ஞாயிறு, ஏப்ரல் 16, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 219

72. மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக: |

மஹாக்ரதுர்மஹாயஜ்வா மஹாயக்ஞோ மஹாஹவி: || 

இந்த எழுபத்திரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

671. மஹாக்ரம:, 672. மஹாகர்மா, 673. மஹாதேஜ:, 674. மஹோரக: |

675. மஹாக்ரது:, 676. மஹாயஜ்வா, 677. மஹாயக்ஞ:, 678. மஹாஹவி: || 

671. மஹாக்ரமாய நம:

மஹாந்த: மிகப்பெரிய (நீண்ட) 

க்ரமா: பாதவிக்ஷேபா 'க்ரமா' அதாவது அடிகளை உடையவராதலால் 

அஸ்யேதி மஹாக்ரம: பகவான் 'மஹாக்ரம:' என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகப்பெரிய (நீண்ட) அடிகளை உடையவராதலால் பகவான் 'மஹாக்ரம:' என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஶம் நோ விஶ்ணுருருக்ரம:' (தைத்ரீய உபநிஶத் ஶாந்தி பாடம்)

தைத்ரீய உபநிஶத் ஶாந்தி பாடத்தில் கூறப்பட்டுள்ளது: நீண்ட அடிகளை உடைய பகவான் விஷ்ணு எங்களுக்கு மங்களத்தை கொடுக்கட்டும்.

இங்கு அடி என்ற சொல் பாதத்தை குறிக்கவில்லை. மாறாக, கால்களை வைத்து நடக்கும் அளவைக் குறிக்கிறது.

672. மஹாகர்மணே நம:

மஹத் மிகப்பெரிய (மிகச்சிறந்த

ஜகதுத்பத்யாதி இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் முதலான 

கர்மாஸ்யேதி செயல்களைப் (காரியங்களை) புரிபவராதலால் 

மஹாகர்மா பகவான் 'மஹாகர்மா'  என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்தல் முதலான மிகப்பெரிய (மிகச்சிறந்த) செயல்களைப் (காரியங்களை) புரிபவராதலால் பகவான் 'மஹாகர்மா'  என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

673. மஹாதேஜஸே நம:

யதீயேன தேஜஸா எவருடைய ஒளியானது 

தேஜஸ்வினோ ஒளியை அளிக்கிறதோ 

பாஸ்கராதய: கதிரவன் முதலானவற்றிற்கு 

தத்தேஜோ அந்த ஒளியானது 

மஹதஸ்யேதி மிகச்சிறந்த ஒளியாகக் கருதப்படுகிறது 

மஹாதேஜ: எனவே (அந்த ஒளியை உடைய பகவான்) 'மஹாதேஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஒளியானது (நமக்கெல்லாம் ஒளியை உமிழும்) கதிரவன் முதலானவற்றிற்கும் ஒளியை அளிக்கிறது. இத்தகைய மிகச்சிறந்த ஒளியுடையவர் ஆதலால் பகவான் 'மஹாதேஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யேன ஸூர்யஸ்தபதி தேஜஸேத்த:' (தைத்ரீய ப்ராஹ்மணம் 3.12.9.7)

தைத்ரீய ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது: எவருடைய ஒளியால் கதிரவன் ஒளிவீசுகின்றதோ…

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘யதாதித்யகதம் தேஜோ ஜகத் பாஸயதேகிலம் |

யச்சந்த்ரமஸி யச்சாக்னௌ தத்தேஜோ வித்தி மாமகம் ||’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

ஸ்ரீமத்பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும், சந்திரனிடத்துள்ளதும், தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடையதே என்றுணர்.

இதி பகவத்வசனாச்ச | இது (ஸ்ரீமத்பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

க்ரௌர்ய (தீயவர்களிடம்) கடுமையும், 

ஶௌர்யாதிபிர்தர்மைர் ஸூரத்தனம் முதலிய குணங்களால் 

மஹத்பி: மிகச்சிறந்த 

ஸமலங்க்ருத அலங்கரிக்கப்பட்டுள்ளவர் 

இதி வா மஹாதேஜா: எனவே பகவான் 'மஹாதேஜா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது (தீயவர்களிடம்) கடுமை, ஸூரத்தனம் முதலிய மிகச்சிறந்த குணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளவர் ஆதலால், பகவான் 'மஹாதேஜா:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை  காக்கவும், தவறிழைப்போரை தண்டிக்கும் பொருட்டே அவர் கடுமை முதலான குணங்களை ஏற்பதால், அவையும் பகவானுக்கு ஒரு அணிகலன் போன்றதே.

