சனி, டிசம்பர் 10, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 214

67. உதீர்ண: ஸர்வதஸ்சக்ஷுரனீஶ: ஶாஶ்வதஸ்திர: |
பூஶயோ பூஶணோ பூதிர்விஶோக: ஶோகநாஶன: || 

இந்த அறுபத்தேழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

624. உதீர்ண:, 625. ஸர்வதஸ்சக்ஷு:, 626. அனீஶ:, 627. ஶாஶ்வதஸ்திர: |

628. பூஶய:, 629. பூஶண:, 630. பூதி:, 631. விஶோக:, 632. ஶோகநாஶன: || 

624. உதீர்ணாய நம:

ஸர்வபூதேப்ய: அனைத்து ஜீவராசிகளைக் (உயிரினங்களைக்) காட்டிலும் 

ஸமுத்ரிக்தத்வாத் மிகவும் உயர்ந்தவரானபடியால் 

உதீர்ண: பகவான் 'உதீர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளைக் (உயிரினங்களைக்) காட்டிலும் மிகவும் உயர்ந்தவரானபடியால் பகவான் 'உதீர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

625. ஸர்வதஸ்சக்ஷுஸே நம:

ஸர்வத: அனைத்து திசைகளிலிருந்தும் 

ஸர்வம் அனைத்தையும் (அனைவரையும்) 

ஸ்வசைதன்யேன தனது உணர்வால் (அறிவுத்திறனால்) 

பஶ்யதீதி பார்க்கிறார் (அறிகிறார்) 

ஸர்வதஸ்சக்ஷு: எனவே, பகவான் 'ஸர்வதஸ்சக்ஷு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கும் நிறைந்துள்ள பரப்ரஹ்மமான பகவான் தனது இயற்கையான அறிவுத்திறனால் (உணர்வால்) அனைத்தையும் (அனைவரையும்) அனைத்து திசைகளிலிருந்தும் காண்கிறார். எனவே அவர் 'ஸர்வதஸ்சக்ஷு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'விஸ்வதஸ்சக்ஷு:' (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.3)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (பரப்ரஹ்மத்திற்கு) உலகனைத்தையும் பரவும் கண்கள் (உள்ளன).

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

626. அனீஶாய நம:

ந வித்யதேSஸ்யேஶ (ந வித்யதே அஸ்ய ஈஶ) (பகவானைக் காட்டிலும்) மேலான ஒரு ஈஸ்வரன் (கடவுள்) அறியப்படவில்லை 

இதி அனீஶ: எனவே பகவான் 'அனீஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(பகவானைக் காட்டிலும்) மேலான ஒரு ஈஸ்வரன் (கடவுள்) அறியப்படவில்லை இதி அனீஶ: எனவே பகவான் 'அனீஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ந தஸ்யேஶே கஸ்சன'

அவருக்கு மேலான கடவுள் எவரும் இல்லை.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

627. ஶாஶ்வதஸ்திராய நம:

ஶஶ்வத்பவன்னபி எப்பொழுதும் (என்றும்) இருப்பவர் 

ந விக்ரியாம் எந்தவித விகாரமும் 

கதாசிதுபைதி சிறிதளவும் இல்லாது இருப்பவர் 

இதி ஶாஶ்வதஸ்திர: எனவே பகவான் 'ஶாஶ்வதஸ்திர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் (நிரந்தரமாய்) இருப்பவர். எனினும், எந்தவித விகாரங்கள் சிறிதளவும் இல்லாதவர். எனவே அவர் 'ஶாஶ்வதஸ்திர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாமைகம் இது ஒரே திருநாமமாகும்.

என்றும் இருப்பவராதலால் 'ஶாஶ்வத'. எவ்வித விகாரமும் அற்று இருப்பதால் 'ஸ்திர:'. 

