6. அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||
இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
46. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
50. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்ட: 54. ஸ்தவிரோ த்ருவ: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களின் விளக்கம்:
50. ஓம் விஶ்வகர்மணே நம:
விஶ்வம்
அனைத்து
ஜீவராசிகளும் கர்மம் க்ரியா
கர்ம என்றால் செயல் யஸ்ய எவருடையதோ
ஸ விஶ்வகர்மா அந்த பகவான் 'விஶ்வகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து
உயிரினங்களும் அந்தப் பரம்பொருளின் செயலினால் உருவாக்கப்பட்டதால், பகவான் ‘விஸ்வகர்மா’
என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
க்ரியத
இதி ஜகத்கர்ம உருவாக்கபடுவதால்
இந்தப் பிரபஞ்சத்தையே ‘கர்மம்’ என்று கூறலாம் விஶ்வம் கர்ம இந்தப் பிரபஞ்சமெனும் செயல் யஸ்யேதி எவருடையதோ வா விஶ்வகர்மா அந்த பகவான் 'விஶ்வகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப்
பிரபஞ்சத்தையே படைத்து உருவாக்குவதால், பகவான் ‘விஸ்வகர்மா’ என்றத் திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
விசித்ர
ஆச்சரியமான நிர்மாணஶக்திமத்வாத்வா படைக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் விஶ்வகர்மா பகவான் 'விஶ்வகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆச்சரியமான
படைக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் பகவான் 'விஶ்வகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நமக்கு
ஆச்சரியமான பலவற்றையும் மிக சாதாரணமாகவே அவர் படைக்கிறார்.
த்வஶ்ட்ரா
த்வஶ்டா எனப்படும்
தேவர்களுக்கு ஸாத்ருஶ்யாத்வா சமானமானவராக
இருப்பதால் விஶ்வகர்மா
பகவான் 'விஶ்வகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
த்வஶ்ட்ரா
எனப்படும் தேவர்களுக்கு சமானமானவராக இருப்பதால் பகவான் 'விஸ்வகர்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
த்வஶ்டா
எனும் தேவர்களை விஸ்வகர்மா என்றும் அழைப்பதுண்டு.
51. ஓம் மனவே நம:
மனனாத்
நினைப்பதால்
(எண்ணுவதால்) மனு:
பகவான் 'மனு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(அனைத்தையும்) நினைப்பதால்
(மனனம் செய்வதால்) பகவான் மனு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்துமே
அந்த பகவான் ஒருவரே (அத்வைத தத்துவம்). அவரின்றி வேறொன்றுமில்லை. எனவே,
நினைப்பவரும் அவரே, நினைக்கப்படுபவரும் அவரே.
'நான்யோSதோSஸ்தி
மந்தா'
(ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(பரப்ரஹ்மத்தைத்
தவிர) நினைப்பவர் வேறொருவர் இல்லை.
மந்த்ரோ
வா மந்திரங்களின்
வடிவில் இருப்பதால் மனு:
பகவான் 'மனு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மந்திரங்களின்
வடிவில் இருப்பதால் பகவான் 'மனு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரஜாபதிர்
வா (இந்த
மனித குலத்தை) நான்முகக் கடவுள் பிரமனின் வடிவில் இருந்துப் படிப்பதால் மனு: பகவான் 'மனு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மனிதக் குலத்தைப்
(நான்முகனின் வடிவில்) படைப்பதால் பகவான் 'மனு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.