வெள்ளி, செப்டம்பர் 24, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 192

45. ருது: ஸுதர்ஶன: கால: பரமேஶ்டீ பரிக்ரஹ: |

உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விஶ்ராமோ விஶ்வதக்ஷிண: ||

இந்த நாற்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

416. ருது:, 417. ஸுதர்ஶன:, 418. கால:, 419. பரமேஶ்டீ, 420. பரிக்ரஹ: |

421. உக்ர:, 422. ஸம்வத்ஸர:, 423. தக்ஷ:, 424. விஶ்ராம:, 425. விஶ்வதக்ஷிண: ||

416. ஓம் ருதவே நம:

காலாத்மனா பகவான் காலமே வடிவானவன் 

ருதுஶப்தேன 'ருது' என்ற 

லக்ஷ்யத இதி குறிக்கிறது 

ருது: எனவே பகவான் 'ருது' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ருது' என்ற சொல் பகவான் கால வடிவினன் என்பதைக் குறிக்கிறது. எனவே அவர் 'ருது' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

417. ஓம் ஸுதர்ஶனாய நம:

ஶோபனம் மங்களமான 

நிர்வாண ஃபலம் முக்தியை அளிக்கவல்லது 

தர்ஶனம் ஞானமஸ்யேதி தர்ஶனம் அதாவது பகவானைப் பற்றிய ஞானம் 

ஸுதர்ஶன: எனவே, பகவான் 'ஸுதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் தர்ஶனம், அதாவது அவரைப் பற்றிய ஞானமானது மிகவும் மங்களகரமான முக்தியை அளிக்கவல்லது. எனவே பகவான் 'ஸுதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஶுபே மங்களகரமான 

தர்ஶனே ஈக்ஷணே 'தர்ஶனம்' அதாவது திருக்கண்களை உடையவராதலால் 

பத்மபத்ராயதே அஸ்யேதி தாமரை இதழ்களைப் போன்ற 

ஸுதர்ஶன: எனவே, பகவான் 'ஸுதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரை இதழ்களை போன்ற  அழகிய, மங்களகரமான திருக்கண்களை உடையவராதலால் 'ஸுதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸுகேன இன்பமே (சுகமே) வடிவானவராய் 

த்ருஶ்யதே காட்சி அளிக்கிறார் பக்தைரிதி வா தனது அடியவர்களுக்கு 

ஸுதர்ஶன: எனவே, பகவான் 'ஸுதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அடியவர்களுக்கு என்றுமே இன்பமே வடிவானவராய் காட்சி அளிக்கிறார். எனவே பகவான் 'ஸுதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது அவரது அடியவர்களுக்கு பகவானைக் காண்பதை போன்ற இன்பம் வேறொன்றுமில்லை என்றும் கொள்ளலாம். 

418. ஓம் காலாய நம:

கலயதி இயங்குகிறார் (இயக்குகிறார்) 

ஸர்வமிதி வா அனைத்தையும் 

கால: எனவே, பகவான் 'கால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எப்பொழுதும் இயங்குவதால், அனைத்தையும் இயக்குவதால் பகவான் 'கால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கால: கலயதாமஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: இயங்குனவற்றில் காலம் நான்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

கலயத என்ற சொல்லிற்கு எண்ணுதல் (கணக்கெடுத்தல்) என்றும்  பொருள் உள்ளது. இதுவும், இந்த திருநாமத்திற்கு பொருத்தமானதே. பகவான் காலத்தின் வடிவில் அனைவரின் வாழ்நாளையும் கணக்கிடுகிறார். 