628. பூஶயாய நம:

லங்காம் ப்ரதி இலங்கையை அடைவதற்கு 

மார்கமன்வேஶயன் வழியை வேண்டி 

ஸாகரம் ப்ரதி கடலரசனுக்காக 

பூமௌ ஶேத இதி பூமியில் சயனித்து இருந்ததால் 

பூஶய: பகவான் 'பூஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(இராமாவதாரத்தில்) இலங்கைக்கு செல்வதற்காக வழியை வேண்டி கடலரசனுக்காக பூமியில் சயனித்து இருந்ததால் பகவான் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இராமர் கடலரசனுக்காக தரையில் சயனித்த வரலாறு:

சீதாதேவி இலங்கையில் அசோக வனத்தில் சிறையிலிருப்பதை அனுமன் மூலம் அறிந்த இராமர், அனைத்து வானரப் படைகளுடன் தென்கோடி கடற்கரையை அடைகிறார். கடலைக் கடப்பதற்காக விபீடணரின் அறிவுரையின் படி கடலரசனைக் நோக்கி ஏழு நாட்கள் தரையில் தர்பைப் புல்லை பரப்பி அதில் சயனித்து தவம் இயற்றினார். கடலரசன் வராதிருக்கவே, தனது வில்லால் கடலை வற்ற பாணங்களைத் தொடுக்க, அஞ்சிய கடலரசன் இராமரின் பாதம் பணிந்தான். அவனது வேண்டுகோளின்படி நளன், நீலன் ஆகிய வானர வீரர்களைக் கொண்டு கடலின் நடுவே பாலம் அமைத்து இலங்கையை அடைந்து இராவணனை ஸம்ஹரித்தார். இன்றும் இராமேஸ்வரம் அருகே திருப்புல்லணை (திருப்புல்லாணி) என்ற திருத்தலத்தில் 'தர்பஶயன' திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். 

629. பூஶணாய நம:

ஸ்வேச்சாவதாரை: பஹுபி: தனது இச்சையால் பற்பல அவதாரங்கள் எடுத்து 

பூமிம் பூமியை 

பூஶயன் அலங்கரித்ததால் 

பூஶண: பகவான் 'பூஶண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது இச்சையால் பற்பல அவதாரங்கள் எடுத்தார். அவரது அவதாரங்களே பூமிக்கு அணிகலன்கள் ஆகும். அவ்வாறு தனது அவதாரங்களினால் பூமியை அலங்கரித்ததால் பகவான் 'பூஶண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

630. பூதயே நம:

பூதி: பவனம் 'பூதி' என்ற சொல்லிற்கு இருப்பிடம் (பவனம்) 

ஸத்தா இருத்தல் 

விபூதிர்வா செல்வம் என்று பொருள். இவற்றை உடையவராதலால் பகவான் 'பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பூதி' என்ற சொல்லிற்கு இருப்பிடம் (பவனம்), இருத்தல் (ஸத்தா), செல்வம் (விபூதி) என்று பொருள். இவற்றை உடையவராதலால் பகவான் 'பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸர்வவிபூதீநாம் அனைத்து செல்வங்களுக்கும் / ஐஸ்வர்யங்களும் 

காரணத்வாத்வா மூலகாரணமாய் இருப்பதால் 

பூதி: பகவான் 'பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து செல்வங்களுக்கும் / ஐஸ்வர்யங்களும் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் 'பூதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

631. விஶோகாய நம:

விகத: இல்லை 

ஶோகோஸ்ய சோகம் (வருத்தம்) 

பரமானந்தைக உயர்ந்த இன்பமே (ஆனந்தமே) 

ரூபத்வாதிதி வடிவானவராய் இருப்பதால் 

விஶோக: பகவான் 'விஶோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உயர்ந்த இன்பமே (பரமானந்தமே) வடிவானவராய் இருப்பதால் பகவானிடத்தில் சோகம் (வருத்தம்) இல்லை. எனவே அவர் 'விஶோக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

631. ஶோகநாஶனாய நம:

ஸ்ம்ருதிமாத்ரேண (தன்னை) நினைத்த மாத்திரத்திலேயே 

பக்தானாம் அடியவர்களின் 

ஶோகம் வருத்தம் (அல்லது துன்பங்களை) 

நாஶயதீதி அழிப்பதால் 

ஶோகநாஶன: பகவான் 'ஶோகநாஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்னை நினைத்த மாத்திரத்திலேயே அடியவர்களின் வருத்தங்களை (துன்பங்களை) அழிப்பதால் பகவான் 'ஶோகநாஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

