திங்கள், ஏப்ரல் 30, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 42

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||

இவற்றில் விஶ்வம் என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் மிகவும் நீண்ட உரையை அளித்துள்ளார். அவற்றை ஒரு சில பதிவுகளில் அனுபவிக்கலாம். முந்தைய பதிவில் 'விஶ்வஸ்மை நம:' என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளித்த பல உரைகளைப் பார்த்தோம். அவற்றின் சுருக்கமும், மேலும் இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளிக்கும் பல மேற்கோள்களையும் நாம் இன்று அனுபவிக்கலாம்.


ஒமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் (மாண்டுக்ய உபநிஶத் 1)
மாண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது 'ஓம் என்கின்ற இந்த எழுத்து இவை அனைத்துமாக உள்ளது'

இத்யுபக்ரம்ய இவ்வாறு தொடங்கி,

‘ப்ரணவோ ஹ்யபரம் ப்ரஹ்ம ப்ரணவச்ச பர: ஸ்ம்ருத: |
அபூர்வோSனந்தரோSபாஹ்யோSநபர: ப்ரணவோSவ்யய’ || (மாண்டுக்ய காரிகா 1 | 26)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:
(ஓம் என்னும்) ப்ரணவமே அபர (சகுண) மற்றும் பர (நிர்குண) ப்ரஹ்மம் ஆகும். ஓம் என்ற இந்த ப்ரணவத்திற்கு தொடக்கம் (காரணம்) இல்லை, அது தனித்தன்மை வாய்ந்தது, அதனின்றி வேறொன்றும் இல்லை, எந்த காரண காரியங்களுடனும் தொடர்பு அற்றது.

‘ஸர்வஸ்ய ப்ரணவோ ஹ்யாதிர்மத்யமந்தஸ்தததைவ ச |
ஏவம் ஹி ப்ரணவம் ஞ்யாத்வா வ்யஶ்னுதே ததனந்தரம்’ || (மாண்டுக்ய காரிகா 1 | 27)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:
(ஓம் என்னும்) ப்ரணவமே அனைத்தின் தொடக்கம், இடை மற்றும் முடிவுமாகும். இந்த பிரணவத்தை இவ்வாறு அறிபவர் ஐயமின்றி அதையே (அந்த பிரணவமாகிய பரப்ரஹ்மத்தையே) அடைவர்.

‘ப்ரணவம் ஹீஶ்வரம் வித்யாத் ஸர்வஸ்ய ஹ்ருதயே ஸ்திதம் |
ஸர்வவ்யாபினமோங்காரம் மத்வா தீரோ ந ஶோஶதி’ || (மாண்டுக்ய காரிகா 1 | 28)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:
(ஓம் என்னும்) ப்ரணவமே அனைவரின் இதயத்தினுள்ளிருக்கும் இறைவனாக அறிவாய். இதை இவ்வாறு உணரும் பகுத்தறிவுடையவர் எக்காலத்திலும் வருத்தமுறுவதில்லை.

‘அமாத்ரோSனந்தமாத்ரஸ்ச த்வைதஸ்யோபஷம: ஶிவ: |
ஒம்காரோ விதிதோ யேன ஸ முனிர்நேதரோ ஜன:’ || (மாண்டுக்ய காரிகா 1 | 29)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:
ஒலியற்றதும், அனைத்து ஒலியாக இருப்பதையும், இருமைகள் அற்றதாயும், மங்களகரமானதாயும் (ஓம் என்னும்) இந்த ப்ரணவத்தை அறிபவரே முனிவராவர். மற்றையோர் (முனிவர்) அல்ல.

இத்யந்தா மாண்டூக்யோபநித் இது ஈறாக மண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஓம் தத்ப்ரஹ்ம | ஓம் தத்வாயு: | ஓம் ததாத்மா | ஓம் தத்ஸத்யம் | ஓம் தத்ஸர்வம் | (நாராயண உபநிஶத் 68)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (ஓம் என்னும்) ப்ரணவமே ப்ரஹ்மம், ப்ரணவமே வாயு (காற்று), ப்ரணவமே ஆத்மா, ப்ரணவமே உண்மைப்பொருள், ப்ரணவமே அனைத்துமாகும்.

இத்யாதி ஶ்ருதிபி: இவ்வாறு ஸ்ருதிகளான வேதத்திலும் கூறப்பட்டுள்ளது.

