18. வேத்யோ வைத்ய: ஸதாயோகி வீரஹா மாதவோ மது:|
பகவான் தன் பக்தர்களுக்கு தேன் போன்று சுவையாய்
இருப்பவர், இன்பமளிப்பவர்.
எனவே, அவர் 'மது:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||
இந்த பதினெட்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |
169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
163. வேத்ய:, 164. வைத்ய:, 165. ஸதாயோகி, 166. வீரஹா, 167. மாதவ:, 168. மது: |
169. அதீந்த்ரிய:, 170. மஹாமாய:, 171. மஹோத்ஸாஹ:, 172. மஹாபல: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
165. ஓம் ஸதாயோகினே நம:
ஸதா எப்பொழுதும்
அவிர்பூத (தன் ஞானத்தால்)
ப்ரகாசிக்கும்
ஸ்வரூபத்வாத் உருவமுடையவர்
ஸதாயோகி பகவான் 'ஸதாயோகி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எப்பொழுதும்
ஞானத்தால் ப்ரகாசிக்கும் உருவமுடையவராதலால் பகவான் 'ஸதாயோகி' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
166. ஓம் வீரக்னே நம:
தர்மத்ராணாய
தர்மத்தைக்
காப்பதற்காக
வீரான் அஸுரான் அஸுர
வீரர்களை
ஹந்தீதி கொல்கிறார்
வீரஹா பகவான்
'வீரஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தர்மத்தை
காப்பதற்காக (தர்மத்தைக்
குலைக்கும்) அஸுர வீரர்களை கொல்வதால் பகவான் ' வீரஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வினாஶாய
ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய (ஸ்ரீமத் பகவத்கீதை)
167. ஓம் மாதவாய நம:
மாயா 'மா' என்றால்
வித்யாயா: அனைத்து
வித்தைகளும் (கல்வியும்)
பதி: (அனைத்து வித்தைகளின்)
தலைவராதலால்
மாதவ: பகவான்
'மாதவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'மா' என்ற அனைத்து வித்தைகளின் (கல்வி, கேள்விகளின்) தலைவராதலால் பகவான் 'மாதவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு
72-வது திருநாமத்தில் 'மாதவ:' என்பதற்கு “மஹாலக்ஷ்மியின் கணவர்”, “மது வித்யையின் மூலம் அறியப்படுபவர்”, “மௌனத்தாலும், த்யானத்தாலும், யோகத்தாலும் அறியப்படுபவர்” என்று மூன்று விளக்கங்களை
அளித்திருந்தார் ஆச்சார்யர்.
மா வித்யா
ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈஶோ யதோ பவான் |
தஸ்மான்மாதவநாமாஸி
தவ: ஸ்வாமீதி ஶப்தித: || (ஹரிவம்ஶம் 3.88.49)
ஹரிவம்ஶத்தில்
கூறப்பட்டுள்ளது:
பகவான்
ஹரியை அறியும் வித்தைக்கு 'மா' என்று பெயர். தாங்கள் அதன் ஸ்வாமி; "தவ" என்ற சொல் ஸ்வாமியை (தலைவனைக்) குறிக்கும். எனவே, தாங்கள்
மாதவ: என்ற திருநாமத்தால் அறியப்படுகிறீர்கள்.
இதி
ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரிவம்ஸத்தில் கூறப்பட்டுள்ளது.
168. ஓம் மதவே நம:
யதா
மது எவ்வாறு
தேனானது
பராம் ப்ரீதிம் (தன் சுவையின் மூலம் அதை சுவைப்பவர்களுக்கு) சிறந்த
இன்பத்தை
உத்பாதயதி தருகிறதோ
அயமபி
ததேதி அவ்வாறே
பகவானும் (தன்
பக்தர்களுக்கு) இன்பமளிக்கிறார்
மது: எனவே, அவர் 'மது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.