674. மஹோரகாய நம:

மஹாம்ஸ்சாஸாவுரகஸ்சேதி மிகச்சிறந்த பாம்பின் வடிவிலிருப்பதால் 

மஹோரக: பகவான் 'மஹோரக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(வாஸுகி என்னும்) மிகச்சிறந்த பாம்பின் வடிவிலிருப்பதால் பகவான் 'மஹோரக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸர்ப்பானாமஸ்மி வாஸுகி:' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.28)

ஸ்ரீமத்பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: பாம்புகளில் வாஸுகி

இதி பகவத்வசனாத் | இது (ஸ்ரீமத்பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

ஸர்ப்பம் = ஒரு தலை பாம்புகள்; நாகம் = பல தலை கொண்ட பாம்புகள்.

675. மஹாக்ரதவே நம:

மஹாம்ஸ்சாஸௌ மிகச்சிறந்த 

க்ரதுஸ்ஶேதி வேள்வியின் வடிவாக இருப்பதால் 

மஹாக்ரது: பகவான் 'மஹாக்ரது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்த வேள்வியின் வடிவாக இருப்பதால் பகவான் 'மஹாக்ரது:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'யதாஸ்வமேத க்ரதுராட்' (மனு ஸ்ம்ருதி 11.260)

மனு ஸ்ம்ருதியில் மனு பகவான் கூறுகிறார்: எவ்வாறு அஸ்வமேதம் வேள்விகள் அரசனாக உள்ளதோ...

இதி மனுவசனாத் | மனு பகவானின் இந்தக் கூற்றின்படி

ஸோSபி ஸ ஏவேதி ஸ்துதி: (அஸ்வமேதம் குறித்த) இந்த மனுஸ்ம்ருதி வாக்கியமும் பகவானையே போற்றுகின்றது.

676. மஹாயஜ்வனே நம:

மஹாமஸ்சாஸௌ மிகச்சிறந்தவர் 

யஜ்வா சேதி 'யஜ்வா' அதாவது வேள்வி புரிபவராகவும் இருப்பதால் 

லோக ஸங்க்ராஹார்த்தம் உலக நன்மைக்காக 

யஞ்ஞான் வேள்வி 

நிர்வர்த்தயன் புரிகிறார் 

மஹாயஜ்வா எனவே பகவான் 'மஹாயஜ்வா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்தவராக இருப்பதாலும், உலக நன்மைக்காக வேள்வி புரிபகவாராக இருப்பதாலும் பகவான் 'மஹாயஜ்வா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

677. மஹாயக்ஞாய நம:

மஹாம்ஸ்சாஸௌ மிகச்சிறந்த 

யக்ஞஸ்ஶேதி வேள்வியாக இருப்பதால் 

மஹாயக்ஞ: பகவான் 'மஹாயக்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்த வேள்வியாக இருப்பதால் பகவான் 'மஹாயக்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'யஞானாம் ஜபயஞோஸ்மி' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.25)

ஸ்ரீமத்பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்

இதி பகவத்வசனாத் | இது (ஸ்ரீமத்பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

678. மஹாஹவிஶே நம:

மஹஸ்ஶ மிகச்சிறந்தவராகவும் 

தத்தவிஸ்ஶேதி (தத் ஹவிஸ்ஶேதி) 'ஹவிஸ்' (வேள்வியில் அர்பணிக்கப்படும் பொருளாகவும் இருக்கிறார் 

ப்ரஹ்மாத்மனி ப்ரஹ்ம பாவனையில் 

ஸர்வம் அனைத்தும் 

ஜகத்ததாத்மதயா (ப்ரஹ்மமாகவே உள்ள) இந்த ப்ரபஞ்சம் அனைத்தையும் 

ஹுயத இதி வேள்வியில் அர்பணிப்பதால் 

மஹாஹவி: பகவான் 'மஹாஹவி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகச்சிறந்தவர். மேலும், ப்ரஹ்ம பாவனையில், ப்ரஹ்ம மயமாயுள்ள இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தையும் வேள்வியில் அர்ப்பணிக்கப்படுவதால் (பரப்ரஹ்மமான) பகவான் வேள்வியின் ஹவிஸாகவும் இருக்கிறார். எனவே அவர் 'மஹாஹவி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