சனி, அக்டோபர் 15, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 213

66. ஸ்வக்ஷ: ஸ்வங்க: ஶதானந்தோ நந்திர்ஜ்யோதிர்கணேஶ்வர: |
விஜிதாத்மாவிதேயாத்மா ஸத்கீர்த்திஸ்சின்னஸம்ஶய: || 

இந்தஅறுபத்தாறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

615. ஸ்வக்ஷ:, 616. ஸ்வங்க:, 617. ஶதானந்த:, 618. நந்தி:, 619. ஜ்யோதிர்கணேஶ்வர: |

620. விஜிதாத்மா, 621. அவிதேயாத்மா, 622. ஸத்கீர்த்தி:, 623. சின்னஸம்ஶய: ||

615. ஸ்வக்ஷாய நம:

ஶோபனே அழகியதான 

புண்டரீகாபே தாமரை இதழை ஒத்த 

அக்ஷிணீ திருக்கண்களை 

அஸ்யேதி உடையவராதலால் 

ஸ்வக்ஷ: பகவான் 'ஸ்வக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாமரை இதழ்களை ஒத்த அழகியதான திருக்கண்களை உடையவராதலால் பகவான் 'ஸ்வக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

616. ஸ்வங்காய நம:

ஶோபனான்யங்கானி (ஶோபனானி அங்கானி) அழகிய அங்கங்களை (உடற்பாகங்களை) 

அஸ்யேதி உடையவராதலால் 

ஸ்வங்க: பகவான் 'ஸ்வங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழகிய அங்கங்களை (உடற்பாகங்களை) உடையவராதலால் பகவான் 'ஸ்வங்க:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 

617. ஶதானந்தாய நம:

ஏக ஏவ பரமானந்த ஒரே பரமானந்தமானது 

உபாதிபேதாச்சதயா ஒரு எல்லைக்கு உட்பட்டு 

பித்யத இதி பலவாறாகத் (பல்வகையான ஆனந்தமாகத்) தெரிவதால் 

ஶதானந்த: பகவான் 'ஶதானந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(பரப்ரஹ்மத்தின்) ஒரே பரமானந்தமானது ஒரு எல்லைக்கு (உபாதி) உட்பட்டு பலவாறாகத் (பல்வகையான ஆனந்தமாகத்) தோற்றமளிப்பதால் பகவான் 'ஶதானந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'ஏதஸ்யைவானந்தஸ்யான்யானி பூதாநி மாத்ராமுபஜீவந்தி' (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.32)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மத்தின்) எல்லையில்லா ஆனந்தத்தின் ஒரு துளியிலேயே அனைத்து உயிரினங்களும் வாழ்கின்றன (மகிழ்கின்றன).

618. நந்தயே நம:

பரமானந்தவிக்ரஹே ஒப்புயர்வற்ற ஆனந்த வடிவானவராதலால் 

நந்தி: பகவான் 'நந்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒப்புயர்வற்ற ஆனந்த (பரமானந்த) வடிவானவராதலால் பகவான் 'நந்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 

619. ஜ்யோதிர்கணேஶ்வராய நம:

ஜ்யோதிர்கணானாம் அனைத்து ஒளிபடைத்த கூட்டங்களுக்கும் 

ஈஶ்வர: தலைவர் (அவற்றை அடக்கி ஆளும் ஈசுவரர்) ஆதலால் 

ஜ்யோதிர்கணேஶ்வர: பகவான் 'ஜ்யோதிர்கணேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(கதிரவன், முழுமதி, நக்ஷத்திரங்கள் முதலிய) அனைத்து ஒளிபடைத்த கூட்டங்களுக்கும் தலைவர் (அவற்றை அடக்கி ஆளும் ஈசுவரர்) ஆதலால் பகவான் 'ஜ்யோதிர்கணேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 

620. விஜிதாத்மனே நம:

