12. வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஶகர்மா வ்ருஶாக்ருதி: ||
இந்த பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன. :
104. வஸு:, 105. வஸுமனா, 106. ஸத்ய:, 107. ஸமாத்மா, 108. ஸம்மித:, 109. ஸம: |
110. அமோக:, 111. புண்டரீகாஷ:, 112. வ்ருஶகர்மா, 113. வ்ருஶாக்ருதி: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
107. ஓம் ஸமாத்மனே நம:
ஸம ஆத்மா அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும்
யஸ்ய அவரது மனம்
ராக விருப்பு
த்வேஶாதிபிர் வெறுப்பு போன்றவைகளால்
அதூஶித களங்கப்படாது இருப்பதால்
ஸ: ஸமாத்மா பகவான் 'ஸமாத்மா' என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
ஸர்வபூதேஶு அனைத்து ஜீவராசிகளையும்
ஸம ஏக ஒன்றாகவே சமமாக எண்ணும்
ஆத்மா வா ஆத்மா பகவான் என்பது இதன் பொருளாகும்.
பகவானின் மனம்
விருப்பு, வெறுப்புக்கள் என்ற
களங்கங்கள் அற்றது. எனவே, அவர் அனைத்து
ஜீவராசிகளையும் (விருப்பு வெறுப்புகளற்று) ஒன்றாகவே பார்க்கிறார். எனவே, பகவான்
'ஸமாத்மா' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
'ஸம ஆத்மேதி
வித்யாத்'
அந்த
ஆத்மன் ஸமமானவர் என்று அறிவாயாக.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள்
கூறுகின்றன.
108. ஓம் ஸம்மிதாய நம: / ஓம் அஸம்மிதாய நம:
ஸர்வைர் அனைத்து
அப்யர்தஜாதை: பதார்த்தங்களிலும்
பரிச்சின்ன: (நீக்கமற
நிறைந்திருப்பதால்) பகவானை அறியமுடியுமாதலால்
ஸம்மித:
பகவான் 'ஸம்மித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸம்மித: என்றால் அளவிடமுடிந்தவர்
என்று பொருள்.
பகவான் அனைத்துப்
பதார்த்தங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்.
எனவே (அப்பதார்த்தங்களைக் கொண்டு) அவரை அளவிடமுடியும், அறியமுடியுமாதலால் அவர் 'ஸம்மித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வைர் அனைத்து
அபரிச்சின்னோSமித (அனைத்திலும்
நிறைந்திருந்தாலும் இவை மட்டும்தான் என்று) பகவானை
அளவிடமுடியாததால்
இதி
அஸம்மித: பகவான் 'அஸம்மித:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான்
அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாலும்,
அவர் எவற்றுடனும் தொடர்பின்றி இருக்கிறார். எனவே,
அவரை எதைக் கொண்டும் அடக்கிவிடமுடியாது, அளவிடமுடியாது.
எனவே, பகவான் 'அஸம்மித:'
என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அஸம்மித: என்றால் அளவிடமுடியாதவர்
என்று பொருள். ஸமாத்மாஸம்மித ஸம: என்று இந்த ஸ்லோகத்தில் வருகிறது. இதை ஸமாத்மா + ஸம்மித: என்றும் பிரிக்கலாம், ஸமாத்மா + அஸம்மித: என்றும் பிரிக்கலாம். எனவே, ஆசார்யாள் இதற்கு இரண்டு
விளக்கங்களையும் அளித்துள்ளார். ஆனால், பொதுவாக ஸ்மார்த்த ஸம்ப்ரதாயத்தில் ஸஹஸ்ரநாமத்தை நாமாவளியாக
உரைக்கும்பொழுது, 'அஸம்மித:' (பகவான் அளவிடமுடியாதவர்) என்ற திருநாமத்தை உரைப்பதே
வழக்கத்தில் உள்ளது.