19. மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்யுதி: |
அநிர்தேஶ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் ||
இந்த பத்தொன்பதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
இந்த சுலோகத்தில் உள்ள சில திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்:
178. ஓம் ஸ்ரீமதே நம:
ஐஸ்வர்யலக்ஷணா செல்வங்களின் வடிவான
ஸமக்ரா அனைத்து
ஸ்ரீர் திருமகள்
யஸ்ய எவரிடம் (வசிக்கிறாளோ)
ஸ: அவர் (பகவான்)
ஸ்ரீமான் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து செல்வங்களின் வடிவான திருமகள், பகவானின் பகவானை விட்டு என்றும் பிரியாமல் அவருடனேயே வசிக்கிறாள். எனவே, பகவான் 'ஸ்ரீமான்' (திருவுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு 22வது திருநாமத்தில் மஹாலக்ஷ்மி பகவானின் வக்ஷஸ்தலத்தில் இருப்பதால் அவர் 'ஸ்ரீமான்' என்று விளக்கியிருந்தார் ஆச்சார்யர். இங்கு, அனைத்து செல்வங்களுடன் திருமகள் அவருடன் இருப்பதால் 'ஸ்ரீமான்'. அங்கு வக்ஷஸ்தலத்தில் (திருமார்பில்) குடியிருத்தல் பிரதானமாய் கூறப்பட்டது. இங்கோ, செல்வங்களுடன் உறைதல் பிரதானமாய் கூறப்பட்டுள்ளது.
179. ஓம் அமேயாத்மனே நம:
ஸர்வை: அனைத்து
ப்ராணிபிர் ஜீவராசிகளாலும்
அமேயா அளவிடமுடியாத
புத்திராத்மா ஞானம் (புத்தி), மற்றும் தன்மை (ஆத்மா)
யஸ்ய ஸ எவரிடம் உள்ளதோ (பகவானிடம் உள்ளதால்)
அமேயாத்மா அவர் (பகவான்) 'அமேயாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் ஞானத்தையும், தன்மையையும் யாராலும் அளவிட முடியாது. எனவே, அவர் 'அமேயாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவானின் ஞானமும் தன்மையும் அனைத்து ஜீவராசிகளைக்காட்டிலும் உயர்ந்ததாக, அளவிட முடியாததாக இருப்பதாலும் அவர் 'அமேயாத்மா'.
180. ஓம் மஹாத்ரித்ருஶே நம:
ஆநிரைக் காத்தது: பகவான், இந்திரனின் அகந்தையை அடக்க, ஆயர்கள் அவனுக்கு செய்யும் வேள்வியைத் தடுத்து நிறுத்தினார். கோபம் கொண்ட இந்திரன் ப்ருந்தாவனத்தின் மீது 7 நாட்கள் விடாமல் மழை பொழிந்தான். இதனால் துன்பமடைந்த ஆயர்களையும், ஆநிரைகளையும் காக்க பகவான் கோவர்தன மலையை தன் சுண்டு விரலால் 7 நாட்கள் தாங்கினார். தன் கர்வம் தொலைந்த இந்திரன் பகவானைப் பணிந்து, அவரால் மன்னிக்கப்பட்டு மீண்டும் ஸ்வர்கத்தை அடைந்தான். இந்த சரித்திரம் ஸ்ரீமத் பாகவத புராணம் 10-வது ஸ்கந்தம் 24 மற்றும் 25வது அத்யாயத்திலும், ஸ்ரீவிஶ்ணு புராணம் 5வது அம்சம் 11, 12வது அத்யாயத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.