மஹாகர்துரித்யாதயோ 'மஹாக்ரது:' முதலான திருநாமங்களில் 

பஹுவ்ரீஹயோ குறிக்கப்படுவதாலும் 

வா மஹாஹவி: பகவான் 'மஹாஹவி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அல்லது, 'மஹாக்ரது:' முதலான திருநாமங்களில் குறிக்கப்படுவதாலும் பகவான் 'மஹாஹவி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 


ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

ஞாயிறு, ஏப்ரல் 09, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 218

71. ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்த்தன: |

ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஞ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: || 

இந்த எழுபத்தொன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

661. ப்ரஹ்மண்ய:, 662. ப்ரஹ்மக்ருத், 663. ப்ரஹ்மா, 664. ப்ரஹ்ம, 665. ப்ரஹ்மவிவர்த்தன: |

666. ப்ரஹ்மவித், 667. ப்ராஹ்மணோ, 668. ப்ரஹ்மீ, 669. ப்ரஹ்மஞ:, 670.ப்ராஹ்மணப்ரிய: || 

661. ப்ரஹ்மண்யாய நம:

'தபோ வேதாஸ்ச விப்ராஸ்ச ஞானம் ச ப்ரஹ்மஸம்ஞிதம் |' தவம், மறை (வேதங்கள்), அந்தணர்கள் மற்றும் அறிவு (ஞானம்) ஆகியவை 'ப்ரஹ்மம்' என்று அழைக்கப்படும் 

தேப்யோ இவை நான்கின் 

ஹிதத்வாத் நன்மையை விழைபவராதலால் 

ப்ரஹ்மண்ய: பகவான் 'ப்ரஹ்மண்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தவம், மறை (வேதங்கள்), அந்தணர்கள் மற்றும் அறிவு (ஞானம்) ஆகியவை 'ப்ரஹ்மம்' என்று அழைக்கப்படும்.  இவை நான்கின் நன்மையை விழைபவராதலால் (இவை நான்கிற்கும் நன்மையை அளிப்பவராதலால்) பகவான் 'ப்ரஹ்மண்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

662. ப்ரஹ்மக்ருதே நம:

தபஆதீனாம் தவம் முதலானவைகளை 

கர்த்ருத்வாத் உருவாக்கியவர் ஆதலால் 

ப்ரஹ்மக்ருத் பகவான் 'ப்ரஹ்மக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(மேற்கூறிய) தவம் முதலியவைகளை பகவானே உருவாக்கினார். எனவே, அவர் 'ப்ரஹ்மக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

663. ப்ரஹ்மணே நம:

ப்ரஹ்மாத்மனா நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவின் வடிவில் 

ஸர்வம் அனைத்தையும் 

ஸ்ருஜதீதி படைப்பதால் 

ப்ரஹ்மா பகவான் 'ப்ரஹ்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே நான்முகக் கடவுளின் வடிவில் (அவரது உள்ளுறை ஆன்மாவாக இருந்து) அனைத்தையும் படைக்கிறார். எனவே அவர் 'ப்ரஹ்மா' என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

664. ப்ரஹ்மணே நம:

ப்ருஹத்வாத் தான் (ஞானம் முதலானவற்றில்) மிகப்பெரியவராகவும் 

ப்ருஹ்மணத்வாச்ச தன்னை அடைந்தோரை (தன்னை அறிந்தோரை) மிகப்பெரியவராய் உயர்த்தவல்லவராகவும் 

ஸத்யாதி உண்மை, இருப்பு முதலான 

லக்ஷணம் இலக்கணங்கள் பொருந்தியவராகவும் இருப்பதால் 

ப்ரஹ்ம பகவான் 'ப்ரஹ்ம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தான் (ஞானம் முதலானவற்றில்) மிகப்பெரியவராகவும் தன்னை அடைந்தோரை (தன்னை அறிந்தோரை) மிகப்பெரியவராய் உயர்த்தவல்லவராகவும், உண்மை, இருப்பு முதலான இலக்கணங்கள் பொருந்தியவராகவும் இருப்பதால் பகவான் 'ப்ரஹ்ம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம' (தைத்ரீய உபநிஶத் 2.1)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்ம்) என்றுமுள்ள ஸ்வரூபத்தை உடையது, அறிவு மயமானது, வரையறுக்கப்படாதது (எல்லைகள் அற்றது).

