சனி, ஜூன் 30, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 61

4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

32. ஓம் பாவனாய நம:
ஸர்வேஶாம் அனைத்து போக்த்ருணாம் அனுபவிப்பவர்களுக்கு ஃபலானி (அவர்களின் விருப்பம், மற்றும் கர்மத்திற்குத் தக்கவாறு) பலன்களை பாவயதீதி உருவாக்குவதால் பாவன: அவர் 'பாவன:' என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து வகையான சுகங்களையும் அனுபவிப்பவர்களுக்கு, (அவர்களின் விருப்பம், மற்றும் கர்மத்திற்குத் தக்கவாறு) பலன்களை உருவாக்குவதால் பகவான் 'பாவன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வஃபலதாத்ருத்வம் பகவானே அனைத்துப் பலன்களையும் வழங்குகிறார் என்பது,

'ஃபலமத உபபத்தே:' (ப்ரஹ்ம ஸூத்ரம் 3.2.38)
அனைத்துப் பலன்களும் ப்ரஹ்மத்தினிடத்தினின்றே தோன்றுகின்றன.

இத்யத்ர ப்ரதிபாதிதம் இதனால் (மேற்கண்ட ப்ரஹ்ம ஸூத்ரத்தினால்) நிரூபிக்கப்பட்டுள்ளது.

33. ஓம் பர்த்ரே நம:
ப்ரபஞ்சஸ்ய இந்த ப்ரபஞ்சத்தை அதிஶ்டானத்வேன தனது சக்தியால் பரணாத் தாங்குவதால் பர்தா பகவான் 'பர்தா' என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தை தனது சக்தியால் தாங்குவதால் பகவான் 'பர்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞாயிறு, ஜூன் 17, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 60

4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதிஅவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

30. ஓம் நிதயேSவ்யயாய நம:
ப்ரளயகாலேஸ்மின் அழிக்கும் (ப்ரளய) காலத்தில் ஸர்வம் அனைத்தும் நிதீயத (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதால் இதி அவர் நிதி: 'நிதி:' என்று அழைக்கப்படுகிறார்.

'கர்மண்யதிகரணே ச' (பாணினி ஸூத்ரம் 3.3.93)
இதி கி ப்ரத்யய:
இந்த பாணினி ஸூத்ரத்தின் படி இங்கு 'கி' விகுதி கூட்டப்பட்டுள்ளது.

ஸ ஏவ இப்பொழுது நிதிர்விஶேஶ்யதே 'நிதி'யை மேலும் ப்ரத்யேகமாக அடையாளப்படுத்திக் காட்டுகிறார்.

அவ்யய: அவினஶ்வரோ எக்காலத்திலும் அழிவே இல்லாத நிதிரித்யர்த்த: நிதி என்று இதற்குப் பொருள்.

அழிக்கும் (ப்ரளய) காலத்தில் அனைத்தும் (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதா லும், எக்காலத்திலும் அழிவே இல்லாததாலும், பகவான் "நிதி: அவ்யய:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

31. ஓம் ஸம்பவாய நம:
ஸ்வேச்சயா (கர்மாதீனமாக இல்லாமல்) தனது சுய விருப்பத்தால் ஸமீசீனம் புகழோடு பவனமஸ்யேதி பிறப்பதால் (அவதாரம் எடுப்பதால்) ஸம்பவ: அவர் 'சம்பவ:' என்று அழைக்கப்படுகிறார்.

(நம்மைபோன்று கர்மாதீனமாக இல்லாமல்) தனது சுய விருப்பத்தால் புகழோடு பிறப்பதால் (அவதாரம் எடுப்பதால்) பகவான் 'ஸம்பவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே' (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

அத துஶ்டவிநாஶாய ஸாதூனாம் ரக்ஷணாய ச |
ஸ்வேச்சயா ஸம்பவாம்யேவம் கர்பதுக்கவிவர்ஜித: ||’
தீயன செய்வோரை அழிக்கவும், நல்லோரைக் காக்கவும், நான் எனது விருப்பத்தின் படி கர்ப்பமும் அதைச்சார்ந்த துன்பங்களும் இன்றி பிறக்கிறேன்.
இதி | இவ்வாறு, பகவானின் மற்றொரு வாக்கும் உள்ளது.
மேற்கண்ட ஸ்லோகம் எந்த இதிஹாஸ, புராணத்தில் உள்ளது என்ற குறிப்பு இல்லை. ஆனால், இதன் பொருள் பகவத்கீதையிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஸ்லோகத்தை ஒத்தே உள்ளது.

