ஞாயிறு, ஜனவரி 23, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 201

54. ஸோமபோSம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: |

வினயோ ஜய: ஸத்யஸந்தோ தாஶார்ஹ: ஸாத்வதாம்பதி: ||

இந்த ஐம்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

503. ஸோமப:, 504. அம்ருதப:, 505. ஸோம:, 506. புருஜித், 507. புருஸத்தம: |

508. வினய:, 509. ஜய:, 510. ஸத்யஸந்த:, 511. தாஶார்ஹ:, 512. ஸாத்வதாம்பதி: ||

503. ஓம் ஸோமபாய நம:

ஜன்மஸம்ஸார பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின் 

பந்தனாத் ஸோமம் பிபதி 'ஸோமரஸத்தை' பருகுகிறார் 

ஸர்வயக்ஞேஶு அனைத்து வேள்விகளிலும் 

யஶ்டவ்ய (அந்தந்த வேள்விகளால்) வழிபடப்படும் 

தேவதாரூபேணேதி தெய்வங்களின் வடிவாக 

ஸோமப: எனவே பகவான் 'ஸோமப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வேள்விகளிலும், அந்த வேள்விகளால் வழிபடப்படும் தெய்வங்கள் (தேவதைகளின்) வடிவில் பகவானே ஸோமரஸத்தைப் பருகுகிறார். எனவே, அவர் 'ஸோமப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

தர்மமர்யாதாம் அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு 

தர்ஶயன் (வேள்விகளில்) தோன்றும் 

யஜமானரூபேண வா (ஸோமரஸத்தை பருகும், அந்த வேள்வியை புரியும்) வேள்வியின் தலைவரின் வடிவினராய் இருப்பதால் 

ஸோமப: பகவான் 'ஸோமப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு (ஸோமரஸத்தை பருகும், அந்த வேள்வியை புரியும்) வேள்வியின் தலைவரின் வடிவினராய் இருப்பதால், பகவான் 'ஸோமப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

504. ஓம் அம்ருதபாய நம:

ஸ்வாத்மாம்ருதரஸம் தனது ஆத்மானந்தமாகிய அமுதத்தை 

பிபன் (எப்பொழுதும்) பருகுபவராகையால் 

அம்ருதப: பகவான் 'அம்ருதப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது ஆத்ம ஆனந்தத்திலேயே பகவான் எப்பொழுதும் திளைக்கிறார். அந்த ஆத்மானந்தமாகிய அமுதத்தை எப்பொழுதும் பருகுகிறார். எனவே அவர் 'அம்ருதப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அஸுரை: அஸுரர்களால் 

ஹ்ரியமானம் கவரப்பட்ட 

அம்ருதம் அமுதத்தை 

ரக்ஷித்வா (அந்த அஸுரர்கள் அதை பருகிவிடாது) காத்து 

தேவான் தேவர்களுக்கு 

பாயயித்வா அந்த அமுதத்தை வழங்கி 

ஸ்வயமப்ய பின்னர் தானும் 

பிபதிதி வா பருகியதால் 

அம்ருதப: பகவான் 'அம்ருதப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (பாற்கடலை கடையும் பொழுது) அஸுரர்களால் கவரப்பட்ட அமுதத்தைக் காத்து, அதை தேவர்களுக்கு அளித்து, பின்பு தானும் அந்த அமுதத்தைப் பருகியதால் பகவான் 'அம்ருதப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மோஹினி அவதார சரித்திரம்: துர்வாஸர் தான் அளித்த மஹாலக்ஷ்மியின் மாலையை அவமதித்த இந்திரனுக்கும் (தேவர்களுக்கும்) நரை மற்றும் மூப்பு உண்டாகுமாறு சாபம் அளிக்கிறார். இதனால் அஸுரர்கள், தேவர்களைத் தோற்கடித்து ஸ்வர்கத்தை கைப்பற்றினர். பகவானின் ஆணையின் படி அஸுரர்களுடன் சமாதானம் செய்துகொண்டு தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் வந்தவுடன் அஸுரர்கள் அதைத் அபகரித்துச் சென்றனர். நரை, மூப்புடன் கூடிய தேவர்களால் அவர்களை எதிர்க்க இயலவில்லை. அவர்களின் நிலையை உணர்ந்த பகவான் ஒரு அழகிய பெண்ணின் வடிவைத் தாங்கி அஸுரர்களிடம் சென்று தானே அமுதத்தை பகிர்ந்து அளிப்பதாய் கூறுகிறார். அவரது அழகில் மயங்கிய அஸுரர்கள் அவரிடமே அந்த அமுதத்தை அளித்து அதைப் பகிர்ந்தளிக்கும் படி வேண்டினர். அஸுரர்கள் தம் அழகில் மயங்கி இருக்கும் வேளையில், பகவான் அனைத்து அழுத்தத்தையும் தேவர்களுக்கே பகிர்ந்து அளித்து, தானும் உண்டார்.

