திங்கள், மே 31, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 178

31. அம்ருதாமஸூத்பவோ பானு: ஶஶபிந்து: ஸுரேஶ்வர: |

ஔஶதம் ஜகதஸ் ஸேது: ஸத்யதர்மபராக்ரம: ||

இந்தமுப்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

283. அம்ருதாம்ஸூத்பவ:, 284. பானு:, 285. ஶஶபிந்து:, 286. ஸுரேஶ்வர: |

287. ஔஶதம், 288. ஜகதஸ்ஸேது:, 289. ஸத்யதர்மபராக்ரம: || 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

283. ஓம் அம்ருதாம்ஸூத்பவாய நம:

மத்யமானே கடையும்பொழுது 

பயோனிதாவம்ருதாம்ஸோஸ்சந்த்ரஸ்ய பாற்கடலை அம்ருதத்தின் தன்மையைக் கொண்ட வெண்மதி 

உத்பவோ தோன்றினார் 

யஸ்மாத்ஸ: எவரால் (எந்த பரம்பொருளின் சக்தியால் வெண்மதி தோன்றினாரோ) அவர் 

அம்ருதாம்ஸூத்பவோ அந்த பகவான், 'அம்ருதாம்ஸூத்பவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(தேவர்களுக்கு அமுதம் கிடைப்பதற்காக) பாற்கடலைக் கடையும்பொழுது பகவானின் சக்தியாலேயே, அந்த பாற்கடலிலிருந்து அம்ருதத்தின் தன்மையுடன் கூடிய சந்திரன் (வெண்மதி) தொன்றினார். எனவே, பகவான் 'அம்ருதாம்ஸூத்பவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அம்ருத + அம்ஸு + உத்பவ: = அம்ருதாம்ஸூத்பவ: 

284. ஓம் பானவே நம:

பாதீதி நன்றாக ஒளிவிடுவதால் 

பானு: பகவான் 'பானு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் 'பானு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

285. ஓம் ஶஶபிந்தவே நம:

ஶஶ இவ முயலைப் போன்ற வடிவுடைய 

பிந்துர்லாஞ்சனம் 'பிந்து' அதாவது குறியை 

அஸ்யேதி உடையதால் 

ஶஶபிந்துஸ்சந்த்ர: வெண்மதி (சந்திரன்) ஶஶபிந்து என்று அழைக்கப்படுகிறார் 

தத்வத் அது போன்றே (அந்த வெண்மதியைப் போன்றே

ப்ராஜா: அனைத்து உயிரினங்களையும் 

புஶ்ணாதீதி போஶித்து வளர்ப்பதால் 

ஶஶபிந்து: பகவான் 'ஶஶபிந்து:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முயலைப் போன்று குறியீடு இருப்பதால் வெண்மதியை (சந்திரனை) 'ஶஶபிந்து' என்று அழைப்பார்கள். அந்த வெண்மதியைப் (சந்திரனைப்) போன்றே அனைத்து உயிரினங்களையும் போஶித்து வளர்ப்பதால் பகவான் 'ஶஶபிந்து:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'புஶ்ணாமி சௌஶதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:' (ஸ்ரீமத் பகவத்கீதை 15.13)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ரஸ வடிவமுள்ள சோமமாகி (வெண்மதி) பூண்டுகளையெல்லாம் வளர்க்கிறேன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும். 

286. ஓம் ஸுரேஶ்வராய நம:

ஸுராணாம் தேவானாம் 'ஸுரர்' என்றால் தேவர்கள் என்று பொருள் 

ஶோபனதாத்ருணாம் (அந்த தேவர்களுக்கும் மற்றும்) அனைவருக்கும் நன்மையை அளிப்போருக்கும் 

ச ஈஶ்வர: அரசராக இருப்பதால் 

ஸுரேஶ்வர: பகவான் 'ஸுரேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்மையை அளிப்போருக்கும் அரசராக (ஈஶ்வரனாக) இருக்கிறார். எனவே, அவர் 'ஸுரேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

287. ஓம் ஔஶதாய நம:

ஸம்ஸார ரோக இந்தப் பிறவியென்னும் பெரும்பிணிக்கு 

பேஜத்வாத் மருந்தாக இருப்பதால் 

ஒளதம் பகவான் 'ஒள:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் பிறவியென்னும் பெரும்பிணியைத் தீர்க்கும் மருந்தாக இருக்கிறார். எனவே, அவர் 'ஒள:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

