ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

ஸ்ரீ ராம ஜெயம்...

ராம நாமம் தாரக மந்திரம். இறக்கும் தருவாயில் இருக்கும் உயிர்களையும் மீட்க வல்ல நாமம். காசியில் இறந்தால் முக்தி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏன்? காசியில் இறக்கும் ஜீவர்களின் காதில் அந்த காசி விஸ்வநாதரே ராம நாமத்தை ஓதி அவர்களை முக்தி மார்கத்தின் வழி அனுப்புகிறார். 

இன்று ராம நவமி (31-Mar-12). இந்த நன்னாளில் ராம நாம மகிமையை பற்றி மகான்கள், ஆச்சார்யர்கள் மற்றும் ஆன்றோர்கள் கூறியுள்ளதை படித்து மகிழ்வோம்.

"கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?" - திருவாய்மொழி 7.5.1 

கம்ப இராமாயணம் பால காண்டம் திருவவதாரப் படலம்:
கரா மலையத் தளர் கை கரி எய்த்தே 
'அரா அணையில் துயில்வோய்' என அந்நாள்
விராவி அளித்து அருள் மெய்ப் பொருளுக்கே
'இராமன்' என்று பெயர் ஈர்ந்தனன் அன்றே

கம்ப இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் வாலி வதை படலம்:
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, "இராமன்" என்னும்
செம்மை சேர் நாமம் ...

சங்கீத மூர்த்தி மகான் தியாகராஜர்:
நிதி சால சுகமா , ராமுனி சந்நிதி சேவ சுகமா?
நிஜமுக பல்கு மனஸா....

ஒ என் மனமே! உண்மையை கூறுவாய். சுகம் எதில் உள்ளது? பணத்திலும் நவநிதியிலுமா அல்லது இராமனின் சந்நிதியில் சேவை செய்வதிலா?

வால்மீகி ராமாயணம் பால காண்டம் 18வது  ஸர்கம் - இராமன் திருவவதாரம்
"தத: ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ
நக்ஷத்ரே அதிதி தைவத்யே ஸ்வ உச்ச சன்ஸ்தேஷு பஞ்சஷு 
க்ரஹெஷு கர்கடே லக்னே வாக்பதே இந்துனா ஸஹ 
ப்ரோத்யமானே ஜகன்நாதம் சர்வலோக நமஸ்க்ருதம் 
கௌசல்யா அஜனயத் இராமம் ஸர்வ லக்ஷன சம்யுதம்" 

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண க்ரமத்தில் வரும் ஸ்லோகம்:
ஈஸ்வர உவாச:
 ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே

வால்மீகி ராமாயணம் பால காண்டம் முதல் ஸர்கம்:
வால்மீகி மகரிஷி நாரதரை பார்த்து பல கேள்விகள் கேட்கிறார். யார் உத்தமன்? யார் உண்மை, தர்மத்தின் வழி நடந்தவர்? குணவான் யார்? நன்னடத்தை கொண்டவர் யார்? வித்வான் யார்? சாமர்த்தியசாலி யார்? கோபத்தை அடக்கியவர் யார்? பொறாமை இல்லாதவர் யார்? தேவர்களும் அஞ்சும்படி வீரம் கொண்டவர் யார்?... இந்த அணைத்து கேள்விகளுக்கும் நாரதர் அளிக்கும் விடை, "நீங்கள் கேட்கும் இந்த குணங்கள் அனைத்தும் ஒருவரிடம் இருப்பது என்பது துர்லபமானது. ஆனாலும் இவை அனைத்தையும் கொண்ட ஒருவரை பற்றி என் தந்தை பிரம்மாவிடம் இருந்து அறிந்துள்ளேன்"

இக்ஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனை: ஸ்ருத:
நியத ஆத்மா மஹா வீர்யோ  த்யுதிமான் த்ரிதிமான் வஷி ||
புத்திமான் நீதிமான் வாங்க்மி ஸ்ரீமான் சத்ரு நிபர்ஹன:
விபுலாம்சோ மஹா பாஹு: கம்பு க்ரீவோ மஹா ஹனு: ||
மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூட ஜத்று அரிந்தம:
ஆஜானு பாஹு: சுஷிரா: சுலலாட: சுவிக்ரம ||
ஸம ஸம விபக்தாங்க: ஸ்நிக்த வர்ண பிரதாபவான்
பீன வக்ஷ விஷாலாக்ஷோ லக்ஷ்மீவான் சுப லக்ஷண: ||
தர்மஞ: சத்ய சந்த: ச ப்ரஜாநாம் ச ஹிதே ரத:
யஷஸ்வீ ஜ்ஞான சம்பன்ன: சுசி: வஷ்ய: சமாதிமான் ||
பிரஜாபதி ஸம: ஸ்ரீமான் தாதா ரிபு நிசூதன:
ரக்ஷிதா ஜீவலோகஸ்ய தர்மஸ்ய பரி ரக்ஷிதா: ||
ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்ய ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா
வேத வேதாங்க தத்வஞ்யோ தனுர் வேதே ச நிஷ்டித: ||
ஸர்வ சாஸ்த்ரார்த்த தத்வஞ்யோ ஸ்ம்ரிதிமான் பிரதிபானவான்
சர்வலோக ப்ரிய சாது: அதீனாத்மா விசக்ஷன ||
சர்வதா அபிகத: சத்பி: சமுத்ர இவ சிந்துபி:
ஆர்ய: சர்வசம: ச ஏவ சதைவ ப்ரிய தர்ஷன: ||
ஸ ச சர்வ குணோபேத: கௌசல்யா ஆனந்த வர்தன:
சமுத்ர இவ காம்பீர்யே தைர்யேன ஹிமவான் இவ||
விஷ்ணுனா சத்ருஷோ வீர்யே சோமவத் ப்ரிய தர்ஷன:
காலாக்னி சத்ருஷ: க்ரோதே க்ஷமயா ப்ரித்வீ ஸம: ||
தனதேன ஸம: த்யாகே சத்யே தர்ம இவாபர:
தம ஏவம் குண சம்பன்னம் ராமம் சத்ய பராக்கிரமம்||

இந்த ஸ்லோகங்கள் ஸ்ரீ ராமனின் கல்யாண குணங்களை வர்ணிக்கின்றன. இவற்றிற்கு பொருள் எழுதுவதற்கு கூட எனக்கு தகுதி இல்லை. எனவே அடியவர்களை தக்க குரு மூலமாக இவற்றின் பொருளை உணர்ந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். இவற்றுள் ஒரு குணமாவது நம்மிடம் தங்கும்படி அந்த ராமபிரான் இன்று அருள் புரியட்டும்!!!