419. ஓம் பரமேஶ்டினே நம:

பரமே ப்ரக்ருஶ்டே 'பரம' அதாவது உயர்ந்ததான 

ஸ்வே மஹிம்னி தன்னுடைய (இயற்கையான) மகிமையால் 

ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள் 

ஸ்தாதும் நிலைபெற்றிருக்கும் 

ஶீலமஸ்யேதி தன்மையுடையவராதலால் 

பரமேஶ்டி பகவான் 'பரமேஶ்டி' என்ற என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொருவரின் இதயத்துள்ளும் ஒரு சிறிய வெற்றிடம் இருக்கும். அதை இதய ஆகாயம் என்று கூறுவர். பகவான் அந்த இதய ஆகாயத்துள் தன்னுடைய இயற்கையான, மிகச்சிறந்த மகிமையால் என்றும் நிலைபெற்றிருக்கிறார். எனவே அவர் 'பரமேஶ்டி' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவர் அங்கே தனது இயற்கையான பெருமையினால் (மஹிமையினால்) வீற்றிருக்கிறார். அங்கு இருப்பது  அவரது இயல்பான தன்மையுமாகும் (ஶீலம்).

'பரமேஶ்டி விப்ராஜதே' – மிகச்சிறந்த தன்மையுடன் வீற்றிருக்கிறார்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் 'பரமேஶ்டி' என்று அழைக்கப்படுகிறார்).     

420. ஓம் பரிக்ரஹாய நம:

ஶரணார்த்திபி: தம்மை சரணடைந்த அடியவர்களால் 

பரிதோ எல்லாவிடங்களிலும் 

க்ருஹ்யதே  அடையப்படுகிறார் 

ஸர்வகதத்வாத் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால் 

பரிக்ரஹ: எனவே பகவான் 'பரிக்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால் அவரை சரணடைந்த அடியவர்கள் அவரை எல்லாவிடங்களிலும் அடைகின்றனர் (கிரஹிக்கின்றனர்). எனவே, பகவான் 'பரிக்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரிதோ எங்கும் 

ஞாயதே இதி வா அறியப்படுகிறார் 

பரிக்ரஹ: எனவே பகவான் 'பரிக்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும் அறியப்படுகிறார் . எனவே, பகவான் 'பரிக்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பத்ரபுஶ்பாதிகம் இலைகளையோ (துளசி), பூக்களையோ 

பக்தைரர்பிதம் தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும் 

பரிகிருஹ்ணாதீதி முழுமையாக ஏற்றுக்கொள்கிறார் 

பரிக்ரஹ: எனவே பகவான் 'பரிக்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும் இலை (துளசி), பூக்கள் முதலிய எளிய பொருட்களையும் பகவான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் 'பரிக்ரஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

421. ஓம் உக்ராய நம:

ஸூர்யாதீனாமபி கதிரவன் முதலானோருக்கும் கூட 

பயஹேதுத்வாத் அச்சத்தை தருபவராக இருப்பதால் 

உக்ர: பகவான் 'உக்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவன் முதலானோருக்கும் கூட அச்சத்தை தருபவராக இருப்பதால் பகவான் 'உக்ர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பீஶாதேதி ஸூர்ய:' (தைத்ரீய உபநிஶத் 2.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (இந்த பரப்ரஹ்மனிடத்திருந்து உருவான அச்சத்தினால்) கதிரவன் உதிக்கின்றான்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

422. ஓம் ஸம்வத்ஸராய நம:

ஸம்வஸந்தி வசிக்கின்றனர் 

பூதாநி அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்) 

யஸ்மின் இதி எவருக்குள் 

ஸம்வத்ஸர: அந்த பகவான் 'ஸம்வத்ஸர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்) பகவானுக்குள் வசிக்கின்றன (இருக்கின்றன). எனவே அவர் 'ஸம்வத்ஸர' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

423. ஓம் தக்ஷாய நம:

ஜகத்ரூபேண இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில் 

வர்த்தமானத்வாத் பரந்து, விரிந்து வளர்வதால் 

தக்ஷ: பகவான் 'தக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்து வளர்வதால் பகவான் 'தக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸர்வகர்மாணி அனைத்து செயல்களையும் 

க்ஷிப்ரம் கரோதி இதி வா விரைந்து முடிக்கும் தன்மையுடையவராதலால் 

தக்ஷ: பகவான் 'தக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து செயல்களையும் விரைந்து முடிக்கும் தன்மையுடையவராதலால் பகவான் 'தக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தக்ஷ என்ற சொல்லிற்கு உள்ள பல பொருள்களில் விரைவாக செயல்படுதல், வளர்தல் (தக்ஷதே) ஆகியவையும் உள்ளன. ஆச்சார்யாள் இந்த இரு பொருள்களிலும் உரை அளித்துள்ளார். 