‘ஒமித்யேகாக்ஷரம் ப்ரஹம வ்யாஹரன் மாமனுஸ்மரன் |
ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 8.13)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
‘ஓம்’ என்ற ப்ரஹ்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய், உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான்.

‘யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விந்தி யத்யதயோ வீதராகா: |
யதிச்சந்தோ ப்ரஹ்மச்சர்யம் சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேன’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 8.11)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
எந்த நிலையை (ஓம் என்னும் அக்ஷரத்தை) வேதமுணர்ந்தோர் அழிவற்றதென்பர், (மற்ற உலகியல் விஷயங்களில்) விருப்பமற்ற முனிவர் எதனுட் புகுவர், எதை விரும்பி ப்ரஹ்மச்சர்ய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

‘ரஸோSஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஶஶிஸூர்யயோ: |
ப்ரணவ: ஸர்வவேதேஶு ப்த: கே பௌரும் ந்ருஶு’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 7.8)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் ப்ரணவம்; வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.

‘மஹர்ஶீனாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம் |
யக்ஞானாம் ஜபயக்ஞோSஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.25)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:
மஹரிஷிகளில் நான் ப்ருகு; வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் ஹிமாலயம்.

‘ஆத்யம் ச த்ரயக்ஷரம் ப்ரஹ்ம த்ரயீ யஸ்மின் ப்ரதிஶ்டிதா |
ஏகாக்ஷரம் பரம் ப்ரஹ்ம ப்ராணாயாம: பரம் தப:’ || (அத்ரி ஸ்ம்ரிதி 1.11)

அத்ரி ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:
மூன்றெழுத்துடைய ப்ரஹ்மமே (ப்ரணவமாகிய ஓம்காரமே) ஆதியில் இருந்தது; இதில் (இந்த ப்ரணவத்தில்) மூன்று வேதங்களும் நிலைபெற்றிருந்தன. ஓரெழுத்தான ஓம்காரமே பரப்ரஹ்மம், ப்ராணாயாமமே சிறந்த தவமாகும்.

‘ப்ரணவாத்யாஸ்த்ரயோ வேதா: ப்ரணவே பர்யவஸ்திதா: |
வாங்க்மயம் ப்ரணவம் ஸர்வம் தஸ்மாத்ப்ரணவமப்யஸேத்’ || (அத்ரி ஸ்ம்ரிதி 1.9)

அத்ரி ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:
மூன்று வேதங்களும் ப்ரணவத்தில் தொடங்கி ப்ரணவத்துடனே முடிகின்றன. அனைத்து சொற்களும் ப்ரணவ ரூபமேயாகும், எனவே ப்ரணவத்தையே நாம் உபாசிக்க வேண்டும்.

இத்யாதிஸ்ம்ருதேஶ்ச்ச விஶ்வஶப்தேனோங்காரோSபிதீயதே வாச்யவாசகயோரத்யந்தபேதாபாவாத் விஶ்வமித்யோங்கார ஏவ ப்ரஹ்மோத்யர்த்த: |
இவ்வாறு ஸ்ம்ருதிகளிலிருந்தும் ‘விஶ்வ’ எனும் நாமத்திற்கு ஓம்காரம் என்ற பொருளே நிரூபிக்கப்பட்டுள்ளது. சொல்லும், பொருளும் இணைபிரியாது இருத்தல்லால், விஶ்வம் அல்லது ஓம்காரமே ப்ரஹ்மம் என்பதே இதன் தேர்ந்த கருத்தாகும்.

‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலானிதி சாந்த உபாஸீத’ || (சாந்தோக்ய உபநிஶத் 3.14.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
ஐயமின்றி இங்கு அனைத்தும் ப்ரஹ்மமேயாகும்; அனைத்தும் அதனின்றே உருவாகி, அதனுள்ளேயே லயமடைந்து, அதிலேயே செயல்புரிகின்றன, எனவே, அனைத்தும் ப்ரஹ்மமேயாகும். இவ்வாறு, அமைதியான மனத்துடன் ப்ரஹ்மத்தை உபாஸிப்போமாக!!

