17. உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஶுரமோக: ஶுசிரூர்ஜித: |
அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||
இந்த பதினேழாம் ஸ்லோகத்தில் பதினொன்று (11) திருநாமங்கள் உள்ளன:
151. உபேந்த்ர:, 152. வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:,
156. ஊர்ஜித: |
157. அதீந்த்ர:, 158. ஸங்க்ரஹ:,
159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
151. உபேந்த்ர:, 152. வாமன:, 153. ப்ராம்ஶு:, 154. அமோக:, 155. ஶுசி:,
156. ஊர்ஜித: |
157. அதீந்த்ர:, 158. ஸங்க்ரஹ:,
159. ஸர்க:, 160. த்ருதாத்மா, 161. நியம:, 162. யம: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
159. ஓம் ஸர்காய நம:
ஸ்ருஜ்யரூபதயா படைக்கப்பட்டுள்ள அனைத்தின் வடிவாகவும்
ஸர்கஹேதுத்வாத்வா படைப்பின்
காரணமாய் இருப்பதாலும்
ஸர்க: பகவான் 'ஸர்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
படைப்பின்
காரணமாயும், (படைக்கப்பட்டுள்ள) ஸ்ருஷ்டியின் வடிவாகவும் தானே
இருப்பதால், பகவான் 'ஸர்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
160. ஓம் த்ருதாத்மனே நம:
ஏகரூபேண
ஒரே வடிவாய்
ஜன்மாதிரஹிததயா பிறப்பொன்றுமின்றி
த்ருத ஆத்மா யேன ஸ (ஆத்மாவைக்) கொண்டுள்ளபடியால்
த்ருதாத்மா பகவான் 'த்ருதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பிறப்பொன்றுமின்றி, என்றும் மாறாத ஒரே வடிவத்தைக்
உடையவராதலால், பகவான் 'த்ருதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
த்ருத
என்றால் தரித்தல்; ஆத்மா - அவ்வாறு தரித்தவரைக் குறிக்கும். பகவான் என்றும் மாறாத
வடிவை தரித்திருக்கிறார் என்பது இந்தத் திருநாமத்தின் பொருளாகும்.
161. ஓம் நியமாய நம:
ஸ்வேஶு
அவரவரை
ஸ்வேஶ்வதிகாரேஶு அவரவருக்குரிய அதிகாரங்களில் (பதவிகளில்)
ப்ரஜா அனைவரையும்
நியமயதீதி நியமிக்கிறார்
நியம: எனவே, பகவான் 'நியம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொருவரையும், அவரவருக்குரிய அதிகாரங்களில் (பதவிகளில்) நியமிப்பதால், பகவான் 'நியம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
162. ஓம் யமாய நம:
அந்தர்யச்சதீதி
அனைவருக்கும்
அந்தர்யாமியாய் இருந்து அவர்களை ஆள்வதால்
யம: எனவே, பகவான் 'யம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவருக்கும்
அந்தர்யாமியாய் இருந்து அவர்களை ஆள்வதால், பகவான் 'யம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நியம: - வெளியிலிருந்து அவரவரை தத்தம் பதவியில் நியமிப்பதன் மூலம் ஆள்கிறார். யம: - அந்தர்யாமியாய் இருந்து அவர்களை உள்ளிருந்தும் ஆள்கிறார்.