநாமம் வருவது இங்கு மட்டுமே.

'விஞ்ஞானமானந்த ப்ரஹ்மராதிர்தாது பராயணம் திஷ்டமானஸ்ய தத்வித:' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.9.28)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: பரப்ரஹ்மம் விஞ்ஞான மயமாகவும் ஆனந்த மயமாகவும் உள்ளது. பரப்ரஹ்மம் செல்வத்தை அளிப்பதோடு, ப்ரஹ்மானந்தத்தில் நிலைபெற்றிருக்கும் ஞானிக்கும் புகலிடமாக உள்ளது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

ஸுராரீனாம் நல்லோரின் (ஸுரர்கள்) எதிரிகளின் (அஸுரர்களின்) 

வஸூனி செல்வத்தை 

ப்ரகர்ஶேண நன்றாக 

கண்டயன் அழிக்கிறார் 

வா வஸுப்ரத: எனவே பகவான் 'வஸுப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அஸுரர்களின் (நல்லோரின் எதிரிகளின்) செல்வத்தை வளரவிடாது நன்றாக அழிக்கிறார். எனவே, பகவான் 'வஸுப்ரத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

695. வாஸுதேவாய நம:

வஸுதேவஸ்யாபத்யம் வஸுதேவரின் புதல்வராக அவதரித்ததால் 

வாஸுதேவ: பகவான் 'வாஸுதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வஸுதேவரின் புதல்வராக அவதரித்ததால் பகவான் 'வாஸுதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

696. வஸவே நம:

வஸந்தி பூதாநி தத்ர அவரிடத்தில் அனைத்து பூதங்களும் (பருப்பொருட்களும்) உறைகின்றன 

தேஶ்வயமபி வஸதீதி அவர் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைகிறார் 

வஸு: எனவே பகவான் 'வஸு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானிடத்தில் அனைத்து ஜீவராசிகளும் (பருப்பொருட்களும்) உறைகின்றன. அவரும் அனைத்திற்குள்ளும் (அனைவருக்குள்ளும்) வசிக்கிறார் (உறைகிறார்). எனவே அவர் 'வஸு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வஸு என்ற திருநாமத்திற்கு முந்தைய விளக்கங்கள்: முன்னர் 104-வது திருநாமத்தில் இந்த உரையை அளித்திருந்தாலும் பகவான் அக்னியின் வடிவாக இருக்கிறார் என்று ஆச்சார்யாள் பொருளுரைத்திருந்தார். 270-வது திருநாமத்தில் பிறருக்கு அளிக்கப்படும் செல்வமாக இருக்கிறார், மாயையினால் தனது இயற்கையான உருவத்தை பிறரிடமிருந்து மறைத்துக் கொள்கிறார், வாயு பகவானின் வடிவத்தில் ஆகாயத்தில் மட்டுமே வசிக்கிறார் என்று மேலும் பல விளக்கங்களை ஆச்சார்யாள் அளித்துள்ளார். எனவே, இங்கு புனருக்தி தோஷம் இல்லை.

697. வஸுமனஸே நம:

அவிஶேஶேண எவ்வித வேறுபாடுமின்றி 

ஸர்வேஶு விஶயேஶு அனைத்து பதார்த்தங்களிலும் 

வஸதீதி நீக்கமற நிறைந்திருக்கும் பொருளுக்கு 

வஸு 'வஸு' என்று பெயர். 

தாத்ருஶம் இவ்வாறான (அனைத்திலும் உறையும்) 

மனோSஸ்யேதி மனதை உடையவராதலால் 

வஸுமன: பகவான் 'வஸுமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவ்வித வேறுபாடுமின்றி அனைத்து பதார்த்தங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளுக்கு 'வஸு' என்று பெயர். இவ்வாறான (அனைத்திலும் உறையும்) மனதை உடையவராதலால் பகவான் 'வஸுமன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 105-வது திருநாமத்தில் விருப்பு, வெறுப்புக்கள், கர்வம் போன்ற தீய எண்ணங்களால் விகாரமடையாத மனதை 'மிகச்சிறந்த மனமுடையவர்' என்று ஆச்சார்யாள் உரை அளித்திருந்தார். வஸு மற்றும் வஸுமன: என்ற திருநாமங்கள் முன்பும் (104 மற்றும் 105வது திருநாமங்களாக) அடுத்தடுத்து வந்தன. இங்கும் இதே திருநாமங்கள் அடுத்தடுத்து வருவது சிறப்பு. 

698. ஹவிஶே நம:

'ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்ம ஹவி:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 4.24)

ஸ்ரீமத்பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: ப்ரஹ்மத்திற்கு அர்ப்பணமாக ப்ரஹ்ம ஹவியை (ப்ரஹ்மத்தால் ஹோமம் பண்ணுவோன், ப்ரஹ்மத்தின் செய்கையில் சமாதானம் எய்தினோன், அவன் ப்ரஹ்மத்தை அடைவான்).

இதி பகவத்வசனாத் ஹவி:

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவானின் இந்த கூற்றின்படி பரப்ரஹ்மமான பகவான் 'ஹவி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!