செவ்வாய், ஜூன் 12, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 59

4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதிஅவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

28. ஓம் ஸ்தாணவே நம:
ஸ்திரத்வாத் (நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் ஸ்தாணு: பகவான் ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார்.

(நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் பகவான் ஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

29. ஓம் பூதாதயே நம:
பூதானாம் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதிகாரணத்வாத் மூல காரணமாய் இருப்பதால் பூதாதி: பகவான் பூதாதி:’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் பூதாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வெள்ளி, ஜூன் 08, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 58

4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதிஅவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

26. ஓம் ஶர்வாய நம:
ஶ்ருணாதி 'ஶ்ருணாதி' என்றால் ஸம்ஹாரஸமயே பிரளய (அழிக்கும்) காலத்தில் ஸம்ஹரதி கொல்வதால் ஸகலா: ப்ரஜா: அனைத்து உயிர்களையும் இதி 'ஶர்வ:' பகவான் 'ஶர்வ:' என்று அழைக்கப்படுகிறார்.

பிரளய (அழிக்கும்) காலத்தில் அனைத்து உயிர்களையும் கொல்வதால் பகவான் 'ஶர்வ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

27. ஓம் ஶிவாய நம:
நிஸ்த்ரைகுண்யதயா முக்குணங்களின் சேர்க்கை இன்றி ஶுத்தத்வாத் தூய்மையானவராக இருப்பதால் ஶிவ: பகவான் 'ஶிவ:' என்று அழைக்கப்படுகிறார்.

முக்குணங்களின் சேர்க்கை இன்றி தூய்மையானவராக இருப்பதால் பகவான் 'ஶிவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஶிவ என்றால் தூய்மை என்று ஒரு பொருள் உண்டு

'ஸ ப்ரஹ்மா ஸ ஶிவ:' (கைவல்ய உபநிஶத் 8)
கைவல்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அவரே ப்ரஹ்மா (நான்முகக்கடவுள்), அவரே சிவன்...

இதி இங்கு அபேத (அனைத்தும் ஒன்றே என்ற) அத்வைத உபதேஶா தத்துவத்தின் படி ஶிவா 'ஶிவ' ஆதி முதலிய நாமபிர் நாமங்களாலும் ஹரிரேவ பகவான் ஹரி ஒருவரே ஸ்தூயதே துதிக்கப்படுகிறார் |
கைவல்ய உபநிஶத்தில் சிவபெருமானைப் போற்றிக் கூறும் வாக்கியமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. சிவனை போற்றும் அனைத்தும் பகவான் ஹரியையே போற்றும் என்பது அத்வைதத் தத்துவம். இதை ஆசார்யர் தொடக்கத்திலேயே விளக்கியுள்ளார். எனவே, சிவ முதலிய திருநாமங்களும் பகவான் ஹரியையே போற்றுவதாகக் கொள்ளவேண்டும்.

செவ்வாய், ஜூன் 05, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 57


4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

25. ஓம் ஸர்வஸ்மை நம:
அஸதஸ்ச ஸதஸ்சைவ ஸர்வஸ்ய ப்ரபவாப்யயாத் |
ஸர்வஸ்ய ஸர்வதா ஞானாத் ஸர்வமேன ப்ரசக்ஷதே || (மஹாபாரதம் உத்தியோக பர்வம் 7.11)
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் பகவான் வியாசர் கூறுகிறார்:
அல்லதும், உள்ளதும் ஆகிய அனைத்தின் பிறப்பிடமாகவும், அவை நிலைபெற்றிருக்கும் இடமாகவும், அழியும் காலத்தில் சென்றும் லயமடையும் இடமாக இருப்பதாலும், அனைத்தையும் (அனைவரையும்) அனைத்து காலங்களிலும் உள்ளபடி அறிவதாலும் அவரை ஸர்வ என்று அழைக்கின்றனர்.