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘ப்ரத்யஸ்தமிதபேதம் யத் ஸத்தாமாத்ரமகோசரம் |

வசஸாமாத்மஸம்வேத்யம் தஞ்ஞானம் ப்ரஹ்மஸம்ஞிதம் || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.7.53)’

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எது அனைத்து பேதங்களும் (பிரிவுகள், வேற்றுமைகள்)  அற்றதோ, உண்மையாக  இருப்பதோ, வாக்கால் விவரிக்க இயலாததோ, அறியத்தக்க ஒன்றாக இருக்கிறதோ அந்த ஞானத்தை (அறியத்தக்க பகவானை) ப்ரஹ்மம் என்று அழைக்கின்றனர்.

இதி விஶ்ணு புராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

665. ப்ரஹ்மவிவர்த்தனாய நம:

தபஆதீனாம் தவம் முதலானவைகளை 

விவர்த்தநாத் வளர்ப்பதால் 

ப்ரஹ்மவிவர்த்தன: பகவான் 'ப்ரஹ்மவிவர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தவம் முதலானவைகளை வளர்ப்பதால் பகவான் 'ப்ரஹ்மவிவர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

666. ப்ரஹ்மவிதே நம:

வேதம் மறைகளையும் 

வேதார்த்தம் மறைகளின் பொருளையும் 

யதாவத் உள்ளதை உள்ளபடி 

வேத்தீதி அறிவதால் 

ப்ரஹ்மவித் பகவான் 'ப்ரஹ்மவித்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

மறைகளையும், மறைகளின் பொருளையும் உள்ளதை உள்ளபடி அறிவதால் ப்ரஹ்மவித் பகவான் 'ப்ரஹ்மவித்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

667. ப்ராஹ்மணே நம:

ப்ராஹ்மணாத்மனா (அவர்களது உள்ளுறை ஆன்மாவாக) அந்தணர்களின் வடிவில் 

ஸமஸ்தானாம் அனைத்து 

லோகாநாம் உலகங்களிலும் 

ப்ரவசனம் குர்வன் உபதேசிப்பதால் 

வேதஸ்யாயமிதி மறைகளில் (வேதங்களில்) உள்ளவற்றை (உள்ளபடி) 

ப்ராஹ்மண: பகவான் 'ப்ராஹ்மண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்தணர்களின் வடிவில் (அவர்களது உள்ளுறை ஆன்மாவாக) உலகனைத்திற்கும் மறைகளில் (வேதங்களில்) உள்ளவற்றை (உள்ளபடி) உபதேசிப்பதால் பகவான் 'ப்ராஹ்மண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

668. ப்ரஹ்மிணே நம:

ப்ரஹ்மஸம்ஞிதாஸ் ப்ரஹ்மம் என்ற சொல்லினால் குறிக்கப்படும் 

தச்சேஶபூதா ப்ரஹ்மத்திற்கு உட்பட்ட (தவம், வேதம், மனம் முதலியவற்றை) 

அத்ரேதி தன்னுள்ளே கொண்டவராதலால் 

ப்ரஹமீ பகவான் 'ப்ரஹமீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ப்ரஹ்மம் என்ற சொல்லினால் ப்ரஹ்மத்திற்கு உட்பட்ட (தவம், வேதம், மனம் முதலியவற்றை) அனைத்தையும் தன்னுள்ளே கொண்டவராதலால் பகவான் 'ப்ரஹமீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

669. ப்ரஹ்மஞ்ஞாய நம:

வேதான் அனைத்து மறைகளையும் (வேதங்களையும்) 

ஸ்வாத்மபூதான் தம்முடைய உருவமாகவே 

ஜானாதீதி அறிவதால் 

ப்ரஹ்மஞ்ஞ: பகவான் 'ப்ரஹ்மஞ்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து மறைகளையும் (வேதங்களையும்) தம்முடைய உருவமாகவே அறிவதால் பகவான் 'ப்ரஹ்மஞ்ஞ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

670. ப்ராஹ்மணப்ரியாய நம:

ப்ராஹ்மணானாம் அந்தணர்களுக்கு 

ப்ரியோ விருப்பமானவர் 

ப்ராஹ்மணப்ரிய: பகவான் 'ப்ராஹ்மணப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்தணர்களுக்கு விருப்பமானவர் ஆதலால் பகவான் 'ப்ராஹ்மணப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராஹ்மணா: அந்தணர்களை 