விஜித வென்றவர் 

ஆத்மா மனோ 'ஆத்மா' அதாவது மனதை 

யேன ஸ விஜிதாத்மா எனவே, பகவான் 'விஜிதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஆத்மா' அதாவது மனதை வென்றவராதலால் பகவான் 'விஜிதாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 

621. அவிதேயாத்மனே நம:

ந கேனாபி ஒருவராலும் (எவ்விதத்திலும்) 

விதேய கட்டுப்படாத (அடக்கியாள முடியாத) 

ஆத்மா ஸ்வரூபமஸ்யேதி ஆத்மா அதாவது இயற்கையான தன்மையை உடையவராதலால் 

அவிதேயாத்மா பகவான் 'அவிதேயாத்மா' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒருவராலும் (எவ்விதத்திலும்) கட்டுப்படாத (அடக்கியாள முடியாத) ஆத்மா அதாவது இயற்கையான தன்மையை உடையவராதலால் பகவான் 'அவிதேயாத்மா' என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 

622. ஸத்கீர்த்தயே நம:

ஸதீ அவிததா 'ஸத்' அதாவது உண்மையான 

கீர்த்திரஸ்யேதி கீர்த்தி அதாவது பெருமையை உடையவராதலால் 

ஸத்கீர்த்தி: பகவான் 'ஸத்கீர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் கீர்த்தி (பெருமை) உண்மையானது. எனவே அவர் 'ஸத்கீர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மற்றோரது கீர்த்தி புகழ்ச்சிக்காகக் கூறப்படுகிறது. பகவானது கீர்த்திகளோ முற்றிலும் உண்மையானது.


623. சின்னஸம்ஶயாய நம:

கரதலாமலகவத்ஸர்வம் (கரதல அமலகவத் ஸர்வம்) உள்ளங்கை நெல்லிக்கனியென அனைத்தையும் 

ஸாக்ஷாத்க்ருதவத: உள்ளபடி அறிபவராதலால் 

க்வாபி துளியளவும் (எங்கேயும்) 

ஸம்ஶயோ நாஸ்தீதி ஐயப்பாடு இல்லாதவராதலால் 

சின்னஸம்ஶய: பகவான் 'சின்னஸம்ஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உள்ளங்கை நெல்லிக்கனியென அனைத்தையும் உள்ளபடி அறிபவராதலால் பகவானுக்கு எதிலும் துளியளவும் ஐயப்பாடு இல்லை. எனவே அவர் 'சின்னஸம்ஶய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

சனி, செப்டம்பர் 10, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 212

65. ஸ்ரீத: ஸ்ரீஶ: ஸ்ரீநிவாஸ: ஸ்ரீநிதி: ஸ்ரீவிபாவன: |
ஸ்ரீதர: ஸ்ரீகர: ஶ்ரேய: ஸ்ரீமான்லோகத்ர்யாஶ்ரய: || 

இந்த அறுபத்தைந்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

605. ஸ்ரீத:, 606. ஸ்ரீஶ:, 607. ஸ்ரீநிவாஸ:, 608. ஸ்ரீநிதி:, 609. ஸ்ரீவிபாவன: |

610. ஸ்ரீதர:, 611. ஸ்ரீகர:, 612. ஶ்ரேய:. 613. ஸ்ரீமான், 614. லோகத்ர்யாஶ்ரய: ||

605. ஸ்ரீதாய நம:

ஶ்ரியம் செல்வத்தை 

ததாதி அளிக்கிறார் 

பக்தானாமிதி (பக்தானாம் இதி) தனது அடியவர்களுக்கு 

ஸ்ரீத: பகவான் 'ஸ்ரீத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களுக்கு செல்வத்தை அளிப்பதால் பகவான் 'ஸ்ரீத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

606. ஸ்ரீஶாய நம:

ஶ்ரிய செல்வத்திற்கு (அல்லது திருமகளுக்கு) 

ஈஶ: ஈஸ்வரனாக இருக்கிறபடியால் 

ஸ்ரீஶ: பகவான் 'ஸ்ரீஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செல்வத்திற்கு (அல்லது திருமகளுக்கு) ஈஸ்வரனாக இருக்கிறபடியால் பகவான் 'ஸ்ரீஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

607. ஸ்ரீநிவாஸாய நம:

ஸ்ரீமத்ஸு ஸ்ரீமான்களிடம் 

நித்யம் எப்பொழுதும் 

வஸதீதி வசிப்பதால் 

ஸ்ரீநிவாஸ: பகவான் 'ஸ்ரீநிவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸ்ரீஶப்தேன ஸ்ரீ என்ற சொல்லினால் 

ஸ்ரீமந்தோ இங்கு ஸ்ரீமான்கள் 

லக்ஷ்யந்தே குறிக்கப்படுகின்றனர்.

