18. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||
இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |
169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||
இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |
169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும், அவற்றின் விளக்கமும்:
169. ஓம் அதீந்த்ரியாய நம:
ஶப்தாதிரஹிதத்வாத்
ஶப்தம் முதலிய (கேட்டல், தொடுதல், பார்த்தல், சுவைத்தல், முகர்தல் ஆகிய)
இந்த்ரியானாம் ஐம்புலன்களுக்கும்
அவிஶய இதி விஶயம் ஆகாதவர் (அவற்றிற்கு எட்டாதவர்)
அதீந்த்ரிய: பகவான்
'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான், ஶப்த (கேட்டல்), ஸ்பரிஸ (தொடுதல்), ரூப (உருவத்தைப் பார்த்தல்), ரஸ (சுவைத்தல்), கந்தம் (முகர்தல்) ஆகிய ஐம்புலன்களுக்கும் (இந்த்ரியங்களுக்கும்) எட்டாதவர். எனவே, அவர் 'அதீந்த்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
157-வது திருநாமம் 'அதீந்த்ர:' (அதி + இந்த்ரன்); இந்தத் திருநாமம் அதீந்த்ரிய: (அதி + இந்த்ரியம்)
170. ஓம் மஹாமாயாய நம:
மாயாவினாமபி
மாயாவிகளுக்குக்
கூட
மாயாகாரித்வாத் மாயையை
விளைவிப்பவர்
மஹாமாய: எனவே, பகவான் 'மஹாமாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான்
மாயாவிகளுக்கெல்லாம் மேலான மாயாவி.
சாதாரண மனிதர்களிடையே மாயையை
ஏற்படுத்தவல்ல மாயாவிகளாலும் பகவானின் மாயையை அறியவோ, மீறவோ இயலாது. எனவே, பகவான் 'மஹாமாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மம மாயா
துரத்யயா (ஸ்ரீமத் பகவத்கீதை 7.14)
ஸ்ரீ
பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: எனது தேவமாயை கடத்தற்கரியது.
இதி
பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.
171. ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஜகத் இந்தப் ப்ரபஞ்சத்தை
உத்பத்தி படைத்து
ஸ்திதி காத்து
லயார்த்தம் அழிப்பது (ஆகிய முத்தொழில்களை)
உத்யுக்தத்வாத் மிகுந்த உற்சாகத்துடன் செய்வதால்
மஹோத்ஸாஹ: பகவான்
'மஹோத்ஸாஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப்
ப்ரபஞ்சத்தைப் படைத்தல்,
காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும்
பகவான் மிகுந்த உற்சாகத்துடன் செய்கிறார். எனவே, அவர் 'மஹோத்ஸாஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
172. ஓம் மஹாபலாய நம:
பலினாமபி
பலசாலிகளைக்
காட்டிலும்
பலவத்வாத் மிக்க
பலம் பொருந்தியவராதலால்
மஹாபல: பகவான் 'மஹாபல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து பலசாலிகளைக் காட்டிலும் மிக்க பலம்
பொருந்தியவராக இருப்பதால் பகவான் 'மஹாபல:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.