இதி இந்த பகவத்வ்யாஸவசனாத் வ்யாஸ பகவானின் கூற்றின்படி ஸர்வ: பகவான் 'ஸர்வ' என்று அழைக்கப்படுகிறார் |

மஹாபாரதத்தில் உள்ள இந்த வ்யாஸ பகவானின் கூற்றின்படி, அனைத்தின் பிறப்பிடமாகவும், அனைத்தையும் அறிவதாலும், பகவான் 'ஸர்வ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞாயிறு, ஜூன் 03, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 56

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தின் மூன்றாவது ஸ்லோகமும் அதிலுள்ள திருநாமங்களும் அவற்றின் பொருளும்.


3.   யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஶேஶ்வர: |

நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஶவ: புருஶோத்தம:  || 3 ||


18. யோக: 19. யோகவிதாம் நேதா  20. ப்ரதானபுருஶேஶ்வர: |

21. நாரஸிம்ஹவபு: 22. ஸ்ரீமான்  23. கேஶவ: 24. புருஶோத்தம: ||


18. ஓம் யோகாய நம:
ஞானேந்த்ரியாணி ஸர்வாணி நிருத்ய மனஸா ஸஹ |
ஏகத்வபாவனா யோகாக்ஷேத்ரஞ்யபரமாத்மனோ: ||'
தத் அவாப்யதயா யோக: |

மனம்மற்றும் அறிவுப்புலன்களை அடக்கிஅவருடன் ஒன்றுபடுதலே யோகமாகும்இத்தகைய யோகத்தால் அடையப்படுவதால்பகவான் "யோக:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

19. ஓம் யோகவிதாம் நேத்ரே நம:
யோகம் விதந்தி விசாரயந்தி லபந்த இதி வா யோகவிதஸ்தேஶாம் நேதா ஞாநினாம் யோகக்ஷேமவஹனாதிநேதி யோகவிதாம் நேதா |

யோகத்தை கற்றுஆராய்ந்துஉள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளிக்குஅவர்களின் நன்மைதீமைகள் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று அவர்களை வழிநடத்துவதால் பகவான் "யோகவிதாம் நேதாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

20. ஓம் ப்ரதானபுருஶேஶ்வராய நம:
ப்ரதானம் ப்ரக்ருதிர்மாயா புருஶோ ஜீவஸ் தயோரீஶ்வர: ப்ரதானபுருஶேஶ்வர: |

ப்ரக்ருதி எனும் ப்ரதானத்தையும்ஜீவாத்மாவாகிய புருஶனையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் (இவை இரண்டிற்கும் ஈஸ்வரனாக இருப்பதால்), பகவான் "ப்ரதானபுருஶேஶ்வர:என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

21. ஓம் நாரஸிம்ஹவபுஶே நம:
நரஸ்ய ஸிம்ஹஸ்ய சாவயவா யஸ்மின் லக்ஷ்யந்தே தத்வபுர்யஸ்ய ஸ நாரஸிம்ஹவபு:|

(நரசிம்ம அவதாரத்தின் பொழுதுஅவருடைய உடலில் மனிதர் மற்றும் சிங்கத்தின் உறுப்புகள் ஒன்று சேர்ந்து இருப்பதால் பகவான் 'நாரஸிம்ஹவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

22. ஓம் ஸ்ரீமதே நம:
யஸ்ய வக்ஷஸி நித்யம் வஸதி ஸ்ரீ: ஸ ஸ்ரீமான் |

பகவானுடைய திருமார்பில் திருமகள் எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்வதால் அவர் 'ஸ்ரீமான்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

23. ஓம் கேவாய நம:
அபிரூபாகேஶா யஸ்ய  கே: |

மிகவும் அழகிய தலைமுடியுடன் இருப்பதால் பகவான் 'கேசவன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா கஸ்ச அஸ்ச ஸ்ச த்ரிமூர்த்தய: யத்வஶே வர்தந்தே  கே: |

ப்ரஹ்மாவிஶ்ணுசிவன் ஆகிய மும்மூர்த்திகளும் எவருடைய ஆணைக்குட்பட்டு இருக்கின்றனரோ அந்த பரம்பொருள் 'கேசவன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
1
கேஶிவதாத்வா கே: |

'கேசிஎன்ற அசுரனைக் கொன்றபடியால் பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.


24. ஓம் புருஶோத்தமாய நம:
புருஶானாம் உத்தமபுருஶோத்தம: |

புருஶர்களில் உயர்ந்தவர் என்பதால் பகவான் 'புருஶோத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.