424. ஓம் விஶ்ராமாய நம:

ஸம்ஸாரஸாகரே இந்தப் பிறவிப்பெருங்கடலில் 

க்ஷுத்பிபாஸாதி பசி, தாகம் முதலிய 

ஶடூர்மிபிஸ் ஆறு வகையான துன்பங்களால் 

தரங்கிதே அலைக்கழிக்கப்பட்டும் 

அவித்யாத்யைர்மஹாக்லேஶைர் அறியாமை முதலான பெருங்கேடுகளாலும் 

மதாதிபிருபக்லேஶைஸ்ச (அந்த அறியாமையால் விளையும்) செருக்கு முதலிய இன்ன பிற கேடுகளாலும் 

வஶீக்ருதானாம் பீடிக்கப்பட்டு துன்புறுகின்ற (ஆத்மாவானது) 

விஶ்ராந்திம் (இவற்றலிருந்து விடுபடுவதான) அமைதியை 

காங்க்ஷமானானாம் விரும்பும்பொழுது 

விஶ்ராமம் மோக்ஷம் முக்தி என்னும் பேரின்பத்தை 

கரோதீதி அளிப்பவராதலால் 

விஶ்ராம: பகவான் 'விஶ்ராம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிறவிப்பெருங்கடலில் பசி, தாகம் முதலிய ஆறு வகையான துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டும் அறியாமை முதலான பெருங்கேடுகளாலும் (அந்த அறியாமையால் விளையும்) செருக்கு முதலிய இன்ன பிற கேடுகளாலும் பீடிக்கப்பட்டு துன்புறுகின்ற ஆத்மாவானது அமைதியை விரும்பும்பொழுது முக்தி என்னும் பேரின்பத்தை அளிப்பவராதலால் பகவான் 'விஶ்ராம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.     

425. ஓம் விஶ்வதக்ஷிணாய நம:

விஶ்வஸ்மாத் இவ்வுலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் 

தக்ஷிண: ஶக்த: 'தக்ஷிண' அதாவது (எக்காரியத்தை செய்வதிலும்) சமர்த்தர் 

விஶ்வதக்ஷிண: ஆதலால் பகவான் 'விஶ்வதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வுலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் (எக்காரியத்தை செய்வதிலும்) சமர்த்தர் ஆதலால் பகவான் 'விஶ்வதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

விஶ்வேஶு இவ்வுலகிலுள்ள 

கர்மஸு அனைத்துக் செயல்களையும் 

தாக்ஷிண்யாத்வா விரைந்து முடிக்கும் திறமை உடையவராதலால் 

விஶ்வதக்ஷிண: பகவான் 'விஶ்வதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வுலகிலுள்ள அனைத்துக் செயல்களையும் விரைந்து முடிக்கும் திறமை உடையவராதலால் பகவான் 'விஶ்வதக்ஷிண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

வியாழன், செப்டம்பர் 16, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 191

44. வைகுண்ட: புருஶ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |

ஹிரண்யகர்ப்ப: ஶத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: ||

இந்த நாற்பத்துநான்காவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

405. வைகுண்ட:, 406. புருஶ:, 407. ப்ராண:, 408. ப்ராணத:, 409. ப்ரணவ:, 410. ப்ருது: |

411. ஹிரண்யகர்ப்ப:, 412. ஶத்ருக்ன:, 413. வ்யாப்த:, 414. வாயு:, 415. அதோக்ஷஜ: ||

405. ஓம் வைகுண்டாய நம:

விவிதா வெவ்வேறு 

குண்டா கதே: 'குண்டா' என்றால் போக்கு 

ப்ரதிஹதி: (அவற்றை)  தடை செய்வது 

விகுண்டா 'விகுண்டா' எனப்படும் 

விகுண்டாயா: கர்த்தேதி அவ்வாறு தடை செய்பவராதலால் 

வைகுண்ட: பகவான் 'வைகுண்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஜகதாரம்பே இந்தப் ப்ரபஞ்சம் உருவானபொழுது (அதன் தொடக்கத்தில்) 

விஶ்லிஶ்டானி (ஒன்றோடொன்று கலவாது) பிரிந்திருந்த 

பூதானி (நீர், நிலம், நெருப்பு, காற்று, வான்வெளி ஆகிய) ஐம்பூதங்களை 

பரஸ்பரம் ஒன்றோடொன்று 

ஸம்ஸ்லேஶயன் கலக்கும்படி செய்து 

தேஶாம் கதிம் அவற்றின் போக்கை 

ப்ரதிபத்னாதீதி (பகவான்) தடை செய்தார் (எனவே அவர் 'வைகுண்ட:' என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்).

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒன்றோடொன்று கலவாதிருந்த ஐம்பூதங்களை அவை ஒன்றோடொன்று கலக்கும் படி செய்து அவற்றின் போக்கைத் தடுத்தார். இவ்வாறு வெவ்வேறு (விவித) போக்குகளை (குண்டா) தடுத்ததால் பகவான் 'வைகுண்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மயா ஸம்ஸலேஶிதா பூமிரத்பிர்வ்யோம ச வாயுனா |

வாயுஸ்ச தேஜஸா ஸார்த்தம் வைகுண்டத்வம் ததோ மம ||

(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 342.80)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான் கூறுகிறார்): நான் நிலத்தை நீரோடும், வான்வெளியை காற்றோடும் (வாயுவோடும்), காற்றை (வாயுவை) நெருப்போடும் கலந்தேன். எனவே, என்னிடத்தில் 'வைகுண்டத்வம்' இருக்கிறது.

இதி ஶாந்தி பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. 

406. ஓம் புருஶாய நம:

ஸர்வஸ்மாத்புரா ஸதனாத் அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால் 

ஸர்வபாபஸ்ய ஸாதனாத்வா அனைத்து பாவங்களையும் போக்குவதாலும் 

புருஶ: பகவான் 'புருஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால் அனைத்து பாவங்களையும் போக்குவதாலும் பகவான் 'புருஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ யத்பூர்வோஸ்மாத்ஸர்வஸ்மாத்ஸர்வான்பாப்மன ஒளஷத் தஸ்மாத்புருஶ: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.1)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) அனைவருக்கும் முதலானவர் (முதலாகத் தோன்றியவர்). அனைவரின் பாபங்களையும் அழிப்பவர். எனவே, அவர் 'புருஶ' என்றறியப்படுகிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

புரி 'புரி' என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள் 

ஶயனாத்வா ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்) 

புருஶ: பகவான் 'புருஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'புரி' என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள் ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்) பகவான் 'புருஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ வா அயம் புருஶ: ஸர்வாஸு பூர்ஶு புரிஶய: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.18)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உடல்களுக்குள்ளும் உறைவதால் (பரப்ரஹ்மமான பகவான்) புருஶ: என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

407. ஓம் ப்ராணாய நம:

ப்ராணிதி உயிர்வாழ்கிறார் 

க்ஷேத்ரக்ஞரூபேண க்ஷேத்ரக்ஞரின் வடிவில் (அனைவருக்குள்ளும்) 

ப்ராண: எனவே பகவான் 'ப்ராண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவருக்குள்ளும் (அனைத்தையும் அறியும் உள்ளுறை ஆத்மாவாக) க்ஷேத்ரக்ஞரின் வடிவில் உயிர்வாழ்கிறார். எனவே அவர் 'ப்ராண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ப்ராணாத்மனா ப்ராண வாயுவின் வடிவில் 

சேஶ்ட்யன்வா அனைவருக்குள்ளும் (எங்கும்) செல்கிறார் 

ப்ராண: எனவே பகவான் 'ப்ராண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் ப்ராண வாயுவின் வடிவில் அனைவருக்குள்ளும் செல்கிறார் (அனைவரையும் செயல்பட வைக்கிறார்). எனவே அவர் 'ப்ராண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'சேஶ்டாம் கரோதி ஸ்வஶனஸ்வரூபி' (ஸ்ரீவிஶ்ணு புராணம்)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: மூச்சுக் காற்றின் வடிவில் அனைத்தையும் செயல்படுத்துகிறார் (அனைவருக்குள்ளும் செல்கிறார்).