மேலும், தேவர்களைப் போல உருவம் தாங்கி தேவர்களின் வரிசையில் வந்த ஸ்வர்பானு என்ற அஸுரனை, சந்திரனும், சூரியனும் கைகாட்ட, தமது அகப்பையால் அவனது தலையைக் கிள்ளி அவனை ராகு, கேது என்ற இரண்டு கிரஹங்களாக மாற்றினார். 

505. ஓம் ஸோமாய நம:

ஸோம ரூபேண திங்களின் வடிவில் 

ஒளஶதி செடி, கொடி மற்றும் மூலிகைகளை 

போஶயன் அவற்றை வளர்த்துப் பாதுகாப்பதால் 

ஸோம: பகவான் 'ஸோம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் திங்களின் (வெண்மதியின்) வடிவில் செடி, கொடிகள் மற்றும் மூலிகைகளை வளர்த்துப் பாதுகாக்கிறார். எனவே அவர் 'ஸோம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

உமயா பார்வதியோடு 

ஸஹித கூடிய 

ஶிவோ வா பகவான் பரமசிவனாய் (பரமசிவனின் வடிவினராய்) இருப்பதால் 

ஸோம: பகவான் 'ஸோம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பார்வதியோடு கூடிய பரமசிவனின் வடிவினராய் இருப்பதால் பகவான் 'ஸோம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ+உமா = ஸோம

'ஓம் நம: ஸோமாய ச ருத்ராய ச...' (ஶத ருத்ரீயம் எட்டாம் அனுவாகம்) 

506. ஓம் புருஜிதே நம:

புரூன் பஹூன் 'புரு' அதாவது பற்பலரை 

ஜயதீதி வெற்றி கொண்டவராகையால் 

புருஜித் பகவான் 'புருஜித்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பற்பலரை ('புரு') வெற்றி கொண்டவராகையால் பகவான் 'புருஜித்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

507. ஓம் புருஸத்தமாய நம:

விஶ்வரூபத்வாத் புரு: இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் 'புரு' என்றழைக்கப்படுகிறார். 

உத்க்ருஶ்டத்வாத் ஸத்தம: அனைவரைக் காட்டிலும் சிறந்தவராய் இருப்பதால் அவர் 'ஸத்தம:' என்றும் அழைக்கப்படுகிறார். 

புருஶ்ஸ்வாஸௌ 'புரு' வாகவும் 

ஸத்தமஸ்சேதி 'ஸத்தம' மானவராயும் இருப்பதால் 

புருஸத்தம: பகவான் 'புருஸத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் 'புரு' என்றழைக்கப்படுகிறார். அனைவரைக் காட்டிலும் சிறந்தவராய் இருப்பதால் 'ஸத்தம:' என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாறு, ப்ரபஞ்ச வடிவில் புருவாகவும், அனைவரைக் காட்டிலும் சிறந்தவரான 'ஸத்தம:' மானவராயும் இருப்பதால் பகவான் 'புருஸத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.   

508. ஓம் விநயாய நம:

விநயம் தண்டம் 'விநயம்' என்றால் தண்டனையைக் குறிக்கும் 

கரோதி அளிக்கிறார் (செய்விக்கிறார்) 

துஶ்டாநாமிதி தீயோருக்கு 

வினய: எனவே பகவான் 'வினய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்தினின்று பிழறும் தீயோருக்கு தண்டனை (விநயம்) அளிக்கிறார். எனவே அவர் 'வினய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வினய என்ற சொல்லிற்கு திருத்துவது என்று ஒரு பொருள். இங்கு ஆச்சார்யாள் அந்தப் பொருளில் உரை அளித்துள்ளார். தண்டனை அளிப்பதன் மூலம் பகவான் தீயோரையும் திருத்துகிறார். 