இதி ஏததுக்தம் பவதி யஸ்மாத் ஸர்வமிதம் விகாரஜாதம் ப்ரஹ்ம தஜ்ஜத்வாத்தல்லயத்வாத்ததனத்வாச்ச | ந ச ஸர்வஸ்யைகாத்-மத்வே ராகாதய: ஸம்பவந்தி | தஸ்மாச்சாந்த உபாசீத இதி ஶ்ருதே: |

இந்த ஸ்ருதி வாக்கியத்திலிருந்து, “இங்குள்ள அனைத்தும் மாற்றங்களும் ப்ரஹ்மத்தில் இருந்தே உருவாவதாலும், ப்ரஹ்மத்திலேயே லயமடைவதாலும், ப்ரஹ்மத்திலேயே அனைத்து செயல்களையும் புரிவதாலும், (இங்குள்ள) அனைத்தும் ப்ரஹ்மமேயாகும். இங்கு அனைத்தும் (இரண்டின்றி) ஒன்றாகவே இருப்பதால், இதில் (ப்ரஹ்மத்தில்) விருப்பு, வெறுப்பாகிய தோஷங்கள் இல்லை. எனவே, அமைதியான உள்ளத்துடன் இந்த ப்ரஹ்மத்தை உபாசிப்பாயாக.” என்ற கருத்து புலனாகிறது.

ஞாயிறு, ஏப்ரல் 29, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 41

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||

இவற்றில் விஸ்வம் என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் மிகவும் நீண்ட உரையை அளித்துள்ளார். அவற்றை ஒரு சில பதிவுகளில் அனுபவிக்கலாம். முந்தைய பதிவில் 'விஶ்வஸ்மை நம:' என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளித்த பல உரைகளைப் பார்த்தோம். அவற்றின் சுருக்கமும், மேலும் இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளிக்கும் பல மேற்கோள்களையும் நாம் இன்று அனுபவிக்கலாம்.

விஶ்வம் என்னும் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் அளித்த விளக்கங்கள்: 


1. ஜகத: காரணத்வேன விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம |
(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

2. யத்வா பரஸ்மாத் புருஶான்ன(அ)பின்னமிதம் விஶ்வம் பரமார்த்த தஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம |

அல்லது, இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

3. அதவா விஶதீதி விஶ்வம் ப்ரஹ்ம |
அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

4. கிஞ்ச ஸம்ஹ்ருதௌ விஶந்தி ஸர்வாணி பூதான்யஸ்மின் இதி விஶ்வம் ப்ரஹ்ம |
பிரளய காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை சென்று லயமடைவதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

5. ததா ஹி ஸகலம் ஜகத் கார்யபூதமே விஶத்யத்ர ச அகிலம் விஶதீத்யுபயதாபி விஶ்வம் ப்ரஹ்ம இதி |
மேலும், அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும், பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும், இவ்வாறு, பல வழிகளாலும் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இனி ஆச்சர்யாள் அளிக்கும் பற்பல மேற்கோள்களிலிருந்து ஒரு சிலவற்றை இன்று காண்போம்.

‘அன்யத்ர தர்மாதன்யத்ராதர்மாத்’ (கடோபநிஶத் 1.2.14) இத்யாரப்ய கடோபநிஷத்தில் (அந்த ப்ரஹ்மானது) தர்மத்திற்கும் வேறான, அதர்மத்திற்கும் வேறான என்று (ப்ரஹ்மத்தை) விவரிக்கத் தொடங்குமிடத்து,

‘ஸர்வே வேதா யத்பதமாமனந்தி
தபாம்ஸி ஸர்வாணி ச யத் வதந்தி |
யதிச்சந்தோ ப்ரஹ்மச்சர்யம் சரந்தி
தத்தே பதம் ஸங்க்ரஹேன ப்ரவீம்யோமித்யேதத்’ || (கடோபநிஶத் 1.2.15)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
எல்லா வேதங்களும் எந்த இலக்கைப் பற்றி பேசுகின்றனவோ, எதற்காக அனைத்து தவங்களையும் கூறுகின்றனவோ, எதை அடைவதற்கு ஆசை கொண்டு ஸாதகர்கள் ப்ரஹ்மச்சர்யத்தை அனுஷ்டிக்கிறார்களோ, அந்த இலக்கை உனக்கு சுருக்கமாக உரைக்கிறேன்: அது “ஓம்” என்பதே ஆகும்.

