புதன், ஜூன் 20, 2012

நாம ராமாயணம் - அயோத்யா காண்டம்

அயோத்யா காண்டம்

எண்ணற்ற குணங்களின் உறைவிடம் ராம்
பூமியின் திருமகள் மனங்கவர் ராம்
குளிர்மதி திருமுகம் உடையவர் ராம்
தந்தையின் சொல்கேட்டு வனம்சென்ற ராம்
குஹனை தோழனாய் கொண்டவர் ராம்
(குஹனால்) திருவடி கழுவ பெற்றவர் ராம்
பாரத்வாஜருக்கின்பம் அளித்திட்ட ராம்
சித்ரகூட மலையில் வசித்தவர் ராம்
தயரதர் அனுதினம் நினைத்திட்ட ராம்
பரதனும் வேண்டி வணங்கிய ராம்
தந்தைக்கு ஈமக்கடன் செய்திட்ட ராம்
பாதுகை பரதனுக்கு அளித்தவர் ராம் !!

ராம ராம ஜெய ராஜாராம் 
ராம ராம ஜெய சீதாராம்!!

வியாழன், ஜூன் 07, 2012

நாம இராமாயணம் - பால காண்டம்

ஹிந்துவாக, ஏன் மனிதனாக, பிறந்த அனைவரும் அறிய வேண்டிய பொக்கிஷம் ஸ்ரீமத் இராமாயணம். இராமாயண கதையை சுருக்கமாக சம்ஸ்க்ருத செய்யுள் வடிவில் கூறுவது நாம இராமாயணம். இதில் ஒவ்வொரு பதமும் 'ராம்' 'ராம்' என்று முடியும். இதை சொல்லும் பொழுதே பல முறை நாம் ராம நாமத்தை உச்சரித்து அதன் மூலம் பாவங்களை விலக பெறுவோம். அந்த இனிய நாம இராமாயணத்தை தமிழ்படுத்த நான் எடுத்த எளிய முயற்சியே இந்த பதிவு.

குறைகள், பிழைகள்  இருப்பின் பொறுத்து மன்னிக்க வேண்டுகிறேன்.

பால காண்டம் 
தூய பரபிரம்ம வடிவினர் ராம்
கால ரூபமாய் விளங்கிடும் ராம்
அரவினில் இனிதுயில் கொண்டவர் ராம்
பிரம்மாதி தேவரும் வணங்கிய ராம்
கதிரவன் குலத்தினில் உதித்தவர் ராம்
தசரதர் மகவாய் பிறந்தவர் ராம்
கோசலைக்கின்பம் வளர்த்தவர் ராம்
விச்வாமித்ரரின் ப்ரியமான ராம்
கொடிய தாடகையை வதைத்திட்ட ராம்
மாரீச அரக்கரை துரத்திய ராம்
கௌசிக வேள்வியை காத்தவர் ராம்
அகலிகை சாபம் போக்கிய ராம்
கௌதம முனிவர் பூஜித்த ராம்
தேவரும் முனிவரும் போற்றிய ராம்
கரையேற்றும் திருவடி உடையவர் ராம்
மிதிலை மக்களை மகிழ்வித்த ராம்
ஜனக மன்னரின் மனங்கவர் ராம்
பரம சிவ தனுசை முறித்தவர் ராம்
சீதையின் மாலையை அணிந்தவர் ராம்
திருக்கல்யாண வைபவம் கண்டவர் ராம்
பரசுராமரை வென்றவர் ராம்
அயோத்தி நாட்டை காத்தவர் ராம்

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்!!