ப்ரியா விரும்புபவராதலால் 

அஸ்யேதி வா ப்ராஹ்மணப்ரிய: பகவான் 'ப்ராஹ்மணப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அந்தணர்களை விரும்புபவராதலால் பகவான் 'ப்ராஹ்மணப்ரிய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்னன்தம் ஶாபந்தம் பருஶம் வதந்தம் யோ

ப்ராஹ்மணம் ந ப்ரணமேத் யதார்ஹம் |

ஸ பாபக்ருத் ப்ரஹ்மதவாக்னிதக்தௌ

வத்யஸ்ச தண்டயஸ்ச ந சாஸ்மதீய: ||’

பகவான் கூறுகிறார்: கொன்றாலும், சாபமிட்டாலும், சுடுசொல் கூறினாலும் அந்தணர்களை தகுந்த முறையில் வணங்காத பாவிகள் அந்த அந்தணர்களின் (தவத்தால் உருவாகும்) நெருப்பால் துன்புறுத்தப்படுவர். அத்தகைய பாவி கொல்லப்படவும், தண்டிக்கப்படவும் தக்கவன். அவன் எனது அடியவனும் இல்லை.

இதி பகவத்வசனாத் இது பகவானின் கூற்றாகும்.

‘யம் தேவம் தேவகி தேவி வஸுதேவாதஜீஜனத் |

பௌமஸ்ய ப்ரஹ்மணோ குப்த்யை தீப்தமக்னிமிவாரணி: ||’ (ஸ்ரீமத் மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 47.29)

ஸ்ரீமத் மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு அரணிக்கட்டையானது (அதனின்று) ஒளிரும் நெருப்பை உருவாக்குகிறதோ, அவ்வாறே தேவகி வஸுதேவரின் மூலம் பூமி மற்றும் அந்தணர்களை காக்கும் பொருட்டு அந்த தேவனை (பகவான் கண்ணனை) பிறப்பித்தாள். 

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!!!

ஞாயிறு, ஏப்ரல் 02, 2023

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 217

70. காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |

அநிர்தேஶ்யவபுர்விஶ்ணுர்வீரோனந்தோ தனஞ்ஜய: || 

இந்த எழுபதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

651. காமதேவ:, 652. காமபால:, 653. காமீ, 654. காந்த:, 655. க்ருதாகம: |

656. அநிர்தேஶ்யவபு:, 657. விஶ்ணு:, 658. வீர:, 659. அனந்த:, 660. தனஞ்ஜய: || 

651. காமதேவாய நம:

தர்மாதி அறம் முதலான 

புருஶார்த்தசதுஶ்டயம் நான்கு அடையத்தகுந்த இலக்குகளை 

வாஞ்சத்பி: அடைய விழைவோரால் 

காம்யத இதி காம: விரும்பப்படுபவராதலால் 'காம' என்றும் 

ஸ சாஸௌ தேவஸ்சேதி அவர்களது தேவனாக இருப்பதாலும் 

காமதேவ: பகவான் 'காமதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறம் முதலான (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நான்கு அடையத்தகுந்த இலக்குகளை அடைய விழைவோரால் விரும்பப்படுபவராதலாலும் (அந்தப் பலன்களை அளிப்பதால்) அவர்களது தேவனாக இருப்பதாலும் பகவான் 'காமதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

652. காமபாலாய நம:

காமினாம் தம்மிடம் ஆசை வைப்போரின் 

காமான் அனைத்து ஆசைகளையும் 

பாலயதீதி காப்பாற்றுகிறார் (நிறைவேற்றுகிறார்) 

காமபால: எனவே பகவான் 'காமபால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(மேற்கூறியவாறு) தம்மிடம் ஆசை வைப்போரின் அனைத்து (நியாயமான) ஆசைகளையும் பகவான் காப்பாற்றுகிறார் (நிறைவேற்றுகிறார்). எனவே, அவர் 'காமபால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

653. காமினே நம:

பூர்ண முழுமையாக நிறைவேற்றப்பட்டவர் 

காம (அனைத்து) ஆசைகளும் 

ஸ்வபாவத்வாத் இயற்கையாகவே 

காமீ எனவே பகவான் 'காமீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் அனைத்து ஆசைகளும் இயற்கையாகவே முழுமையாக நிறைவடைகின்றன. எனவே அவர் 'காமீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