ஸ்ரீமான்களிடம் எப்பொழுதும் வசிப்பதால் பகவான் 'ஸ்ரீநிவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸ்ரீ என்ற சொல்லினால் இங்கு ஸ்ரீமான்கள் குறிக்கப்படுகின்றனர். மேலும் நாம் முந்தைய திருநாமங்களில் ஆச்சார்யாள் அளித்த, வேதங்களே 'ஸ்ரீ' சிறந்த செல்வமாகும், என்ற உரையையும் இங்கு கூட்டிப் பொருள் கொண்டால், இங்கு ஸ்ரீமான்கள் என்பது வேதத்தை நன்கு அறிந்தவர்கள் என்று பொருள்படும். எனவே, வேதங்களை கற்றுணர்ந்த 'ஸ்ரீமான்களிடம்' பகவான் என்றும் வசிக்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.

608. ஸ்ரீநிதயே நம:

ஸர்வஶக்திமயேஸ்மின் ஸர்வ சக்தி படைத்த ஈஸ்வரனான பகவானிடம் 

அகிலா: உலகிலுள்ள (ப்ரபஞ்சம் முழுவதிலுமுள்ள) 

ஶ்ரியோ அனைத்து செல்வங்களும் 

நிதீயந்த இதி உறைந்திருப்பதால் 

ஸ்ரீநிதி: பகவான் 'ஸ்ரீநிதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வ சக்தி படைத்த ஈஸ்வரனான பகவானிடம் உலகிலுள்ள (ப்ரபஞ்சம் முழுவதிலுமுள்ள) அனைத்து செல்வங்களும் உறைந்திருக்கின்றன. எனவே, பகவான் 'ஸ்ரீநிதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானிடம் இல்லாத செல்வங்கள் இல்லை. அனைத்து செல்வங்களின் உறைவிடம் அவர். அவரின்றி வேறொரு செல்வமும் இல்லை.

609. ஸ்ரீவிபாவனாய நம:

கர்மானுரூபேண (தத்தம்) கர்ம வினைக்கு ஏற்ப 

விவிதா: பல்வேறு வகையான 

ஶ்ரிய: செல்வங்களை 

ஸர்வபூதானம் அனைத்து உயிரினங்களுக்கும் (ஜீவராசிகளுக்கும்) 

விபாவயதீதி பிரித்து அளிப்பதால் 

ஸ்ரீவிபாவன: பகவான் 'ஸ்ரீவிபாவன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு உயிரினத்திற்கும் (ஜீவராசிக்கும்) அவரவரது (அதனதன்) கர்ம வினைக்கு ஏற்ப வகைவகையாக செல்வங்களை பிரித்து அளிப்பதால் பகவான் 'ஸ்ரீவிபாவன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு செல்வம் மிகையாகவோ, குறைவாகவோ கிடைப்பது நமது கர்ம வினைக்கு ஏற்பவேயாகும். அதை, பாரபட்சமின்றி பிரித்து அளிப்பதே பகவானின் செயலாகும். பலரும் இதற்கு பகவானை நொந்து கொள்கின்றனர். இது தேவையற்றது.

