21. மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||
இந்த ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
189. மரீசி:, 190. தமன:, 191. ஹம்ஸ:, 192. ஸூபர்ண:, 193. புஜகோத்தம: |
194. ஹிரண்யநாப:, 195. ஸுதபா:, 196. பத்மநாப:, 197. ப்ரஜாபதி: ||
அவற்றில் சில திருநாமங்களை இன்று அனுபவிக்கலாம்.
191. ஓம் ஹம்ஸாய நம:
அஹம் ஸ இதி 'நானே அவர்' (நானே ப்ரஹ்மம்) என்று
தாதாத்ம்யபாவின: தன்னுடைய ஆத்ம பாவனையில் இருப்பவரின்
ஸம்ஸாரபயம் ஹந்தீதி பிறவி பயத்தை போக்குவதால்
ஹம்ஸ: பகவான்
'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நானே பரப்ரஹ்மம் என்ற ஆத்ம பாவனையில் இருப்பவரின் ஸம்ஸார பயத்தைப் போக்குவதால் (போக்கி, முக்தி அளிப்பதால்) பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (அஹம்ஸ: என்னும் இடத்தில்) ஹம்ஸ: என்ற பெயர் ப்ருஶோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.
ஹந்தி கச்சதி 'ஹந்தி' என்றால் செல்வது என்று பொருள்
ஸர்வஶரீரேஶ்விதி வா அனைத்து உடல்களுக்குள்ளும்
ஹம்ஸ: பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, அனைத்து உடல்களுக்குள் (அவற்றின் அந்தர்யாமியாய்) செல்வதால் பகவான் 'ஹம்ஸ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஹம் ஸ: ஶுசிஶத்'
(கடோபநிஷத் 2.5.2)
கடோபநிஷத்தில்
கூறப்பட்டுள்ளது: ஆகாயத்தில் சூரியனாக இருக்கிறது
இதி மந்த்ரவர்ணாத் | இந்த கடோபநிஷத் மந்திரத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.
192. ஓம் ஸுபர்ணாய நம:
ஶோபன அழகிய
தர்மாதர்ம ரூப தர்மம், அதர்மம் வடிவான
பர்ணத்வாத் இறக்கைகளை உடையவர்
ஸுபர்ண: பகவான்
'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முண்டகோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இரண்டு பறவைகள் (ஆத்மா, பரமாத்மா ஆகிய இந்த இரண்டு பறவைகளும் இந்த உடல் என்னும் மரத்தினுள் இருக்கின்றன).
இதி மந்த்ரவர்ணாத் | இந்த முண்டகோபநிஶத் மந்திரத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.
ஶோபனம் அழகிய
பர்ணம் இறக்கைகள்
யஸ்யேதி வா உடையவர் எவரோ அவர்
ஸுபர்ண: 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அழகிய இறக்கைகளை உடையவராதலால் பகவான் 'ஸுபர்ண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு பொதுவாக அழகிய இறக்கைகளை உடையவர் என்று கூறியிருந்தாலும், ஆதிசங்கரர் தனது ஸ்ரீமத்பகவத்கீதையின் மேற்கோளினால், பகவான் பறவைகளும் கருடனாய் இருப்பதைக் குறிக்கிறார்.
'ஸூபர்ண: பததாமஸ்மி' (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)
ஸ்ரீ பகவத்கீதையில்
கூறப்பட்டுள்ளது: பறவைகளில் கருடன்
இதி ஈஶ்வரவசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ
கிருஷ்ணரின் கூற்றாகும்.