288. ஓம் ஜகதஸ்ஸேதவே நம:

ஜகதாம் இந்த பிறவியென்னும் பெருங்கடலை 

ஸமுத்தாரணஹேதுத்வாத் கடப்பதற்கு உதவி புரிபவராகவும் 

அஸம்பேதகாரணத்வாத்வா ஒன்றை ஒன்று கலவாமல் பிரித்து வைப்பவராகவும் 

ஸேதுவத் ஒரு பாலத்தைப் போல (பாலம் எவ்வாறு ஒரு நீர் நிலையின் இரு பக்கங்களையும் பிரிக்கிறதோ அவ்வாறே

வர்ணாஶ்ரமாதீனாம் வர்ணாஶ்ரமங்களை 

ஜகத:ஸேது: பகவான் 'ஜகத:ஸேது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் பிறவியென்னும் பெருங்கடலைத் தாண்ட உதவும் பாலமாக இருக்கிறார். மேலும், ஒரு பாலம் எவ்வாறு நீர் நிலையின் இரு பக்கங்களை பிரிக்கிறதோ அவ்வாறே பகவானும் இவ்வுலகில் வர்ணாஶ்ரம தர்மங்கள் ஒன்றுக்கொன்று கலவாமல் பிரித்து வைக்கிறார். எனவே, அவர் 'ஜகத:ஸேது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஏஶ ஸேதுர்விதரண ஏஶாம் லோகானாமஸம்பேதாய (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.22)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த மக்களை ஒருவருக்கொருவர் கலவாத வண்ணம் (பரப்ரஹ்மம்) ஒரு பாலமாக இருக்கிறார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

 289. ஓம் ஸத்யதர்மபராக்ரமாய நம:

ஸத்யா அவிததா உண்மையாகவும் 

தர்மா: ஞானாதயோ குணா: (தர்மம் என்றால்) ஞானம் முதலிய குணங்களும் 

பராக்ரமஸ்ச யஸ்ய ச வீரமும் ஒருங்கே உள்ளவராதலால் 

ஸத்யதர்மபராக்ரம: பகவான் 'ஸத்யதர்மப்ராக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உண்மை, ஞானம் முதலிய குணங்கள் மற்றும் வீரம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்றிருக்கிறார். எனவே, அவர் 'ஸத்யதர்மபராக்ரம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞாயிறு, மே 30, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 177

30. ஓஜஸ்தேஜோத்யுதிதர: ப்ரகாஶாத்மா ப்ரதாபன: 

ருத்த: ஸ்பஶ்டாக்ஷரோ மந்த்ரஸ்சந்த்ராம்ஶுர்பாஸ்கரத்யுதி: ||

இந்த முப்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

275. ஒஜஸ்தேஜோத்யுதிதர:, 276. ப்ரகாஶாத்மா, 277. ப்ரதாபன: |

278. ருத்த:, 279. ஸ்பஶ்டாக்ஷர:, 280. மந்த்ர:, 281. சந்த்ராம்ஶு:, 282. பாஸ்கரத்யுதி: || 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

275. ஓம் ஒஜஸ்தேஜோத்யுதிதராய நம:

ஓஜ: ப்ராணபலம் 'ஓஜஸ்' என்றால் ப்ராணன் மற்றும் பலத்தைக் குறிக்கும் 

தேஜ: ஶௌர்யாதயோ குணா: 'தேஜஸ்' என்றால் சூரத்தனம் முதலிய குணங்களைக் குறிக்கும் 

த்யுதிர்தீப்தி: 'த்யுதி' என்றால் ஒளியைக் குறிக்கும் 

தா: தாரயதீதி இவை அனைத்தையும் தன்னுள் கொண்டிருப்பதால் 

ஒஜஸ்தேஜோத்யுதிதர: பகவான் 'ஒஜஸ்தேஜோத்யுதிதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுள் 'ஓஜஸ்' என்றழைக்கப்படும் ப்ராண சக்தி, பலம், 'தேஜஸ்' என்றழைக்கப்படும் சூரத்தனம் முதலிய குணங்கள் 'த்யுதி' என்றழைக்கப்படும் ஒளி ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்டுள்ளார். எனவே, அவர் 'ஒஜஸ்தேஜோத்யுதிதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அதவா, அல்லது 

ஒஜஸ்தேஜ இதி நாமத்வயம் 'ஒஜஸ்' மற்றும் 'தேஜஸ்' என்று இரண்டு நாமங்களாய்ப் பிரித்தால்,

'பலம் பலவதா சாஹம்' (ஸ்ரீ பகவத்கீதை 7.11)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: வல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந்தீர்ந்த வலிமை நான்.

