18. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது:|
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||
இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |
169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |
169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
163. ஓம் வேத்யாய நம:
நி:ஶ்ரேயஸார்த்திபிர் மிகச்சிறந்த பலனான (மோக்ஷத்தை) விரும்புவர்களால்
வேதனார்ஹத்வாத் அறியப்படுபவர்
வேத்ய:
எனவே, பகவான் 'வேத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மிகச்சிறந்த பலனான
மோக்ஷத்தை விரும்புவர்களால் பகவான் அறியப்படுகிறார்.எனவே, அவர் 'வேத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நி:ஶ்ரேயஸ் - உயர்ந்த பலன்; ஆர்த்தி - விழைபவர்கள்; வேதனார் – அறியப்படுபவர்
164. ஓம் வைத்யாய நம:
ஸர்வவித்யானாம்
அனைத்து
வித்தைகளையும் (ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்)
வேதித்ருத்வாத் அறிபவராதலால்
வைத்ய:
பகவான் 'வைத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து
வித்தைகளையும் (ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும்) அறிபவராதலால் பகவான் 'வைத்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீக்ருஷ்ண
அவதாரத்தில் ஸாந்தீபனி முனிவரிடத்தில் அறுபத்து நான்கே நாட்களுள் ஆயக்கலைகள்
அனைத்தையும் பயின்றார் என்று ஸ்ரீமத்பாகவதம் கூறுகிறது.