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

408. ஓம் ப்ராணதாய நம:

கண்டயதி அழிக்கிறார் 

ப்ராணினாம் உயிரினங்களின் 

ப்ராணான் உயிரை (அல்லது உயிர்மூச்சை) 

ப்ரளயாதிஶ்விதி ப்ரளயம் முதலிய அழிவுக்காலங்களில் 

ப்ராணத: எனவே பகவான் 'ப்ராணத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ப்ரளயம் முதலான அழிவுக்காலங்களில் உயிரினங்களின் உயிரை அழிக்கிறார். எனவே, அவர் 'ப்ராணத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

409. ஓம் ப்ரணவாய நம:

ப்ரணௌதீதி ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால் 

ப்ரணவ: பகவான் 'ப்ரணவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஓம்' என்ற ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால் பகவான் 'ப்ரணவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதீ'

'ஓம்' என்று கூறி வணங்கவேண்டும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

ப்ரணம்யதே வணங்கப்படுவதால் 

இதி வா ப்ரணவ: பகவான் 'ப்ரணவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (வேதங்களாலும், அனைத்து தேவர்களாலும்) வணங்கப்படுவதால் பகவான் 'ப்ரணவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ப்ரணமந்தீஹ யம் வேதாஸ்தஸ்மாத்ப்ரணவ உச்யதே'  

அவரை வேதங்கள் கைகூப்பி வணங்குகின்றன. எனவே அவர் ப்ரணவ என்று அழைக்கப்படுகிறார்..

இதி ஸனத்குமாரவசனான் | இது ஸனத்குமாரரின் கூற்றாகும். 

410. ஓம் ப்ருதவே நம:

ப்ரபஞ்சரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில் 

விஸ்த்ருதத்வாத் விரிவடைந்து இருப்பதால் 

ப்ருது: பகவான் 'ப்ருது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.  

இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில் விரிவடைந்து இருப்பதால் பகவான் 'ப்ருது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருது என்ற சொல்லிற்கு மிகப்பெரிய, அகலமான என்ற பொருள்கள் உண்டு. இங்கு ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்துள்ளதால் பகவான் ப்ருது என்று ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார். 

411. ஓம் ஹிரண்யகர்ப்பாய நம:

ஹிரண்யகர்ப்பஸம்பூதிகாரணம் ஹிரண்யகர்ப்பர் என்று அழைக்கப்படும் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவின் பிறப்பிடமான 

ஹிரண்மயமண்டம் பொன்மயமான முட்டையானது 

யத்வீர்யஸம்பூதம் எவருடைய சக்தியிலிருந்து தோன்றுகிறதோ 

ததஸ்ய கர்ப்ப இதி (அந்த) பகவான் ப்ரஹ்மாவிற்கும் கர்ப்பமாகிறார் 

ஹிரண்யகர்ப்ப: எனவே பகவான் 'ஹிரண்யகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவும் பகவானின் கர்ப்பத்திலிருந்து அவரது சக்தியால் உருவான பொன்மயமான முட்டையிலிருந்தே தோன்றுகிறார். எனவே, பகவான் 'ஹிரண்யகர்ப்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

412. ஓம் ஶத்ருக்னாய நம:

த்ரிதஶ (முப்பத்து முக்கோடி) தேவர்களின் 

ஶத்ரூன் எதிரிகளான அஸுரர்களை 

ஹந்தீதி கொல்வதால் 

ஶத்ருக்ன: பகவான் 'ஶத்ருக்ன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(முப்பத்து முக்கோடி) தேவர்களின் எதிரிகளான அஸுரர்களை கொல்வதால் பகவான் 'ஶத்ருக்ன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