'தேஜஸ்தேஜஸ்வினாமஹம்' (ஸ்ரீ பகவத்கீதை 7.10)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ஒளியுடையோரின் ஒளி நான்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளபடி அவர் பலவான்களுக்குள் பலமாகவும், ஒளிபொருந்தியோருள் ஒளியாகவும் இருக்கிறார் (எனவே, 'ஓஜஸ்தேஜ:' என்று அழைக்கப்படுகிறார்). 

த்யுதிம் ஞானலக்ஷணாம் தீப்திம் 'த்யுதி' என்றால் ஞானத்தினால் விளையும் அறிவொளியாகும் 

தாரயதீதி அந்த ஞான ஒளியாக விளங்குவதால் (ஞான ஒளியைத் தன்னுள் தாங்குவதால்

த்யுதிதர: பகவான் 'த்யுதிதர:' திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'த்யுதி' என்றால் ஞானத்தினால் விளையும் அறிவொளியாகும்அ. ந்த ஞான ஒளியாக விளங்குவதால் (ஞான ஒளியைத் தன்னுள் தாங்குவதால்), பகவான் 'த்யுதிதர:' திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தை பிரித்துப் பொருளுரைத்திருந்தாலும், ஆதிசங்கரர் தனது முதல் விளக்கமான 'ஓஜஸ்தேஜோத்யுதிதர:' என்பதையே பிரதானமான விளக்கமாகக் கொண்டுள்ளார். ஆயிரம் திருநாமக் கணக்கில், இது ஒரே திருநாமமாகத்தான் கணக்கிடப்பட்டுள்ளது. 

276. ஓம் ப்ரகாஶாத்மனே நம:

ப்ரகாஶஸ்வரூப ஒளிமயமான 

ஆத்மா யஸ்ய : ஆத்மாவைக் (திருமேனியைக்)​ கொண்டவர் எவரோ 

ப்ரகாஶாத்மா (அந்த பகவான்) 'ப்ரகாஶாத்மா' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒளிமயமான ஆத்மாவை (திருமேனியை) உடையவராதலால் அவர் 'ப்ரகாஶாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

277. ஓம் ப்ரதாபனாய நம:

ஸவித்ராதி கதிரவன் முதலான விபூதிபி: உருவங்களைத் தரித்து 

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்திற்கு 

ப்ரதாபயதீதி வெப்பமளிப்பதால் 

ப்ரதாபன: பகவான், 'ப்ரதாபன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் கதிரவன் முதலிய உருவங்களை தரித்து, இந்தப் ப்ரபஞ்சத்திற்கு வெப்பத்தை அளிக்கிறார் (அல்லது இந்தப் ப்ரபஞ்சத்தினை வெம்மையினால் சுட்டெரிப்பதால்). எனவே, அவர் 'ப்ரதாபன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

278. ஓம் ருத்தாய நம:

தர்மஞானவைராக்யாதிபிரூபேத்வாத் அறம், அறிவு, பற்றின்மை ஆகியவை நிறைந்திருப்பதால் 

ருத்த: பகவான் 'ருத்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானிடம் அறம், அறிவு, பற்றின்மை ஆகியவை நிறைந்திருப்பதால் அவர் 'ருத்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருத்த: என்றால் செல்வசெழிப்பு (செல்வசெழிப்புள்ளவர்) என்று பொருள். தர்மம் (அறம்), ஞானம் (அறிவு) மற்றும் வைராக்யம் (பற்றின்மை) ஆகியவையே உண்மையான செல்வங்களாகும். இவை அனைத்தும் நிறைந்திருப்பதால் பகவான் 'ருத்த:' என்று அழைக்கப்படுகிறார். 