 610. ஸ்ரீதராய நம:

ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களின் (ஜீவராசிகளின்) 

ஜனனீம் தாயாரான 

ஶ்ரியம் 'ஸ்ரீ' அதாவது திருமகளை 

வக்ஷஸி வஹன் தனது திருமார்பில் தாங்கியுள்ளபடியால் ஸ்ரீதர: பகவான் 'ஸ்ரீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களின் (ஜீவராசிகளின்) தாயாரான திருமகளை தனது திருமார்பில் தாங்கியுள்ளபடியால் பகவான் 'ஸ்ரீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

611. ஸ்ரீகராய நம:

ஸ்மரதாம் (தம்மைப் பற்றி) நினைத்தும் 

ஸ்துவதாம் துதித்தும் 

அர்ச்சயதாம் பூசனை செய்தும் 

பக்தானாம் வழிபடும் அடியவர்களுக்கு 

ஶ்ரியம் செல்வத்தை 

கரோதீதி தருவதால் 

ஸ்ரீகர: பகவான் 'ஸ்ரீகர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(தம்மைப் பற்றி) நினைத்தும், துதித்தும், பூசனை செய்தும் வழிபடும் அடியவர்களுக்கு செல்வத்தை தருவதால் பகவான் 'ஸ்ரீகர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

612. ஶ்ரேயஸே நம:

அநபாயி அழியாத (குறையாத) 

ஸுகாவாப்தி லக்ஷணம் இன்பத்திற்கு 

ஶ்ரேய: 'ஶ்ரேய' என்று பெயர் 

தஸ்ச பரஸ்யைவ அந்த குறையாத இன்பமே பரம்பொருளின் 

ரூபமிதி ஸ்வரூபமாதலால் (உருவமாதலால்) 

ஶ்ரேய: பகவான் 'ஶ்ரேய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழியாத (குறையாத) இன்பத்திற்கு 'ஶ்ரேய' என்று பெயர். அந்த குறையாத இன்பமே பரம்பொருளின் ஸ்வரூபமாதலால் (உருவமாதலால்), பகவான் 'ஶ்ரேய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

613. ஸ்ரீமதே நம:

ஶ்ரியோஸ்ய 'ஸ்ரீ' யை (செல்வத்தை) 

ஸந்தீதி உடையவராதலால் 

ஸ்ரீமான் பகவான் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செல்வத்தை (ஸ்ரீ) உடையவராதலால் பகவான் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

22  வது திருநாமத்தில் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்திற்கு "பகவானுடைய திருமார்பில் திருமகள் எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்பவர்" என்று ஆச்சார்யாள் விளக்கவுரை அளித்திருந்தார்.

178 வது திருநாமத்தில் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்திற்கு "அனைத்து செல்வங்களின் வடிவான திருமகள், பகவானின் பகவானை விட்டு என்றும் பிரியாமல் அவருடனேயே வசிக்கிறாள்" என்று ஆச்சார்யாள் விளக்கவுரை அளித்திருந்தார்.

220 வது திருநாமத்தில் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்திற்கு "அனைவரைக் காட்டிலும் (அனைத்தைக் காட்டிலும்) மேலான ஒளி படைத்தவர்" என்று ஆச்சார்யாள் விளக்கவுரை அளித்திருந்தார்.

இந்த திருநாமத்தில் செல்வத்தை உடையவர் என்று விளக்கம் அளித்துள்ளார்.

613. லோகத்ர்யாஶ்ரயாய நம:

த்ரயானாம் லோகாநாம் (பூ, பூவ:, ஸுவ:) என்ற மூன்று உலகங்களுக்கும் (மூவுலக வாசிகளுக்கும்) 

ஆஶ்ரயத்வாத் புகலிடமாக இருப்பதால் 

லோகத்ர்யாஶ்ரய: பகவான் 'லோகத்ர்யாஶ்ரய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(பூ, பூவ:, ஸுவ:) என்ற மூன்று உலகங்களுக்கும் (மூவுலக வாசிகளுக்கும்) புகலிடமாக இருப்பதால், பகவான் 'லோகத்ர்யாஶ்ரய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

ஞாயிறு, ஜூலை 17, 2022

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 211

64. அநிவர்த்தீ நிவ்ருதாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: || 

இந்த அறுபத்துநான்காவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

596. அநிவர்த்தீ, 597. நிவ்ருதாத்மா, 598. ஸங்க்ஷேப்தா, 599. க்ஷேமக்ருத், 600. ஶிவ: |