654. காந்தாய நம:

அபிரூபதமம் அழகுமிக்க 

தேஹம் திருவுடலை 

வஹன் உடையவராதலால் 

காந்த: பகவான் 'காந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழகுமிக்க திருவுடலை உடையவராதலால் பகவான் 'காந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்விபரார்தாந்தே இரண்டு பரார்த்த காலத்தின் முடிவில் 

கஸ்ய 'க' என்று அழைக்கப்படும் 

ப்ரஹ்மணோSப்யந்தோSஸ்மாதிதி வா ப்ரஹ்மாவிற்கும் அந்தமாய் (காலனாய்) இருக்கிறபடியால் 

காந்த: பகவான் 'காந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'க' என்று அழைக்கப்படும் படைக்கும் கடவுளான நான்முகனுக்கு (ப்ரஹ்மாவிற்கு) அவரது காலக்கணக்கின் படி 100 ஆண்டுகள் ஆயுளாகும். இவ்வாறு இரண்டு பரார்த்தங்கள் (இரண்டு 50 ஆண்டுகள், அதாவது 100 ஆண்டுகள்) கழிந்தபின் ப்ரஹ்மாவிற்கும் பகவான் 'அந்தமாய்' இருக்கிறார் (அதாவது ப்ரஹ்மாவையும் மரணிக்க செய்கிறார்). எனவே பகவான் 'காந்த:' (க + அந்த:) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மாவின் ஆயுட்கால கணக்கு:

1 மனித வருடம் = தேவர்களுக்கு 1 நாள்

360 தேவ நாட்கள் (360 மனித வருடங்கள்) = தேவர்களுக்கு ஒரு வருடம்

12000 தேவ வருடங்கள் (43,20,000 மனித வருடங்கள்) = 1 சதுர் யுகம் (நான்கு யுகங்கள்)

1000 சதுர் யுகம் (432 கோடி மனித வருடங்கள்) = ப்ரஹ்மாவின் பகல் பொழுது

1000 சதுர் யுகம் (432 கோடி மனித வருடங்கள்) = ப்ரஹ்மாவின் இரவு பொழுது

ஆக, ப்ரஹ்மாவின் ஒரு நாள் என்பது மனித வருடக் கணக்கில் 864 கோடி ஆண்டுகள்

இவ்வாறு 360 நாட்கள் (360 *864 கோடி மனித ஆண்டுகள்) ப்ரஹ்மாவின் ஒரு வருடம்

இவ்வாறு நூறு வருடங்கள் ப்ரஹ்மாவின் ஆயுட்காலமாகும் (100 * 360 * 8640000000 மனித வருடங்கள்)

655. க்ருதாகமாய நம:

க்ருத செய்தார் (உருவாக்கினார்) 

ஆகம: ஆகமங்களை 

ஶ்ருதிஸ்ம்ருத்யாதிலக்ஷணோ வேதங்கள் மற்றும் ஸ்ம்ருதிகள் போன்ற 

யேன ஸ க்ருதாகம: எனவே, பகவான் 'க்ருதாகம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வேதங்கள் மற்றும் ஸ்ம்ருதிகள் போன்ற ஆகமங்களை (ஸாஸ்திரங்களை) உருவாக்கினார். எனவே அவர் 'க்ருதாகம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஶ்ருதிஸ்ம்ருதி மமைவாஞே'

பகவான் கூறுகிறார்: வேதங்களும், ஸ்ம்ருதிகளும் என்னுடைய ஆணைகளே

இதி பகவத்வசனாத் | பகவானின் இந்தக் கூற்றின்படி (பகவானே ஆகமங்களை உருவாக்கினார் என்பது விளங்கும்).

'வேதா: ஶாஸ்த்ராணி விஞ்ஞானமேதத்ஸர்வம் ஜனார்தனாத்' (ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமம் 136)

இத்யத்ரைவ வக்ஷ்யதி |

(ஸ்ரீ பீஶ்மாச்சாரியாராலும்) ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பின்வரும் ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது: வேதங்களும், ஸாஸ்திரங்களும் பகவான் ஸ்ரீஜனார்தனராலேயே வெளியிடப்பட்டன.