279. ஓம் ஸ்பஶ்டாக்ஷராய நம:

ஸ்பஶ்டம் உதாத்தம் 'ஸ்பஶ்டம்' என்றால் மிகத் தெளிவாக (உரக்க) என்று பொருள் 

ஓம்காரலக்ஷணம் ஓம்காரமென்னும் 

அக்ஷரமஸ்யேதி சொல்லால் உரைக்கப்படுகிறார் (உணர்த்தப்படுகிறார்

ஸ்பஶ்டாக்ஷர: எனவே, பகவான் 'ஸ்பஶ்டாக்ஷர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஓம்காரத்தால் (உரத்து) தெளிவாக உணர்த்தப்படுகிறார். எனவே, அவர் 'ஸ்பஶ்டாக்ஷர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

280. ஓம் மந்த்ராய நம:

ரிக்யஜு:ஸாமலக்ஷணோ ரிக், யஜுர், ஸாம வேதங்களின் (அவ்வேதங்களிலுள்ள மந்திரங்களின்) வடிவில் இருப்பதால் 

மந்த்ர: பகவான் 'மந்த்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ரிக், யஜுர், ஸாம வேதங்களின் வடிவில் (அந்த வேதங்களில் உள்ள மந்திரங்களின் வடிவில்) இருப்பதால் அவர் 'மந்த்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

281. ஓம் சந்த்ராம்ஶவே நம:

ஸம்ஸாரதாபதிக்மாம்ஶு இந்தப் பிறவியென்னும் கதிரவனின் 

தாபதாபித வெப்பத்தினால் தாக்கப்பட்டு தவிக்கும் 

சேதஸாம் மனிதர்களுக்கு 

சந்த்ராம்ஶுரிவ வெண்மதியின் கிரணங்கள் எவ்வாறு மக்களை குளிர்விக்குமோ அவ்வாறே அனைவரையும் குளிர்வித்து 

ஆஹ்லாதகரத்வாத் மகிழ்விப்பதால் 

சந்த்ராம்ஶு பகவான் 'சந்த்ராம்ஶு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனின் கதிர்களால் துன்புறுவோரை வெண்மதியானது எவ்வாறு தன் கிரணங்களால் குளிர்விக்குமோ, அவ்வாறே, இந்தப் பிறவியென்னும் கதிரவனின் வெப்பத்தால் தாக்கப்பட்டுத் துன்புறுவோரை பகவான் குளிர்வித்து மகிழ்ச்சியூட்டுகிறார். எனவே, அவர் 'சந்த்ராம்ஶு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

திக்ம என்றால் வெப்பம். இங்கு கதிரவனைக் குறிக்கும்.

282. ஓம் பாஸ்கரத்யுதயே நம:

பாஸ்கரத்யுதி கதிரவனின் ஒளியை 

ஸாதர்ம்யாத் ஒத்தவராய் (ஒத்த ஒளியை உடையவராய்) இருப்பதால் 

பாஸ்கரத்யுதி பகவான் 'பாஸ்கரத்யுதி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனை ஒத்த ஒளி படைத்தவராய் இருப்பதால் பகவான் 'பாஸ்கரத்யுதி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

திங்கள், மே 24, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 176

29. ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: 

நைகரூபோ ப்ருஹத்ரூப: ஶிபிவிஶ்ட: ப்ரகாஶன: ||

இந்த இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

265. ஸுபுஜ:, 266. துர்த்தர:, 267. வாக்மீ, 268. மஹேந்த்ர:, 269. வஸுத:, 270. வஸு|

271. நைகரூப:, 272. ப்ருஹத்ரூப:, 273. ஶிபிவிஶ்ட:, 274. ப்ரகாஶன|| 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

265. ஓம் ஸுபுஜாய நம:

ஶோபனா நன்மை தருவதான (அழகான

புஜா திருத்தோள்களை கொண்டிருக்கிறார் 

ஜகத்ரக்ஷகரா: உலகத்தை (உலகத்தோரை) காப்பதற்காக 

அஸ்யேதி ஸுபுஜ: எனவே, பகவான் 'ஸுபுஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த உலகத்தையும், உலகத்தோரையும் காப்பதற்காக நன்மை தருவதான, அழகான திருத்தோள்களைக் கொண்டிருப்பதால் பகவான் 'ஸுபுஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶோபனம் என்றால் காந்தி (ஒளி), நன்மை, அழகு, அலங்காரம், அணிகலன் என்று பல பொருள்கள் உண்டு. இவை அனைத்துமே பகவானின் தோள்களுக்குப் பொருந்தும்.