601. ஸ்ரீவத்ஸவக்ஷா:, 602. ஸ்ரீவாஸ:, 603. ஸ்ரீபதி:, 604. ஸ்ரீமதாம்வர: ||

596. அநிவர்த்தினே நம:

தேவாஸுரஸங்க்ரமான் தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே நடக்கும் போர்களில் 

ந நிவர்த்தத இதி எப்பொழுதும் பின்வாங்காதவர் ஆதலால் 

அநிவர்த்தீ பகவான் 'அநிவர்த்தீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் இடையே நடக்கும் போர்களில் (தேவர்களின் சார்பாக போராடும் பொழுது) பகவான் எப்பொழுதும் பின்வாங்குவதில்லை  ஆதலால், அவர் 'அநிவர்த்தீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

வ்ருஶபரியத்வாத் அறவழியை விரும்புபவர் ஆதலால் 

தர்மான் ந நிவர்த்தத இதி வா அறத்திலிருந்து திரும்புவதில்லை (நழுவுவதில்லை) 

அநிவர்த்தீ எனவே, பகவான் 'அநிவர்த்தீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறவழியை விரும்புபவர் (வ்ருஶபரிய:) ஆதலால் பகவான் அறத்திலிருந்து திரும்புவதில்லை (நழுவுவதில்லை). எனவே, அவர் 'அநிவர்த்தீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

597. நிவ்ருத்தாத்மனே நம:

ஸ்வபாவதோ இயற்கையாகவே 

விஶயேப்யோ விஶய ஸுகங்களில் (புலனின்பத்தில்) 

நிவ்ருத்த நாட்டமின்றி திரும்பும் 

ஆத்மா மனோSஸ்யேதி ஆத்மா அதாவது மனதை உடையவராதலால் 

நிவ்ருத்தாத்மா பகவான் 'நிவ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் மனது (ஆத்மா) இயற்கையாகவே விஶய ஸுகங்களில் (புலனின்பத்தில்) நாட்டமின்றி அவற்றை விட்டு விலகித் திரும்புகிறது. எனவே அவர் 'நிவ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

598. ஸங்க்ஷேப்த்ரே நம:

விஸ்த்ருதம் பரந்து, விரிந்துள்ள 

ஜகத் இந்தப் ப்ரபஞ்சத்தை 

ஸம்ஹாரஸமயே ப்ரளய காலத்தில் 

ஸூக்ஷ்மரூபேண அதன் நுண்வடிவாய் 

ஸங்க்ஷிபன் சுருக்குவதால் 

ஸங்க்ஷேப்தா பகவான் 'ஸங்க்ஷேப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரந்து, விரிந்துள்ள இந்தப் ப்ரபஞ்சத்தை ப்ரளய காலத்தில் அதன் நுண்வடிவாய் சுருக்குவதால் பகவான் 'ஸங்க்ஷேப்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

599. க்ஷேமக்ருதே நம:

உபாத்தஸ்ய படைக்கப்பட்ட பொருட்களை 

பரிரக்ஷணம் கரோதீதி காப்பதால் 

க்ஷேமக்ருத் பகவான் 'க்ஷேமக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

படைக்கப்பட்ட பொருட்களை காப்பதால் பகவான் 'க்ஷேமக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

600. ஶிவாய நம:

ஸ்வநாம தன்னுடைய திருநாமத்தை 

ஸ்ம்ருதிமாத்ரேண நினைத்த மாத்திரத்திலேயே 

பாவயன் புனிதப்படுத்துவதால் 

ஶிவ: பகவான் 'ஶிவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்னுடைய திருநாமத்தை நினைத்த மாத்திரத்திலேயே (நினைப்போரின் பாவங்களை அழித்து அவர்களை) புனிதப்படுத்துவதால் பகவான் 'ஶிவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் ஶஶ்டம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (ஶிவ: என்னும் இந்த திருநாமம் வரையில்) அறுநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

601. ஸ்ரீவத்ஸவக்ஷஸே நம:

ஸ்ரீவத்ஸ ஸ்ரீவத்ஸமென்று ஸம்ஞம் அழைக்கப்படும் 

சிஹ்னமஸ்ய சின்னம் (குறி) 