509. ஓம் ஜயாய நம:

ஸமஸ்தானி அனைத்து 

பூதாநி ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்) 

ஜயதீதி வெற்றி கொள்கிறார் 

ஜய: எனவே பகவான் 'ஜய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்) வெற்றி கொள்கிறார். எனவே பகவான் 'ஜய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

510. ஓம் ஸத்யஸந்தாய நம:

ஸத்யா உண்மையானது (என்றும் தவறுவதில்லை) 

ஸந்தா ஸங்கல்ப: 'ஸந்தா' அதாவது அவரின் எண்ணங்கள் (அல்லது விருப்பங்கள்) 

அஸ்யேதி ஸத்யஸந்த: எனவே பகவான் 'ஸத்யஸந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் எண்ணங்களும், தீர்மானங்களும் என்றும் உண்மையானவை (அவை என்றும் தவறுவதில்லை). எனவே அவர் 'ஸத்யஸந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

'ஸத்யஸங்கல்ப:' (சாந்தோக்ய உபநிஶத் 8.1.5)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவானின்) எண்ணங்கள் என்றும் ஈடேறப்பெறுபவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.     

511. ஓம் தாஶார்ஹாய நம:

தாஶோ தானம் 'தாஶ' என்ற சொல்லிற்கு தானம் என்று பொருள் 

தமர்ஹதீதி அதற்குத் (தானங்களை ஏற்பதற்கு) தகுதி உடையவராதலால் 

தாஶார்ஹ: பகவான் 'தாஶார்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தானத்தை 'தாஶ' என்றழைப்பர். அனைத்து தானங்களையும் ஏற்கும் தகுதி (அருகதை) உடையவராதலால் பகவான் 'தாஶார்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

தஶார்ஹகுல 'தஶார்ஹ' குலத்தில் 

உத்பவத்வாத்வா உதித்தவராகையால் 

தாஶார்ஹ: பகவான் 'தாஶார்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தமது கிருஷ்ணாவதாரத்தில் 'தஶார்ஹ' குலத்தில் உதித்தார். எனவே அவர் 'தாஶார்ஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

512. ஓம் ஸாத்வதாம்பதயே நம:

ஸாத்வதம் நாம தந்த்ரம் 'ஸாத்வத' என்று ஒரு தந்திரம் உள்ளது 'தத்கரோதி ததாசஶ்டே' (அந்த ஸாத்வத தந்திரத்தை) படைத்தவர்கள் அல்லது அதற்கு உரை (வ்யாக்யானம்) எழுதியவர்கள் என்ற பொருளில் 

இதி ணிசி க்ருதே 'ஸாத்வதம்' என்ற வார்த்தையோடு 'ணிசி' யும் 

க்விப்ப்ரத்யயே 'க்விப்' விகுதியும் சேர்ந்து 

ணிலோபே ச 'ணி' என்ற விகுதியை விடுக்கும் பொழுது 

க்ருதே பதம் ஸாத்வத் 'ஸாத்வத்' என்ற பதம் பிறக்கிறது. 

தேஶாம் பதி: அத்தகைய (ஸாத்வத தந்திரத்தை உருவாக்கிய, அதற்கு உரை எழுதிய) ஸாத்வதர்களின் தலைவராக 

யோகக்ஷேமகர இதி அவர்களுக்கு யோகத்தையும் (இல்லாததை அளித்தும்), க்ஷேமத்தையும் (உள்ளவற்றைக் காத்தும்) அளித்து அவர்களை காத்து வழிநடத்துவதால் 

ஸாத்வதாம் பதி: பகவான் 'ஸாத்வதாம் பதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாத்வதம் என்ற பெயருடைய ஒரு தந்திரம் உள்ளது (தந்திரம் என்பது ஆகமம், ஸாஸ்த்ரம் போன்ற ஒரு வழிமுறையாகும். பொதுவாக, உருவ வழிபாடு மற்றும் திருக்கோயில்களை நிர்மாணித்தல் போன்றவை இவற்றில் விளக்கப்பட்டுள்ளது). அவற்றை உருவாக்கியவர்கள் மற்றும் அவற்றின் உரை ஆசிரியர்கள் 'ஸாத்வதர்கள்' என்று அழைக்கப்படுவர். அத்தகைய ஸாத்வதர்களின் பதியாக (தலைவராக) அவர்களுக்கு இல்லாதவற்றை அளித்தும் (யோகம்), இருப்பவற்றைக் காத்தும் (க்ஷேமம்) அவர்களை காத்து வழிநடத்துவதால் பகவான் 'ஸாத்வதாம் பதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

மேலும் ஆச்சார்யாள் 'ஸாத்வத' என்ற பதத்திலிருந்து 'ஸாத்வத்' என்ற பதம் எவ்வாறு பிறக்கிறது என்பதற்கு இலக்கண விதிமுறைகளையும் விளக்கியுள்ளார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!