266. ஓம் துர்த்தராய நம:

ப்ருதிவ்யாதீனபி இந்த பூமி முதலான 

லோகதாரகான்யன்யைர் அனைவரையும் தாங்கக்கூடிய 

தாரயிதுமஶக்யானி பிறரால் தாங்குவதற்கு கடினமானவற்றையும் 

தாரயன் தாங்குகிறார் 

ந கேனசித் தாரயிதும் ஷக்ய இதி ஆனால், ஒரு பொழுதும் தான் பிறரால் தாங்க இயலாதவராய் இருப்பதால் 

துர்த்தர: பகவான் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், அனைத்தையும் தாங்கக் கூடியதானதும், பிறரால் தாங்குதற்குக் கடினமானதுமான பூமி முதலியவற்றைத் தாங்குகிறார். ஆனால், ஒரு பொழுதும் பிறரால் தாங்க இயலாதவராய் இருக்கிறார். எனவே, அவர் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

து:கேன கடினமானது 

த்யானஸமயே த்யானிக்கும் பொழுது 

முமுக்ஷுபிர் முக்தியை விழைபவர்கள் 

ஹ்ருதயே (தங்கள்) மனத்தினுள் 

தாரயத இதி (பகவானின் உருவத்தை) தாங்குவதற்கு 

துர்த்தர: எனவே, பகவான் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை விழைபவர்கள், த்யானிக்கும் பொழுது பகவானின் உருவத்தை தத்தம் மனத்தினுள் தாங்குவது மிகக் கடினமானது. எனவே, அவர் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

து: என்றால் கடினமானது. தர என்றால் தாங்குவது. பகவான் கடினமானவற்றை எளிதில் தாங்குகிறார். அவரை பிறர் தாங்குவது இயலாது. த்யானத்தின் பொழுதும் அவரது உருவத்தை நம் மனத்தினுள் அவ்வளவு எளிதில் தாங்கி விட முடியாது. இவ்வாறு, பல காரணங்களினால் பகவான் ‘துர்த்தர:’ 

267. ஓம் வாக்மினே நம:

யதோ நி:ஸ்ருதா எவரிடமிருந்து தோன்றினவோ 

ப்ரஹ்மமயீ வாக் (பரப்ரஹ்மமே சொல் வடிவாய் இருக்கும்) வேதங்கள் 

தஸ்மாத் பகவான் 

வாக்மீ ‘வாக்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானிடமிருந்தே வேதங்கள் தோன்றின. எனவே, அவர் ‘வாக்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

268. ஓம் மஹேந்த்ராய நம:

மஹாம்ஸ்சாஸாவிந்தரஸ்சேதி மிகச்சிறந்த (மிகவும் பெரிய) இந்திரன் 

மஹேந்த்ர: பகவான் ‘மஹேந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

ஈஶ்வரானாமபி ஈஶ்வர: அனைத்து ஈஸ்வரர்களுக்கும் ஈஸ்வரர்.

மிகச்சிறந்த (மிகவும் பெரிய) இந்திரன் ஆதலால், பகவான் ‘மஹேந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இந்தப் ப்ரபஞ்சத்தில் சக்தி படைத்த ஈஸ்வரர்கள் (ஆளுநர்கள்) பலர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஆளும் ஈஸ்வரனாக பகவான் இருக்கிறார் என்று இதற்குப் பொருள். 

269. ஓம் வஸுதாய நம:

வஸு தனம் வஸு என்றால் செல்வம் என்று பொருள் 

ததாதீதி (செல்வத்தை) அனைவருக்கும் அளிப்பதால் 

வஸுத: பகவான் ‘வஸுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் செல்வத்தை (வஸுவை) அளிக்கிறார் (ததா). எனவே, பகவான் ‘வஸுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த இரு (268, 269) திருநாமங்களையும் இணைத்துப் பார்க்கும் பொழுது, நமக்கு செல்வத்தை அளிக்கும் பல ஈஸ்வரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் செல்வத்தை பகவானே அளிக்கிறார் (வஸுத:). எனவே, அவர் அந்த ஈஸ்வரர்களுக்கும் ஈஸ்வரராக இருக்கிறார் (மஹேந்த்ர:) என்று பொருள் கொள்ளலாம். 

