20. மஹேஶ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம்கதி:|
அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி: ||
இந்த இருபதாவது சுலோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
இந்த சுலோகத்தில் உள்ள திருநாமங்களும், அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக):
மஹான் இஶ்வாஸ இஶுக்ஷேபோ யஸ்ய ஸ மஹேஶ்வாஸ:
ஏகார்ணவ ஆப்லுதாம் தேவீம் மஹீம் ச பபாரேதி மஹீபர்த்தா
183. ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
184. ஓம் ஸதாம்கதயே நம:
ஸதாம் வைதிகானாம் ஸாதூனாம் புருஶார்த்தசாதன ஹேது: ஸதாம்கதி:
வேதத்தில் நம்பிக்கைக் கொண்டு, அதன் வழிநடக்கும் ஸாதுக்களின் அனைத்து வகை நலன்களையும் வழங்குபவராய் இருப்பதால் பகவான் 'ஸதாம்கதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
185. ஓம் அநிருத்தாய நம:
ந கேனாபி ப்ராதுர்பாவேஶு நிருத்த இதி அநிருத்த:
பகவான் தோன்றுமிடத்து அவரை தடுக்க யாராலும் இயலாது. எனவே, அவர் 'அநிருத்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
186. ஓம் ஸுரானந்தாய நம:
ஸுர ஆனந்தயதீதி ஸுரானந்த:
ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பதால் பகவான் 'ஸுரானந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
187. ஓம் கோவிந்தாய நம:
'நஶ்டாம்வை தரணீம் பூர்வமவிந்தத்யத்குஹாகதாம் |
கோவிந்த இதி தேனாஹம் தேவைர்வாக்பிரபிஶ்டுத:' ||
(மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.70)
இதி மோக்ஷதர்மவசனாத் கோவிந்த:
ப்ரளய காலத்தில் பாதாளத்தில் அழுந்தி, துன்புற்றிருந்த பூமியை அதனின்று மீட்டுத் தூக்கி எடுத்து வந்ததால் பகவான் 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘அஹம் கிலேந்திரோ தேவானாம் த்வம் க்வாமிந்த்ரதாம் கத: |
கோவிந்த இதி லோகாஸ்த்வாம் ஸ்தோஶ்யந்தி புவி ஶாஶ்வதம்’ || (ஹரிவம்ஶம் 2.19.45)
இதி கோவிந்த:
எவ்வாறு, இந்திரன் தேவர்களின் தலைவனோ, அவ்வாறே பகவான் (தனது க்ருஷ்ணாவதாரத்தில்) ஆநிரைகளுக்குத் தலைவராவார். எனவே, பகவான் 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘கௌரேஶா து யதோ வாணி தாம் ச விந்தயதே பவான் |
கோவிந்தஸ்து ததோ தேவ முனிபி: கத்யதே பவான்’ || (ஹரிவம்ஶம் 3.88.50)
இதி ச ஹரிவம்ஶே கோவிந்த:
'கௌ' என்ற சொல் வாக்கைக் (வாணி) குறிக்கும். தாங்கள் அதில் வன்மை பொருந்தியவர். எனவே, ஓ பகவானே!!! இந்த ஹரிவம்ஸத்தின் கூற்றின்படி முனிவர்கள் தங்களை 'கோவிந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.
188. ஓம் கோவிதாம் பதயே நம:
கௌர்வாணி தாம் விந்ததீதி கோவித: தேஶாம் பதிர்விஶேஶேணேதி கோவிதாம்பதி:
வேதமறிந்தோரை 'கோவித:' என்று கூறுவர். அத்தகையோரை வழிநடத்தும் தலைவராக இருப்பதால், பகவான் 'கோவிதாம்பதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.