‘ஏதத்த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத்த்யேவாக்ஷரம் பரம் |
ஏதத்த்யேவாக்ஷரம் ஞாத்வா யோ எதிச்சதி தஸ்ய தத்’ || (கடோபநிஶத் 1.2.16)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(ஓம்) என்ற இந்த ஒரு எழுத்தே சகுணப்ரஹ்மம், இந்த எழுத்தே நிர்குண ப்ரஹ்மம். இந்த எழுத்தையே த்யானித்து ஒருவன் எதை விரும்புகிறானோ, அவனுக்கு அது அமைகிறது (கிடைக்கிறது).

இதி காடகே இவ்வாறு கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஏதத்வை சத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோங்கார’ (ப்ரஶ்ன உபநிஶத் 5.2) 
ப்ரஶ்ன உபநிஶத் கூறப்பட்டுள்ளது: ‘ஹே சத்யகாமனே!! இந்த ஓம்காரமே பர (நிர்குண) மற்றும் அபர (ஸகுண) ப்ரஹ்மமாகும்’.

இத்யுபக்ரம்ய இவ்வாறு தொடங்கி,

‘ய: புனரேதம் த்ரிமாத்ரேனோமித்யேதேனைவாக்ஷரேன பரம் புருஶமபித்யாயீத’ (ப்ரஶ்ன உபநிஶத் 5.5)
எவரொருவர் மூன்று மாத்திரை அளவுள்ள இந்த ஓம் எனும் அக்ஷரத்தால் பரம புருஶனை த்யானிக்கின்றனரோ (அவர்கள் முக்தியை அடைகின்றனர்).

இதி ப்ரஶ்னோபநிஶதி இவ்வாறு  ப்ரஶ்னோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஒமிதி ப்ரஹ்ம | ஒமிதீதம் ஸர்வம் |’ (தைத்ரீய உபநிஶத் 1.8)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்ற ப்ரணவமே ப்ரஹ்மமாகும். ஓம் என்ற ப்ரணவமே அனைத்துமாகும்’.

இதி யஜுர்வேதாரண்யகே இவ்வாறு யஜுர் வேத ஆரண்யகத்தில் (தைத்ரீய உபநிஶத்தில்) கூறப்பட்டுள்ளது.

'தத்யதா ஷங்குனா ஸர்வாணி பர்னாணி ஸந்த்ருண்ணான் யேவமோங்காரேன ஸர்வா வாக் ஸந்த்ருணா | ஓம்கார ஏவேதம் ஸர்வம்' (சாந்தோக்ய உபநிஶத் 2.23.3)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘எவ்வாறு இலைகள் அதன் மத்தியில் உள்ள காம்பால் தாங்கப்படுகின்றனவோ, அவ்வாறே அனைத்து ஒலிகளும், வார்த்தைகளும் தாங்கப்படுகின்றன. எனவே, இங்கு அனைத்தும் ஓம்காரமே!!’

இதி சாந்தோக்யே இவ்வாறு சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் (மாண்டுக்ய உபநிஶத் 1)
மாண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது 'ஓம் என்கின்ற இந்த எழுத்து இவை அனைத்துமாக உள்ளது'

சனி, ஏப்ரல் 28, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 40

28/Apr/2018: இன்றைய தினம் ஸ்ரீநரஸிம்ஹ ஜெயந்தி மஹோத்ஸவ நன்னாள். இன்றைய திருநாளில், காஞ்சி காமகோடி ஆச்சார்யாள் திருப்பாதங்களையும், எனது குலதெய்வமான கனகவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீவீரராகவரின் திருவடிகளையும் தொழுது,  ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் திருநாமமான விஸ்வத்தின் ("விஸ்வஸ்மை நம:") உரையை தொடங்குகிறேன்.




1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||

இவற்றில் விஸ்வம் என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் மிகவும் நீண்ட உரையை அளித்துள்ளார். அவற்றை ஒரு சில பதிவுகளில் அனுபவிக்கலாம்.