270. ஓம் வஸவே நம:

தீயமானம் கொடுக்கப்படும் 

தத் வஸ்வபி அந்த செல்வமாக 

ஸ ஏவேதி வா அவராகவே இருப்பதால் 

வஸு: பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவ்வாறு பிறருக்கு அளிக்கப்படும் செல்வமும் பகவானன்றி வேறொன்றுமில்லை. அந்த செல்வமாகவும் தானே இருப்பதால், பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஆச்சாதயத் மறைத்துக் கொள்கிறார் 

ஆத்மஸ்வரூபம் தனது இயற்கையான உருவத்தை 

மாயயேதி வா மாயையினால் 

வஸு: எனவே, பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், மாயையினால் தனது இயற்கையான உருவத்தை பிறரிடமிருந்து மறைத்துக் கொள்கிறார். எனவே, அவர் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அந்தரிக்ஷ ஏவ ஆகாயத்தில் மட்டுமே 

வஸதி வசிக்கிறார் 

நான்யத்ரேதி வேறெங்கும் (வசிப்பதில்லை) 

அஸாதாரணேன வசனேன இவ்வாறு தனிச்சிறப்புடைய 

வஸனேன இருப்பிடத்தை கொண்டிருப்பதால் 

வாயுர்வா வஸு: காற்றிற்கு (வாயு பகவானிற்கு) ‘வஸு’ என்று பெயர் (அவரது உள்ளுறை ஆத்மாவாக - அந்தர்யாமியாக இருப்பதால் பகவான் ‘வஸு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாயு பகவான் ஆகாயத்தில் மட்டுமே வசிக்கிறார். வேறெங்கும் வசிப்பதில்லை. இவ்வாறு, தனிச்சிறப்புடைய இருப்பிடத்தைக் கொண்டிருப்பதால் அவருக்கு ‘வஸு’ என்று பெயர். அந்த வாயு பகவானிற்கும் உள்ளுறை ஆத்மாவாக (அந்தராத்மாவாக) இருப்பதால் பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வஸுரந்தரிக்ஷஸத்’ (கடோபநிஶத் 2.5.2)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘ஆகாயத்தில் வசிப்பவர் வஸு’ 

271. ஓம் நைகரூபாய நம:

ஏகம் ரூபமஸ்ய ஓரு குறிப்பிட்ட உருவம் என்பதை 

ந வித்யத இதி அவர் ஏற்பதில்லை 

நைகரூப: எனவே, பகவான் ‘நைகரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒரு குறிப்பிட்ட உருவம் என்று ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, அவர் ‘நைகரூப:’ (பல உருவங்கள் கொண்டவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைகரூப: என்பதை ந + ஏக + ரூப: என்ற பிரிக்கவேண்டும். ஒரு உருவம் கிடையாது என்பது இதன் பொருள். அத்வைதத்தின் படி, பரப்ரஹ்மம் எந்த ஒரு உருவமும் அற்றவர். மாயையின் வசப்பட்டே அவருக்கு உருவம் உள்ளதாக நாம் கற்பித்துக் கொள்கிறோம்.

விஶிஶ்டாத்வைதத்தில், பகவானுக்கு பல்வேறு உருவங்கள் உண்டு. அவை அனைத்தும் உண்மையே. எனவேதான், அவருக்கு “ந ஏக ரூப:” என்ற திருநாமம் பொருந்தும் என்று பொருள் கூறுவர். பல்வேறு உருவங்கள் இருப்பதால், ஒரு உருவத்தை மட்டும் அவரது உருவம் என்று கொள்ளலாகாது என்பது இதன் பொருள்.

இந்த்ரோ மாயாபி: புருரூப ஈயதே’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.19)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தக் கடவுளானவர் (பரப்ரஹ்மம்) மாயையினால் பல்வேறு உருவங்கள் கொள்வதாக உணரப்படுகிறார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஜ்யோதீம்ஶி விஶ்ணு:’ (விஶ்ணு புராணம் 2.12.37)

விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து ஒளிகளும் விஶ்ணுவே.

இத்யாதிஸ்ம்ருதேஸ்ச | இத்தகைய ஸ்ம்ருதிகளும் இதே கருத்தை வலியுறுத்துகின்றன. 