திங்கள், ஜனவரி 10, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 200

53. உத்தரோ கோபதிர்கோப்தா ஞானகம்ய: புராதன: |

ஶரீரபூதப்ருத்போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: ||

இந்த ஐம்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

494. உத்தர:, 495. கோபதி:, 496. கோப்தா, 497. ஞானகம்ய:, 498. புராதன: |

499. ஶரீரபூதப்ருத், 500. போக்தா, 501. கபீந்த்ர:, 502. பூரிதக்ஷிண: || 

494. ஓம் உத்தராய நம:

ஜன்மஸம்ஸார பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின் 

பந்தனாத் தளைகளிலிருந்து 

உத்தரதி (நம்மை) விடுவிக்கிறார் 

இதி உத்தர: எனவே, பகவான் 'உத்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின் தளைகளிலிருந்து (நம்மை) விடுவிக்கிறார். எனவே, பகவான் 'உத்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வ அனைவரைக் காட்டிலும் 

உத்க்ருஶ்ட மேலானவராதலால் 

இதி வா உத்தர: பகவான் 'உத்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக்காட்டிலும் மேலானவராதலால், பகவான் 'உத்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'விஶ்வஸ்மாதிந்த்ர உத்தர:'

அனைவரைக் காட்டிலும் பரம்பொருள் (இந்த்ர) உயர்ந்தவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

இங்கு இந்த்ர என்ற பதம் பரம்பொருளான பரமாத்மாவையே குறிக்கிறது. தேவர்களின் தலைவரான இந்திரனை அல்ல. 

495. ஓம் கோபதயே நம:

கவாம் ஆவினங்களை 

பாலனாத் காப்பவராக (பசுக்களை மேய்ப்பவராக) 

கோபவேஶதரோ இடையனாக (ஆயர்குலத்தவராக) தோன்றியதால் 

கோபதி: பகவான் (கிருஷ்ணர்) 'கோபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது கிருஷ்ணாவதாரத்தில் ஆவினங்களை காப்பவராக, இடையனாக தோன்றியதால் பகவான் 'கோபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

கௌர்மஹீ: பூமாதேவியே 'கௌ' என்றும் அழைப்பர் 

தஸ்யா: பதித்வாத்வா அவரின் (பூமாதேவியின்) கணவரானபடியால் 

கோபதி: பகவான் 'கோபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, 'கௌ' என்று அழைக்கப்படும் பூமாதேவியின் கணவரானபடியால் பகவான் 'கோபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

496. ஓம் கோப்த்ரே நம:

ஸமஸ்தபூதாநி அனைத்து உயிரினங்களையும் 

பாலயன் காக்கிறார் 

ரக்ஷகோ ஜகத: இந்தப் ப்ரபஞ்சம் முழுவதையும் காக்கிறார் 

இதி கோப்தா எனவே, பகவான் 'கோப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தையும், அனைத்து உயிரினங்களையும் காக்கிறார். எனவே பகவான் 'கோப்தா' என்று திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

497. ஓம் ஞானகம்யாய நம:

ந கர்மணா வெறுமனே கடமைகளை ஆற்றுவதால் அல்ல 

ந ஞானகர்மப்யாம் ஞானமும், செயலும் கலந்து செயல்படுவதால் அல்ல 

வா கம்யதே அவரை (பகவானை) அடைவது 

கிந்து ஆயினும் 

ஞானேன (வேதங்கள், உபநிடதங்கள், அற நூல்களின் மூலம் பெறப்படும்) அறிவினால் 

கம்யதே அவர் அடையப்படுகிறார் 

இதி வா ஞானகம்ய: எனவே, பகவான் 'ஞானகம்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கடமைகளை ஆற்றுவதாலோ, ஞானமும், கர்மமும் கலந்து செயல்படுவதாலோ அடையமுடியாதவர் (அறியப்பட முடியாதவர்) பகவான். ஆயினும், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் அறநூல்கள் மூலம் பெறப்படும் தூய அறிவால் பகவானை அறியவும், அடையவும் முடியும். எனவே, அவர் 'ஞானகம்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

498. ஓம் புராதனாய நம:

காலேன காலத்தால் 

அபரிச்சின்னத்வாத் வரையறுக்கப்படாதவர், ஆதலால் 

புராபி (அனைவருக்கும்) மிகவும் முற்பட்ட காலத்திலிருந்தே 

பவதீதி இருப்பவர் 

புராதன: பகவான் 'புராதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் காலம் என்னும் தத்துவத்திற்கு அப்பாற்பட்டவர். காலத்தால் வரையறுக்கப்படாதவர். எனவே, அவர் அனைவருக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே (எவரும் தோன்றும் முன்னரே) இருப்பவர். எனவே அவர் 'புராதன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