1. ஓம் விஶ்வஸ்மை நம:

விஶ்வஸ்ய ஜகத: விஶ்வம் என்று அழைக்கப்படும் இந்த பிரபஞ்சத்தின் காரணத்வேன காரணமாய் இருப்பதால் விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம பரப்ரஹ்மத்தை விஶ்வம் என்று அழைக்கின்றனர் |

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆதௌ து முழுமுதல் விஶ்வமிதி கார்யஶப்தேன விஶ்வம் எனும் காரியத்தால் (வினைப்பயனால்) காரணக்ரஹனம் காரணத்தை (பிரபஞ்ச உற்பத்தி எனும் வினை புரிபவரை) அறிந்து கொள்ளலாம் கார்யபூத-விரிஞ்ச்யாதிநாமபிரபி இந்த உலகின் உற்பத்திக்கு நேரடி (ப்ரத்யக்ஷ) காரணமாய் இருக்கும் ப்ரஹ்மா முதலிய திருநாமங்களும் உபபன்னா ஸ்துதிர்விஷ்ணோரிதி தர்ஶயிதும் பகவான் ஸ்ரீவிஶ்ணுவின் புகழையேப் பாடுகின்றன |

விஶ்வம் எனும் காரியத்தால் (வினைப்பயனால்), முழுமுதல் காரணத்தை (பிரபஞ்ச உற்பத்தி எனும் வினை புரிபவரை) அறிந்து கொள்ளலாம். இந்த உலகின் உற்பத்திக்கு நேரடி (ப்ரத்யக்ஷ) காரணமாய் இருக்கும் ப்ரஹ்மா முதலிய திருநாமங்களும் பகவான் ஸ்ரீவிஶ்ணுவின் புகழையேப் பாடுகின்றன (ஏனெனில், ப்ரஹ்மாவும் பரப்ரஹ்மமான விஶ்ணுவே).

யத்வா, அல்லது பரஸ்மாத் புருஶான்ன பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் (அ)பின்னமிதம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) விஶ்வம் இந்த பிரபஞ்சமானது இருப்பதால் பரமார்த்ததஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம விஶ்வம் என்று பரப்ரஹ்மத்தை அழைக்கின்றனர் |

அல்லது, இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மைவேதம் விஷ்வமிதம் வரிஷ்டம் (முண்டக உபநிஶத் 2.2.12)
முண்டக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் மேலான இந்த ப்ரஹ்மனாகவே உள்ளது.

புருஶ ஏவேதம் விஷ்வம் (முண்டக உபநிஶத் 2.1.1௦)
முண்டக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் (புருஶனான) ப்ரஹ்மனாகவே உள்ளது.

இத்யாதி ஸ்ருதிப்யஸ்தத்பின்னம் ந கிஞ்சித் பரமார்த்தத: சதஸ்தி |
இந்த (முண்டகோபனிஷத்) ஸ்ருதி வாக்கியங்களின் மூலம், ப்ரஹ்மத்தைத் தவிர்த்து (இந்த பிரபஞ்சத்தில்) வேறொன்றும் இல்லை என்பது விளங்கும்.

அதவா அல்லது விஶதீதி புகுவதனால் விஶ்வம் இந்த ப்ரபஞ்சத்தினுள் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான பகவானை விஶ்வம் என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான்விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தத் ஸ்ருஶ்டா ததேவானுப்ராவிஶத்’ (தைத்ரீய உபநிஶத் 2.6)
தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது:​ (பரப்ரஹ்மம்) அவற்றைப் படைத்து அதிலேயே நுழைந்தார்.

இதி ஶ்ருதே இவ்வாறு (தைத்ரீய உபநிஶத்) வாக்கியம் கூறுகின்றது.

கிஞ்ச ஸம்ஹ்ருதௌ பிரளய காலத்தில் விஶந்தி சென்று லயமடைவதால் ஸர்வாணி பூதான்யஸ்மின்னிதி இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் விஶ்வம் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான பகவானை விஶ்வம் என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

பிரளய காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை சென்று லயமடைவதால் பகவான்விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யத் ப்ரயந்த்யபிஸம்விஶந்தி’ (தைத்ரீய உபநிஶத் 3.1)
தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது:​ இறப்பவை அனைத்தும் எதை (எந்த ப்ரஹ்மத்தை) சென்றடைகின்றனவோ...

இதி ஶ்ருதே இவ்வாறு (தைத்ரீய உபநிஶத்) ஸ்ருதி வாக்கியம் கூறுகின்றது.

ததா ஹி ஸகலம் ஜகத் அனைத்து பிரபஞ்சத்தையும் கார்யபூதமே விஶத்யத்ர சாகிலம் அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும் விஶதீத்யுபயதாபி பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும் விஶ்வம் ப்ரஹ்ம இதி பரப்ரஹ்மமான பகவானை விஶ்வம் என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

மேலும், அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும், பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும், இவ்வாறு, இரு வழியாலும் பகவான்விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.