வக்ஷஸி திருமார்பில் 

ஸ்திதமிதி இருப்பதால் 

ஸ்ரீவத்ஸவக்ஷா: பகவான் 'ஸ்ரீவத்ஸவக்ஷா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீவத்ஸமென்று ஸம்ஞம் அழைக்கப்படும் சின்னம் (மறு) அவரது திருமார்பில் இருப்பதால் பகவான் 'ஸ்ரீவத்ஸவக்ஷா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

602. ஸ்ரீவாஸாய நம:

அஸ்ய அவரது 

வக்ஷஸி திருமார்பில் 

ஸ்ரீரனபாயினி அவரை விட்டு என்றும் பிரியாத திருமகளானவள் 

வஸதீதி வசிப்பதால் 

ஸ்ரீவாஸ: பகவான் 'ஸ்ரீவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் திருமார்பில், அவரை விட்டு என்றும் நீங்காத திருமகள் நித்ய வாசம் செய்கிறாள். எனவே, பகவான் 'ஸ்ரீவாஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

603. ஸ்ரீபதயே நம:

அம்ருதமதனே அமிர்தத்திற்காக (திருப்பாற்கடலைக்) கடைந்த போது 

ஸர்வான் அனைத்து 

ஸுரா(அ)ஸுராதீன் தேவர்கள் மற்றும் அஸுரர்களை 

விஹாய விடுத்து 

ஸ்ரீரேனம் பதித்வேன திருமகளால் தனது பதியாக (கணவனாக) 

வரயாமாஸேதி வரிக்கப்பட்டதால் 

ஸ்ரீபதி: பகவான் 'ஸ்ரீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமிர்தத்திற்காக (திருப்பாற்கடலைக்) கடைந்த போது திருமகள் அனைத்து தேவர்கள் மற்றும் அஸுரர்களை விடுத்து பகவானேயே தனது பதியாக (கணவனாக) வரித்தாள். எனவே, பகவான் 'ஸ்ரீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸ்ரீ: பராஶக்தி: 'ஸ்ரீ' என்றால் பராசக்தியைக் குறிக்கும் 

தஸ்யா: பதிரிதி வா அந்த பராசக்தியின் (அந்த மாபெரும் சக்தியை) உடையவராதால் 

ஸ்ரீபதி: பகவான் 'ஸ்ரீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸ்ரீ' என்றால் பராசக்தியைக் குறிக்கும் அந்த பராசக்தியை (அந்த மாபெரும் சக்தியை) உடையவராதால் பகவான் 'ஸ்ரீபதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பராஸ்ய ஶக்திர் விவிதைவ ஶ்ரூயதே' (ஸ்வேதாஶ்வதர உபநிஶத் 6.8)

ஸ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது உயர்ந்த சக்தியானது (வேதங்களில்) பலவாறாக கூறப்பட்டுள்ளது.

604. ஸ்ரீமதாம்வராய நம:

ரிக்யஜு: ஸாமலக்ஷணா ரிக், யஜுர் மற்றும் ஸாமவேதங்கள் 

ஸ்ரீர்யேஶாம் அவரது ஸ்ரீ, அதாவது செல்வங்களாகும் 

தேஶாம் அவர்களை (விட

ஸர்வேஶாம் அனைவரின் 

ஸ்ரீமதாம் ஸ்ரீமான்களாகிய 

விரிஞ்ச்யாதீனம் ப்ரஹ்மா முதலான 

ப்ரதானபூத: மேலானது 

ஸ்ரீமதாம்வர: எனவே பகவான் 'ஸ்ரீமதாம்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களே பகவானின் செல்வங்களாகும். (இவ்வாறு வேதங்களை அறிந்த) ஸ்ரீமான்களாகிய ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும் (அவர்களை விட) பகவானின் செல்வம் (வேத ஞானம்) மேலானது. எனவே அவர் 'ஸ்ரீமதாம்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ரிச: ஸாமானி யஜூஶி | ஸா ஹி ஶ்ரீரம்ருதா ஸதாம்’

ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்களே ஸத்புருஷர்களின் (நல்லோரின்) அழியாத செல்வங்களாகும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!