413. ஓம் வ்யாப்தாய நம:

காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம் 

ஸர்வகார்யாணாம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்) 

வ்யாபனாத் பரவி இருப்பதால் 

வ்யாப்த: பகவான் 'வ்யாப்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

(அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்) பரவி இருப்பதால் பகவான் 'வ்யாப்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யாப்த என்றால் எங்கும் பரவி இருத்தல். இந்த ப்ரபஞ்சத்தில் நாம் காணும், கேட்கும், உணரும் அனைத்துமே காரியங்கள் (அதாவது செயல் விளைவுகள்). பகவானே அனைத்திற்கும் (இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கும்) மூல காரணம். காரணமானது காரியத்தை முழுவதுமாய் பரவி இருக்கும். எனவே, பகவானும் அனைத்தையும் (அனைத்திலும்) பரவி இருக்கிறார் என்பது ஆச்சார்யாளின் உரையாகும். 

414. ஓம் வாயவே நம:

வாதி கந்தம் கரோதீதி 'வாதி' அதாவது மணத்தை உண்டாக்குகிறார் 

வாயு: எனவே பகவான் 'வாயு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மணத்தை உண்டாக்குவதால் பகவான் 'வாயு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.9)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: மண்ணில் தூய நாற்றம் நான்

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

415. ஓம் அதோக்ஷஜாய நம:

அதோ ந க்ஷீயதே ஜாது யஸ்மாத்தஸ்மாத் அதோக்ஷஜ: (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.10)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: எப்பொழுதும் தன்னிலையினின்று நழுவாதவராதலாலும், எவ்வித குறைகளுமற்று இருப்பதாலும் பகவான் 'அதோக்ஷஜ:' என்று அழைக்கப்படுகிறார்.

இதி உத்யோக பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. 

த்யௌரக்ஷம் ஆகாயம் (த்யௌ) அக்ஷம் என்று அழைக்கப்படுகிறது 

ப்ருதிவீ சாத: பூமி (ப்ருதிவீ) அத என்று அழைக்கப்படுகிறது 

தயோர்யஸ்மாத் அஜாயத மத்யே அவற்றிற்கு இடையே தோன்றுவதால் 

வைராஜரூபேண இதி வா தனது விராட் ரூபத்தில் 

அதோக்ஷஜ: பகவான் 'அதோக்ஷஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அக்ஷம் என்றழைக்கப்படும் ஆகாயத்திற்கும், அத என்றழைக்கப்படும் பூமிக்கும் இடையே தனது விராட் ரூபத்தில் தோன்றுவதால் பகவான் 'அதோக்ஷஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத (பூமி) + அக்ஷ (ஆகாயம்) + ஜ (பிறத்தல்) = அதோக்ஷஜ 

அதோப்ருதே உள்முகமாக, உயர்ந்ததை நோக்கி திருப்பும்போது 

ப்ரத்யக் ப்ரவாஹிதே நுகர்ச்சியை நோக்கி ஓடுவதை தவிர்த்து அதன் எதிர்திசையில் 

அக்ஷகணே இந்திரியங்களை 

ஜாயத இதி வா தோன்றுகிறார் 

அதோக்ஷஜ: எனவே, பகவான் 'அதோக்ஷஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவரொருவர் தமது இந்திரியங்களை (புலன்களை) நுகர்ச்சியை நோக்கி அவை ஓடுவதை தவிர்த்து, அதன் எதிர்திசையான உள்முகமாய் உயர்ந்ததை நோக்கி திருப்புகிறாரோ, அவருக்கு பகவான் (அவர் உள்ளத்தில்) தோன்றுகிறார். எனவே, பகவான் 'அதோக்ஷஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத (அதோப்ருதே) + அக்ஷ (அக்ஷகணே) + ஜ (ஜாயதே) = அதோக்ஷஜ

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!