499. ஓம் ஶரீரபூதப்ருதே நம:

ஶரீர (ஒவ்வொரு உயிரினத்திற்கும்) உடலை 

ஆரம்பக தோற்றுவிக்கும் 

பூதானம் (நீர், நிலம், நெருப்பு போன்ற) பூதங்களை 

பரணாத் தாங்குகிறார் 

ப்ராணரூபதர: (அவற்றின்) உயிராக இருந்து 

ஶரீரபூதப்ருத் எனவே, பகவான் 'ஶரீரபூதப்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு உயிரினத்தின் உடலும் பஞ்ச பூதம் முதலிய தத்துவங்களால் ஆனது. அந்த பஞ்சபூதம் முதலிய தத்துவங்களையும் அவற்றின் உயிராக இருந்து பகவான் தாங்குகிறார். எனவே அவர் 'ஶரீரபூதப்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

500. ஓம் போக்த்ரே நம:

பாலகத்வாத் (அனைவரையும்) காப்பாற்றுவதால் 

போக்தா பகவான் 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் காக்கும் கடவுளாவார். அனைவரையும் காப்பாற்றுவதால் அவர் 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பரமானந்த உயரிய ஆனந்தத்தை 

ஸந்தோஹ அளவிடமுடியாத 

ஸம்போகாத்வா அனுபவிப்பவராதலால் 

போக்தா பகவான் 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் எப்பொழுதும் உயர்ந்த, அளவிடமுடியாத ஆனந்தத்தை இடைவிடாது அனுபவிக்கிறார். எனவே அவர் 'போக்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் பஞ்சமம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (போக்தா என்னும் இந்த திருநாமம் வரையில்) ஐநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது. 

501. ஓம் கபீந்த்ராய நம:

கபிஸ்சாஸா(வ்) கபி அதாவது பன்றியின் உருவத்துடன் இருப்பதோடு 

இந்த்ரஸ்சேதி இந்திரனாகவும் (அதாவது சிறந்தவராகவும்) இருப்பதால் 

கபிர்வராஹ: 'கபி' என்றால் வராஹம் அதாவது பன்றி 

வாராஹம் அந்த பன்றியின் 

வபுராஸ்தித: (ஹிரண்யாக்ஷனைக் கொல்ல வராஹ அவதாரம் எடுத்த பொழுது) உடலைத் தாங்கியவராதலால் 

கபீந்த்ர: பகவான் 'கபீந்த்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் ஹிரண்யாக்ஷனைக் கொல்ல பன்றியின் உருவத்தில் (கபி) அவதரித்தார். இவ்வாறு கபியாகவும் (பன்றியின் வடிவோடு அவதரித்தவரும்) இந்த்ரனாகவும் (அனைவரைக் காட்டிலும் சிறந்தவராகவும்) இருப்பதால் பகவான் 'கபீந்த்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கபீனாம் 'கபி' அதாவது வாநரானாம் குரங்குகளின் 

இந்த்ர: (சேனைக்குத்) தலைவராக இருந்ததால் 

கபீந்த்ர: ராகவோ வா பகவான் ஸ்ரீராமர் 'கபீந்த்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இராமாவதாரத்தின் பொழுது 'கபி' அதாவது குரங்குகளின் சேனைக்குத் தலைவராக இருந்தபடியால் 'கபீந்த்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

502. ஓம் பூரிதக்ஷிணாய நம:

பூரய: பஹ்வய: 'பூரய:' என்றால் நிறைய 

யக்ஞதக்ஷிணா: வேள்வியின் காணிக்கைகள் 

தர்மமர்யாதாம் அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு 

தர்ஶயதோ அளிக்கின்றனர் 

யக்ஞம் குர்வதோ வேள்விகளை புரியும் பொழுது 

வித்யந்த இதி முடிவில் 

பூரிதக்ஷிண: எனவே பகவான் 'பூரிதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு புரியப்படும் வேள்விகளின் முடிவில் நிரம்ப காணிக்கைகளை பகவானுக்கு (அவரின் ப்ரதியான வேள்வியை புரியும் அந்தணர்களுக்கு) அளிக்கின்றனர். எனவே, பகவான் 'பூரிதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்திற்கு மாற்று உரையாக "பகவான் தாமே அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு பற்பல வேள்விகளை புரிந்து, அவற்றின் முடிவில் நிரம்ப காணிக்கைகளை மற்றவருக்கு வழங்கினார். எனவே, அவர் 'பூரிதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்" என்றும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!