656. அநிர்தேஶ்யவபுஶே நம:

இதம் ததீஶ்ருதம் இத்தகையது, இதனால் உண்டானது என்று 

வேதி நிர்தேஶ்டும் யன்ன ஶக்யதே அறிந்துகொள்ள இயலாத 

குணாத்யதீதத்வாத் முக்குணங்களுக்கு மேற்பட்ட (அவற்றோடு கலவாத) 

ததேவ ரூபமஸ்யேதி அவரது உருவம் 

அநிர்தேஶ்யவபு: எனவே பகவான் 'அநிர்தேஶ்யவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் உருவம் முக்குணங்களுடன் கலவாத, அவற்றுக்கு மேற்பட்ட உருவமுடையவராதலால் பகவான் 'அநிர்தேஶ்யவபு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 177-வது (அநிர்தேஶ்யவபு:) திருநாமத்தில் ஆசார்யாள் பகவானின் திருமேனி பிறரால் அறியமுடியாத மிக உயர்ந்த வஸ்துவால் உருவானது என்று உரை அளித்திருந்தார். இங்கு, முக்குணங்களின் கலவாமையினால் அநிர்தேஶ்யவபு: என்று விளக்கியுள்ளார். நம்மால் இவ்வுலகில் அறியப்படும் அனைத்து பொருட்களும் முக்குணங்களின் கலவையினால் உருவானது. ஆனால், பகவான் அவற்றிற்கு மேம்பட்டவர்.

657. விஶ்ணவே நம:

ரோதஸி விண்ணையும், மண்ணையும் 

வ்யாப்ய பரவிய (பரந்துள்ள) 

காந்திரப்யாதிகா மிகச்சிறந்த ஒளியுடன் 

ஸ்திதாஸ்யேதி (நிலைபெற்று) இருப்பவராதலால் 

விஶ்ணு: பகவான் 'விஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

பகவான் தனது சிறந்த ஒளியால் (காந்தியால்) இந்த விண்ணையும், மண்ணையும் பரவி, பரந்து நிலைபெற்றுள்ளார். எனவே அவர் 'விஶ்ணு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யாப்ய மே ரோதஸி பார்த்த காந்திரப்யதிகா ஸ்திதா |

க்ரமணாத்வ்யாப்யஹம் பார்த்த விஶ்ணுரித்யபிஸம்ஞித: |  (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 341.42-43)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் பகவான் கூறுகிறார்: ஓ பார்த்தா!! விண்ணையும், மண்ணையும் எனது சிறந்த ஒளியால் பரந்து, பரவியுள்ளேன்.

எனது பாதங்களால் மூவுலகங்களையும் எனது பாதங்களால் தாவி நடந்தேன். எனவே, நான் 'விஶ்ணு' என்று அழைக்கப்படுகிறேன்.

முன்பு 2வது திருநாமத்தில் விஶ்ணு என்ற திருநாமத்திற்கு, 'எங்கும் பரவியிருப்பவர் (வேவேஶ்டி)', 'அனைத்துப் பொருட்களிலும் உட்புகுந்திருப்பவர் (விஶதேர்வா) என்று ஆச்சார்யாள் உரை அளித்திருந்தார். பின்னர் 258வது திருநாமத்தில் எங்கும் வ்யாபித்திருப்பவர் ('விஶ்ணுர்விக்ரமனாத்') என்று உரை அளித்திருந்தார். இங்கு தனது காந்தியால் எங்கும் பரந்து நிலைபெற்றிருப்பவர் என்று பொருள் அளித்துள்ளார்.

658. வீராய நம:

கத்யாதிமத்வாத் கதி (செல்லுதல்) முதலானவைகளை உடையவராதலால் 

வீர: பகவான் 'வீர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'வீ கதி வ்யாப்தி ப்ரஜன காந்த்யஸனகாதனேஶு' 'வீ' என்ற சொல்லிற்கு செல்லுதல் (கதி), பரவுதல் (வ்யாப்தி), படைத்தல் (ப்ரஜன), ஒளிர்தல் (காந்தி), எறிதல் / வீசுதல் (அஸன), உண்ணுதல் (காதனேஶு) என்ற பொருள்கள் 

இதி தாதுபாடாத் தாது பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

'வீ' என்ற சொல்லிற்கு செல்லுதல், பரவுதல் (வ்யாப்தி), படைத்தல் (ப்ரஜன), ஒளிர்தல் (காந்தி), எறிதல் / வீசுதல் (அஸன), உண்ணுதல் (காதனேஶு) என்ற பொருள்கள் தாது பாடத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு செல்லுதல் (கதி) முதலானவைகளை உடையவராதலால் பகவான் 'வீர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாது பாடம்: வினைச்சொற்களின் (Verbs) மூல வடிவிற்கு தாது என்று பெயர். இந்த தாது சொற்களுக்கு பற்பல பொருள்கள் உண்டு. இவற்றை கூறும் பகுதிக்கு தாது பாடம் என்று பெயர்.

