16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |
அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||
இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
149. ஓம் விஶ்வயோனயே நம:
விஶ்வம்
இந்தப் ப்ரபஞ்சமே
யோனிர்யஸ்ய எவருடைய கர்ப்பப்பையாக (அனைத்தையும்
தோற்றுவிக்கும் இடமாக) உள்ளதோ
விஶ்வஸ்சாஸௌ இந்தப் ப்ரபஞ்சமாயும்
யோனிஸ்சேதி வா அதன் தோற்றுவாயாகவும் (காரணமாயும்) இருப்பதால்
விஶ்வயோனி: பகவான் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானுக்கு இந்தப்
ப்ரபஞ்சம் ஒரு கர்ப்பப்பைப் போன்று உள்ளது.
அதினின்றே அவர் அனைத்தையும் தோற்றுவிக்கிறார். எனவே, அவர் 'விஶ்வயோனி:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, பகவான் இந்தப்
ப்ரபஞ்சமாகவும், அது தோன்றுவதற்குக் காரணமாகவும் இருப்பதால் 'விஶ்வயோனி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு
117-வது திருநாமத்தில், 'விஶ்வயோனி:' என்பதற்கு "ப்ரபஞ்சத்தின் காரணம்" என்று ஆதிசங்கரர் உரை தந்துள்ளார். இங்கு, ப்ரபஞ்சமே அவரது
யோனியாய்க் கொண்டுள்ளார் (கொண்டு, மற்ற உயிர்களைப் படைக்கிறார்) என்று புனருக்தி தோஶம்
வராது ஆச்சார்யாள் பொருளுரைத்துள்ளார்.
150. ஓம் புனர்வஸவே நம:
புன: புன:
மீண்டும் மீண்டும்
ஶரீரேஶு
உடல்களுக்குள்
வஸதி வசிக்கிறார்
க்ஷேத்ரஞ்யரூபேணேதி (இந்த உடலை அறியும்)
க்ஷேத்ரக்ஞரின் வடிவில்
புனர்வஸு: எனவே, பகவான் 'புனர்வஸு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானே, அனைத்து
ஜீவராசிகளுக்குள்ளும் க்ஷேத்ரக்ஞராய் மறைந்துள்ளார். எனவே,
அவர் மீண்டும், மீண்டும் வெவ்வேறு
ஜீவராசிகளின் உடல்களுக்குள் வசிக்கிறார். எனவே, அவர் 'புனர்வஸு:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப்
ப்ரபஞ்சத்தில் எண்ணிறந்த ஜீவராசிகள் உள்ளன. தினந்தோறும் மென்மேலும்
பிறக்கின்றன. பகவான் அந்த ஒவ்வொரு ஜீவராசிகளுக்குள்ளும் உறைகிறார்.