272. ஓம் ப்ருஹத்ரூபாய நம:

ப்ருஹன்மத் மிகப்பெரிய 

வராஹாதிரூபமஸ்யேதி வராஹம் முதலிய பல்வேறு உருவங்களை எடுப்பதால் 

ப்ருஹத்ரூப: பகவான் ‘ப்ருஹத்ரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், வராஹம் முதலிய அவதாரங்களை எடுக்கும் பொழுது மிகப்பெரிய திருமேனியை (உருவத்தை) ஏற்கிறார். எனவே, அவர் ‘ப்ருஹத்ரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

273. ஓம் ஶிபிவிஶ்டாய நம:

ஶிபய: பஶவ: 'ஶிபி' என்றால் மிருகங்கள் என்று பொருள் 

தேஶு விஶதி ப்ரதிதிஶ்டதி அவற்றில் நிலைகொண்டுள்ளார் (விஶதி என்றால் நிலைபெற்றிருத்தல் என்று பொருள்

யஞ்யரூபேணேதி வேள்வியின் வடிவில் 

ஶிபிவிஶ்ட: யஞ்யமூர்த்தி: எனவே, வேள்வியின் வடிவினரான பகவான் 'ஶிபிவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேள்வியின் வடிவினரான பகவான், அந்த வேள்வியில் ஆகுதியாகக் கொடுக்கப்படும் மிருகங்களுக்குள் வேள்வியின் பொருட்டு நிலைபெற்றுள்ளார். எனவே, அவர் 'ஶிபிவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யக்ஞோ வை விஶ்ணு: பஶவ: ஶிபிர்யஞ்ய ஏவ பஶுஶு ப்ரதிதிஶ்டதி’ (தைத்த்ரீய ஸம்ஹிதை 1.7.5)

தைத்த்ரீய ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது: விஶ்ணுவே வேள்வியாவார். அந்த வேள்வியில் ஆகுதி கொடுக்கப்படும் மிருகங்களுள் வேள்வியே நிலைபெற்றுள்ளது.

விஶ்ணுவே வேள்வியாதலால், அந்த யாக மிருகங்களில் அவரே நிலைபெற்றுள்ளார் என்பது இதன் பொருள்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

ஶிபயோ ரஶ்மயஸ்தேஶு 'ஶிபி' என்றால் கிரணங்கள் என்றும் பொருள் 

நிவிஶ்ட இதி வா அவற்றுள் உறைவதால் 

ஶிபிவிஶ்ட: பகவான் 'ஶிபிவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிபி என்றால் கிரணங்கள் என்றும் பொருள். கதிரவன் மற்றும் வெண்மதியின் கிரணங்களில் உள்ளுறைந்து இருப்பதால் பகவான் 'ஶிபிவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஶைத்யாச்சயனயோகாஸ்ச ஶீதீ வாரி ப்ரசக்ஷதே |

தத்பானாத்ரக்ஷணாஸ்சைவ ஶிபயோ ரஶ்மயோ மதா: ||

தேஶு ப்ரவேஶாத்விஶ்வேஶ: ஶிபிவிஶ்ட இஹோச்யதே |

குளிர்ச்சியாய் இருப்பதாலும், பகவான் அதில் துயில்கொள்வதாலும், நீரை 'ஶி' என்று அழைப்பார்கள். அதை (கதிரவனின் கிரணங்கள்) பருகுவதாலும், (வெண்மதியின் கிரணங்கள்) பாதுகாப்பதாலும், (கதிரவன் மற்றும் வெண்மதியின்) கிரணங்களை 'ஶிபி' என்று அழைப்பர். அந்த கிரணங்களுள் (ஶிபிக்குள்) பிரவேசித்து உள்ளுறைவதால் விஶ்வேஶ்வரரான பகவான் 'ஶிபிவிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

274. ஓம் ப்ரகாஶனாய நம:

ஸர்வேஶாம் அனைத்தையும் 

ப்ரகாஶனஶீலத்வாத் ஒளிவிடச் செய்வதால்  

ப்ரகாஶன: பகவான் ‘ப்ரகாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்தையும் ஒளியூட்டுகிறார். நமக்கு ஒளியை வழங்கும் கதிரவன், வெண்மதி, தீ போன்ற அனைத்துமே பகவானிடமிருந்தே தத்தம் ஒளியைப் பெறுகின்றன. எனவே, பகவான் 'ப்ரகாஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.