659. அனந்தாய நம:

வ்யாபித்வான்னித்யத்வாத் எங்கும் பரந்திருப்பதாலும் (வ்யாபித்வாத்), என்றும் இருப்பதாலும் (நித்யத்வாத்), 

ஸர்வாத்மத்வாத் எங்கும் (அனைவரின் ஆன்மாவாக) இருப்பதாலும் 

தேஶத: இடத்தாலும் 

காலதோ காலத்தாலும் 

வஸ்துதஸ்ச வாஸ்து (பொருளினாலும்) 

அபரிச்சின்ன: அளவிடமுடியாதவர் 

அனந்த: பகவான் 'அனந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் / அனைத்தின் ஆன்மாவாக இருப்பதால் பகவான் எங்கும் பரவியிருக்கிறார். அவரை எந்த ஒரு இடத்தைக் கொண்டு அவரை அளவிட இயலாது, காலத்தால் அளவிட முடியாது, ஒரு குறிப்பிட்ட வஸ்துவால் அவரை அளவிட முடியாது. ஆதலால், பகவான் 'அனந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

'ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம' (தைத்ரீய உபநிஶத்  2.1)

தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: பரப்ரஹ்மம் என்றுமுள்ளது, அறிவு மயமானது, வரையறுக்கப்படாத தன்மையை உடையது.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

'கந்தர்வாப்ஸரஸ: ஸித்தா: கின்னரோரகசாரணா: |

நாந்தம் குணானாம் கச்சந்தி தேனானந்தோயமவ்யய: ||' (ஸ்ரீவிஶ்ணு புராணம் 2.5.24)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: கந்தர்வர்கள், அப்ஸரஸுகள், ஸித்தர்கள், கின்னரர்கள், நாகங்கள், மற்றும் சாரணர்கள் எவரும் அழிவற்ற பரம்பொருளான பகவானுடைய குணங்களின் எல்லைகளை அறிந்ததில்லை. எனவே அவர் 'அனந்தன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி விஶ்ணுபுராணவசனாத்வா அனந்த: | இந்த விஶ்ணுபுராண கூற்றின்படி பகவான் 'அனந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

660. தனஞ்ஜயாய நம:

யத்திக்விஜயே எவர் திக்விஜயத்தில் 

ப்ரபூதம் நிறைய 

தனம் செல்வத்தை 

அஜயத்தேன வென்ற 

தனஞ்ஜய: பகவான் 'தனஞ்ஜய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

அர்ஜுன: அர்ஜுனனாக இருப்பவர்.

திக்விஜயத்தில் நிறைய செல்வத்தை வென்ற அர்ஜுனனாக இருப்பவராதலால் பகவான் 'தனஞ்ஜய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'பாண்டவானாம் தனஞ்ஜய:' (ஸ்ரீமத்பகவத்கீதை 10.37)

ஸ்ரீமத்பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: பாண்டவர்களில் தனஞ்ஜயன்.

இதி பகவத்வசனாத் | இது (ஸ்ரீமத்பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

அர்ஜுனனின் திக்விஜயம்: யுதிஷ்டிரன் தலைமையில் கண்டவப்ரஸ்தத்தை ஆண்ட பாண்டவர்கள் ராஜஸூய யாகம் செய்ய முடிவெடுத்தனர். அதற்கு செல்வத்தை சேகரிக்க ஒவ்வொரு பாண்டவ சகோதரர்களும் ஒவ்வொரு திக்கில் திக்விஜயம் செய்தனர். அவ்வாறு, வடதிசையில் திக்விஜயம் செய்த அர்ஜுனன் பல நாட்டு மன்னர்களிடமிருந்து பொருள் திரட்டினான். எனவே அவன் தனஞ்ஜயன் என்று அழைக்கப்படுகிறான்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!