திங்கள், செப்டம்பர் 10, 2012

நாம ராமாயணம் உத்தர காண்டம்

உத்தர காண்டம்

முனிவர்கள் குழுவினை வணங்கிய ராம்
இராவணன் சரிதம் கேட்டவர் ராம்
சீதையின் அணைப்பினில் மகிழ்ந்தவர் ராம்
நீதி வழுவா அரசாண்ட ராம்
சீதையை கானகம் அனுப்பிய ராம்
(சதருக்னனால்) லவனாசுரவதை செய்வித்த ராம்
வான்சென்ற சம்புகன் துதி செய்த ராம்
லவகுசரை கண்டு மனமகிழ் ராம்
அஸ்வமேத வேள்வி செய்தவர் ராம்
(காலனால்) தன்பதம் திரும்பிட வேண்டிய ராம்
அயோத்தி மக்களை முக்திசெய்த ராம்
பிரமன் முதலியோர் போற்றிய ராம்
(தன்னுடைய) இயற்கையான ஒளிஉரு அடைந்தவர் ராம்
சம்ஸார தளைகளை தகர்த்திடும் ராம்
தர்மத்தை நிலையாய்  நிறுவிய ராம்
பக்திசெய்யும் அடியார்க்கு முக்திதரும் ராம்
ஆண்ட சராசரத்தை காத்திடும் ராம்
அணைத்து இன்னலையும் தீர்த்திடும் ராம்
வைகுண்டத்தில் நிலைபெற்ற ராம்
ஆரா இன்பத்தை அளித்திடும் ராம்

ராம ராம ஜெய ராஜாராம் 
ராம ராம ஜெய சீதாராம் !!!




நாம ராமாயணம் யுத்த காண்டம்

யுத்த காண்டம் 

இராவண வதத்திற்கு புறப்பட்ட ராம்
வானரர் சூழ வலம் வந்த ராம்
கடலினை வழிவிட செய்தவர் ராம்
வீடணர்கபயம் அளித்தவர் ராம்
கற்களில் சேது அமைத்தவர் ராம்
கும்பகர்ணன் தலை துண்டித்த ராம்
ராக்ஷஸ சேனையை அழித்தவர் ராம்
அஹிராவணனை வதம் செய்த ராம்
பத்துத்தலை இராவணனை கொன்றவர் ராம்
அயன் அரன் தேவர்கள் வணங்கிய ராம்
வானில் தயரதரை கண்டவர் ராம்
சீதையை கண்டு மகிழ்ந்த ராம்
வீடணனை அரசனாய் நியமித்த ராம்
புஷ்பக விமானத்தில் ஏறிய  ராம்
பரத்வாஜ முனிவர் வணங்கிய ராம்
பரதன் உள்ளத்தை மகிழ்வித்த ராம்
சாகேத புரிக்கு அணிகலன் ராம்
அனைவரின் ஆசியை பெற்றவர் ராம்
மணிநிறை அரியணை  அமர்ந்தவர் ராம்
அழகிய மணிமுடி அணிந்தவர் ராம்
புவிமிசைஅரசரில் உயர்ந்தவர் ராம்
வீடணர்க்கு ரங்கனை அளித்தவர் ராம்
வானர குலத்திற்கு அருளிய ராம்
அனைத்து உயிரையும் காத்தவர் ராம்
உலகம் அனைத்தையும் ஆண்டவர் ராம்

ராம ராம ஜெய ராஜாராம்  
ராம ராம ஜெய சீதாராம் !!!